Saturday, 26 December 2020

Piriyaa Vidai part-5

                                         பிரியா விடை -5

தமிழாசிரியரும்  அவர்  மகளும்  பேசுவதைக்  கேட்டு 
உள்ளே  நுழையாமல்  வாசலில்  நின்றேன் 

தமிழாசிரியர்  தன்  மகளைப்  பார்த்து ,
"உதயணனைப்   பற்றி  என்ன  நினைக்கிறாய் ?"
என்று  கேட்க   

(உதயணன்  வேறுயாருமல்ல  நான்  தான்  நானேதான்)

"கவிதையைப்   பேசி  பேசி  காலத்தை 
வீணாக்கும்  பொறுப்பில்லை 
இளைஞன்  
-இதற்கு  மேல்  என்னப்பா  சொல்ல "

என்று  சொல்லும்  மகளைப்பார்த்து  ஆசிரியர் 

"அவனுக்கும்  ஒரு  நல்ல  வேலை  கிடைக்கும் 
அவன்  மிக  நல்லவன் 
ஆண்டவன்  அவனை  கை விட மாட்டான்"

கேட்டுக்கொண்டிருந்த 
 என்  கண்ணில்  கண்ணீர்  சுரந்தது 

நான்  உள்ளே  செல்லாமல் 
வந்த வழியே  திரும்பி விட்டேன்  
மானசீகமாக  தமிழாசிரியரிடம்  விடைபெற்றேன் ..

வேலைக்  கிடைத்த மகிழ்ச்சியை  தெரிவித்து விட்டு
மகளைப் பற்றி  பேசத்தான்  ஆவலோடு சென்றேன் 

நான்  அவளிடம்  எதிர்ப்பார்த்தது  அவள்  காதலை 
அவளோ  என்னிடம்  எதிர்ப்பார்த்தது  ஒரு 
பாதுக்காப்பான  வேலையை 

அதை  யார் வேண்டுமானாலும்  தரலாம் 

அதற்காக  அவள் மீது  எனக்கு  கோபம்  இல்லை  

கண்டதும்  காதல்  என்ற  உணர்ச்சி  வேகத்தில் 
வேலை  இல்லாத  இளைஞனை  ஆசைப்பட்டு 
 காலமெல்லாம்  கவலைப்படும் 
 அப்பாவிப்பெண்  அவளல்ல  

அது வரையில்  மகிழ்ச்சியே !

அவளிடமிருந்து  பிரியா  விடை பெரும்  உதயணன் 

பிரியா விடை முற்றும் ...

----த.சத்தியமூர்த்தி 

 

Saturday, 19 December 2020

Piriyaa Vidai part-4

 பிரியா விடை -4

முதுகலைப்   பட்டம்  பெற்ற  இளைஞன் அந்த  
ஊரிலேயே  நான்  ஒருவன் தான்

வேலைத்  தேடி  கிடைக்காமல்  அலுப்போடு 
ஊர்  வந்து  சேர்ந்தவன் ,
மீண்டும்  வேலை  தேடி , நகரம்  செல்ல 
புறப்பட்டப்  போது  தான்  

தமிழாசிரியர்   பெண்ணவளைச்  சந்திக்கும் 
 வாய்ப்பு  பெற்றேன்

தமிழாசியர்  ஆசிரியர்  பணியோடு  மாலையில்  
ராமாயணச்  சொற்பொழிவை 
 பாராயணம்  செய்துவந்தார்

தமிழ் சொல்லும்  அழகு  கேட்டு 
கதையோடு  ஒன்றிப்போனேன் 

அவரோடு  இலக்கியத்தைப்பற்றி 
  மணிக்கணக்கில்   பேசி  மகிழ்ந்தேன்   

தமிழறிஞர் என்ற  காரணத்தால் 
உயிராக  மதித்தேன் 

நான்  எழுதும்  கவிதைக்கெல்லாம்  
மதிப்புரை   எழுதும்  அளவிற்கு  
குருவாகப்   பார்த்தேன் 
 
அவர்  வாயார  பாராட்டிய போதெல்லாம்  
மனமார  மகிழ்தேன் 

மகளை  மணமுடித்து  கொடுத்தவுடன் 
தமிழாராச்சியில்  முழுநேரம் 
 இறங்கப்போவதாக  சொல்லக்கேட்டேன் 

--இதற்கிடையில் 
பூங்கவனம் கிராமத்திற்கு  அதிகாரியாக  
வேலைக்கிடைத்த  மகிழ்ச்சியில்  
தமிழாசிரியர்  இல்லம்  நோக்கி 
அரசு  ஆணையோடு   புறப்பட்டேன் ...

பிரியா விடை  தொடரும் 

-----த .சத்தியமூர்த்தி  

Saturday, 12 December 2020

Piriyaa Vidai part-3

பிரியா விடை -3

என்  பதில்  கேட்டு  கொஞ்சம்  இறங்கி  வந்த  கோதையவள் , 
புதிதாக  ஊருக்கு  வந்திருக்கும் 
தமிழாசிரியர்  மகள்  நான் .. என்று சொல்லிச்சென்றாள் 

எனைச்சுற்றி  ஓர்  தனிமை   சுழல்வதை  வெறுத்து 
நானும்  எழுந்து  மெல்ல  நடந்தேன் .. ஊர்  நோக்கி 

கவிபாடும்  பித்தன் , வேலை  வெட்டி  அற்றவன் , 
ஊரில்  உள்ளோர்  எனக்கு  வைத்த  செல்லப்  பெயர்கள் ..

ஊரின்  பெயரோ  பஞ்சவர்ணச்சோலை  
பெயரில்  தான்  சோலையே  தவிர 
 ஊரில்  தென்பட்டதோ 
எங்கும்  பஞ்சம்  தான் ...

ஊருக்கு  உணவளிக்கும்  விவசாய  குடிகள் 
கூலிவேலை  செய்து  வயிறு  பிழைக்கும் 
 கொடுமை நடந்தது.

மூன்று  வருடம்  தொடர்ந்து  மழை  பொய்த்ததால் 
நெல்  விளையும்  வயலெல்லாம்
  முட்புதராய்  மாறியது.

அதிகாரத்தில்  உள்ளோர்  அடுக்கடுக்காய்  
மரங்களை  வெட்டி  விட்டால் , 
மணலை  அள்ளி  விட்டால் ,

அவர்கள்  பை  வேண்டுமானால்   நிரம்பலாம்
மழை  எப்படி பெய்யும் ?

புயல்  வந்தால்  மட்டும்  தான் 
மழை  பெய்யும்  என்ற  
நிலைக்கு  நம்மை  தள்ளி  விட்டார்கள் ..

பிரியா விடை தொடரும் ...

--------த .சத்தியமூர்த்தி  

  

Saturday, 5 December 2020

Piriyaa Vidai part-2

பிரியா  விடை -2

"சற்று  முன்பு  கேட்ட  பாடல்  நீ  பாடியதோ ?
சாந்தமுடன்  அவளை  நோக்கி  நான்  கேட்டேன் 

நாணமது  முகத்திரையாய்  வந்து  விழ, 
மின்னலது  பார்வையென  வந்து  மோத, 
தித்திக்கும்  பாகாக  வார்த்தை   வந்து  விழ,

அலட்சியமாய்  எனைப்பார்த்து 
 அழகாக  அவள்  சொன்னாள்..

   தெரிந்து  கொண்டு  என்ன  பயன் ?

பாடலை  ரசித்தீரா?
பாடலை  பாடிய  எனை  ரசித்தீரா ?

தனிமையிலே, ஒருமையிலே  வரும்
மயில்  எந்தன்  வழி  மறித்து  
மடமையாக  கேள்வி  வேறு  
கேட்பது  தான்  தமிழ்  பண்போ  ?

நான்  கேட்ட  ஒரு  கேள்விக்கு 
அடுக்கடுக்காய்  அடுத்தடுத்து  பல  
கேள்விகளைக்   கேட்டு  நின்றாள் 
  
 "தவறாக  உனைப்பார்த்து  நான்  என்ன 
கேட்டு விட்டேன்"
பாடலையும்  ரசித்தேன்
பாடலுக்குரிய  உன்னையும்  ரசித்தேன் 

உன்  தமிழ் பண்பாட்டைக் கண்டு வியந்தேன் 

"நானொன்றும்  நீ  நினைப்பது  போல் 
காமுகன்  அல்ல !  கவிஞன்  

அழகை  ரசிக்க  ஆண்டவனால்  
அனுப்பப்பட்ட  தூதன் 

பிரியா விடை  தொடரும்...

------த .சத்தியமூர்த்தி  
 
 

Saturday, 28 November 2020

Piriyaa Vidai part-1

 பிரியா  விடை-1 

குயில்  கூவும்  சோலையிலே - என்  மனம் 
மகிழும்  வேளையிலே, 
இளைப்பாறக்  கண்ணயர்ந்தேன்

இதயத்தைத்  தொடும்  வகையில்  
இசையோடு  கலந்து வரும்
குரலோசை  தனைக்கேட்டு
  
குரல்  வந்த  திசை  நோக்கி
மெதுவாகத்தான்  நடந்தேன் 
அருகில்  நான்  சென்றவுடன், 

அதுவரையில்  வந்த  குரலோசைக் கேட்கவில்லை 
ஒருவரையும்  காணவில்லை - கால்  கடுக்க 
சோலை முழுதும் நான்  நடந்து  பார்த்தாலும் 
குரலுக்குரியவளை  பார்க்க  முடியவில்லை 

களைப்போடுக்  கண்மூடி  நிழலோரம்  நான்  கிடக்க 
தென்றலது  மெல்ல வந்து 
தேகமதை  தீண்டுவது  போல் ,

பசியோடு  இருந்தவனின்  பார்வை  முன் 
பழுத்த  மரம்  பாதையிலே முளைப்பது போல், 

தண்ணீருக்கு  அலைந்தவனின்  பார்வை  முன் 
தடாகமொன்று  தட்டுப்பட்டது  போல் ,

கடும்  வெயிலில்  நிழலுக்கு அலைந்தவன்  முன் 
பந்தலொன்று  பாதையிலே  தோன்றியது  போல், 

உள்ளங்கவர்ந்த  பெண்ணொருத்தி  மெல்ல  மெல்ல
என்  சிந்தையெல்லாம்   நிறைந்தது  போல்,

கண்டு வந்த  கனவொன்று  கண்  முன்னே 
உண்மையென  நேரில் வந்து  தோன்றியது போல் ,

ஆவலோடு அலை  பாய்ந்த  என்  கண் முன்னே 
அழகான  பெண்ணொருத்தி  அவதரித்தாள் !

பிரியா விடை  தொடரும் ....

----த.சத்தியமூர்த்தி  
  

Saturday, 21 November 2020

Thandanai

தண்டனை 

வணிகம் என்ற  பேராலே கொள்ளை  இலாபம்  அடித்து 
 பணம்  புரட்டும்  ஒரு சில  திருட்டுக்கூட்டம் 

இன்று   மாளிகையில்  குடியிருந்தாலும்  
காத்திருக்கு கை  விலங்கு 
இத்தகைய  கயவர்க்கு ..

பொருளை  எல்லாம்  பதுக்கி  வச்சி 
நேரம்  பார்த்து  விலையை  ஏற்றி  

ஏழை  மக்கள்  வயிற்றில்  அடிக்கும் 
வியாபாரத்திருடருக்கு
காத்திருக்கு  கை விலங்கு...

கலப்படங்கள் செய்வதையே 
தொழிலாகக்கொண்டு  

சமூகத்தைச்  சீரழிக்கும்  
சதிகாரக்கூட்டத்திற்கு 
சத்தியமாய்  தண்டனை  உண்டு...

எடைக்கல்லில்  மோசடி செய்து 
ஏமாற்றும்  வித்தையை  எப்படி 
வணிகம்  என்று  சொல்வது ?

நேர்மையாய்  வியாபாரம்  செய்தாலே 
நிறைய  இலாபம்  நிச்சயம்  உண்டு ..  

பரம்பரையாய்  தொடர்ந்து  இங்கு 
பரம்பரியமாய்  வணிகம்  செய்வோரும்  உண்டு..

அமைதியாய்  இன்றிருக்கும்  
அப்பாவி  பொது  ஜனங்கள்
 
தாங்கள்  ஏமாற்றப்படும் 
விவரமறிந்து  எழுந்துவிட்டால் 

அனல்  கக்கும்  எரிமலையாய் 
ஆர்ப்பரிக்கும்  கடலலையாய் 
சுழன்றடிக்கும்  சூறாவளியாய் 

மாறி விடும் கட்டம்  வந்தால்  
மாட்டிக்கொள்ளும்  திருடர் கூட்டம்
கூண்டுக்குள்  அடைபடும்.....

-----த .சத்தியமூர்த்தி    

Saturday, 14 November 2020

Naattu Nadappu-part7

நாட்டு  நடப்பு -7

இன்று  இனிய  தீபாவளி  திருநாள் 
இன்ப  தீபப்  பெருநாள் 

அசுரனை  அழித்து  அமைதி 
திரும்பிய  பொன்னாள் 

வறுமை  ஒழிந்து  வசந்தம்  வீச  
கட்டியம்  கூறும்  நன்னாள் 

கடைக்கோடி  மக்களும்  கட்டாயம் 
கொண்டாட  வேண்டிய  திருநாள் 

இல்லாமை  என்பது  இல்லாது  போக 
இருப்பவர்கள்  பகிர்ந்து  கொடுக்க  வேண்டிய  பெருநாள்
 
ஏழ்மையை  விரட்டி  ஏற்றத்தை  நோக்கி 
சமூகம்  பீடு  நடை  போட  துவக்க நாள் 

மனதில்  தோன்றும்  அசுர  எண்ணங்களை 
பொசுக்க  வேண்டிய  பொன்னாள் 

அனைவரையும்  சமமாய்  மதித்து  நடக்க
 ஆரம்பமாகும்  பெருநாள் 

பசியோடு  யாரும்  படுத்திடாமல் 
பார்த்து  உதவ  வேண்டிய  திருநாள் 
 
ஒற்றுமையோடு  மக்கள்  எல்லோரும் 
ஒருங்கிணைந்து  வாழத்துவங்கும்  நன்னாள் 

யாரும்  யாரையும்  ஏமாற்றாமல் 
 மனசாட்சியோடு  வாழ  ஆரம்பிக்கும்  பெருநாள் 

உழைப்பின்  மூலம்  உலகையாளும்  
சூத்திரம் சொல்லும்  திருநாள் 

எம்  மக்கள்  எல்லோர்க்கும்  
இனிய  தீபாவளி  நல்வாழ்த்துக்கள் ..


---த.சத்தியமூர்த்தி 
  

Saturday, 7 November 2020

Naattu Nadappu-part6

நாட்டு  நடப்பு -6 

தேர்தலின்  முடிவை  இனி  பணமோ , ஜாதியோ 
மதமோ  முடிவு  செய்யக்கூடாது - அதற்கு

குறைந்தது  70 - 75 சதவீதம்  வாக்குப்பதிவை 
நாடெங்கும்  நடத்திக்காட்டுங்கள் 

மக்களிடமிருந்து  உண்மையான  மக்களின் 
 பிரதிநிதிகளை  தேர்ந்தெடுங்கள் 

இனி  யாராலும்  எங்களைப்  பிரித்தாள்வதோ 
விலைகொடுத்து வாங்குவதோ  நடக்காது 
என்று  நடந்துக்காட்டுங்கள் 

ஆதிக்க  சக்திகளை  வீழ்த்துவதற்கு   ஆயுதமாக
உங்கள்  வாக்குரிமையைப்  பயன்படுத்துங்கள் 
 
உண்மையான  ஜனநாயகம்  இந்தியாவில்  மலர்ந்ததென்று 
உலகிற்கு    உரத்தக்குரலில்   எடுத்துச்சொல்லுகள்

வறுமைக்கு  விடைகொடுத்து  புது 
 வாழ்வுக்கு  வழி  காணுங்கள் 

மாநில  உரிமைக்குக்  குரல் கொடுத்து 
  மக்களிடையே  விழிப்புணர்வை  ஏற்படுத்துங்கள் 

பரவட்டும்  வெளிச்சமிங்கு  மக்களின்  
அறியாமை  இருள்  கிழித்து  

ஒழியட்டும்  முதலாளித்துவ  
மனசாட்சியற்ற  மார்க்கமிங்கு

தோன்றட்டும்  மக்களிடையே  
எழுச்சியென்னும்   புது  வெள்ளம் 

நாட்டு  நடப்பு  தொடரும்...

-----த .சத்தியமூர்த்தி 

Saturday, 31 October 2020

Naattu Nadappu-part5

நாட்டு  நடப்பு -5 

மதத்தாலே  பிரிந்து  நின்று 
இனத்தாலே  மாறுபட்டு
  
ஜாதிக்கொரு  சங்கம்  வைத்து 
வீதிக்கொரு  கூட்டம்  போட்டு 

நாளுக்கொரு  போராட்டம் 
நாடெங்கும்  நடத்திக்கொண்டு 

இந்தியாவின்  ஒற்றுமையை 
இமையமெனப்   புகழ்வதுண்டு 

ஒன்று பட்ட இந்தியாவென்பது 
ஒருமித்த  மனமுடைய  மக்களின்
  ஒற்றுமையை  ஓங்கி  உலகுக்கு  பறைசாற்றுவதே  

இனம்கடந்து , மொழிகடந்து , மதங்கடந்து 
இதயத்தால்  ஒன்று படும்  பொன்னாலே 

இந்தியாவின்  வளர்ச்சிக்கி 
 வித்திடும்   திருநாளாகும்

இராமன்  ஆண்டால்   என்ன ? 
இராவணன்  ஆண்டால்  என்ன ? 
என்று  ஒரு தலைமுறை  ஏமாந்தது  போதும்  

இளைய  தலைமுறையே  பட்டிதொட்டியெல்லாம் சென்று வாக்குப்பதிவின்  அவசியத்தை  உணர்த்துங்கள் 

அனைவரும்  வாக்களிப்பதின்  மூலமாகத்தான் 
வருங்கால  தலைமுறையின்  தலையெழுத்தை 
மாற்றமுடியும் 

அருகில்  உள்ள  வாக்குச்சாவடிக்கு  
அனைவரும்  கட்டாயம்  செல்லுங்கள்

அலட்சியமாய்  இல்லாமல்  ஆற்ற வேண்டிய
ஜனநாயக  கடமையை  தவறாமல்  செய்யுங்கள் 

நாட்டு  நடப்பு  தொடரும் ..

--------த .சத்தியமூர்த்தி     

 

    






Saturday, 24 October 2020

Naattu Nadappu-part4

நாட்டு  நடப்பு-4
  
ஒட்டிய  வயிறோடும்  
ஒடுங்கிய  உடலோடும்
 
ஏங்கிய விழியோடும் 
ஏழைகள்  பிணியோடும் 

பாதையின்  ஓரத்தில்  
பல  காலம்  கிடக்கின்றார் 

யார்  இதற்குப்  பொறுப்பு ?
யார்  இவர்களைப்  பார்ப்பது ?

சமதர்ம  சமுதாயம் 
பொதுவுடைமை  உபதேசம் 

சோஷலிச  சித்தாந்தம் 
கம்யூனிஸ  வேதாந்தம் 

ஜனநாயக  தத்துவமெல்லாம் 
பேச்சளவில்  இனிக்கிறது 
எழுத்தளவில்   இருக்கிறது 
ஏட்டளவில்  மணக்கிறது 

முதலாளித்துவ  மார்க்கம்  மட்டும்  
நாட்டளவில்  
நடைமுறையில் 
காணப்படுகிறது 
      
இந்தியாவின்   இருப்பு  முழுதும்
இருபது  பண  முதலைகளிடம் 
முடங்கிவிட்டது 

தேர்தல்  காலங்களில் 
 எல்லா  கட்சிகளும்
இவர்களிடம்  கையேந்துகிறது 

தேர்தெடுக்கும்  அரசாங்கம்  பதிலுக்கு
பல  சேவைகளையும்  
சலுகைகளையும்
 கொடுக்கிறது

இந்தியாவை  மறைமுகமாய் 
பண  முதலைகளே  
ஆள்கிறது 

   நாட்டு  நடப்பு  தொடரும் .....

---த .சத்தியமூர்த்தி    








Saturday, 17 October 2020

Naattu Nadappu-part3

 நாட்டு  நடப்பு --3

ஒரு  ரூபாய்   சாதனைக்கு 
ஒன்பது   ரூபாய்   விளம்பரம் 

கறை  வேட்டிக்  கட்டிக்   கொண்டு 
திரு  வீதி  ஊர்வளம்   

 ஆட்சி   அலுவல்களில்  
கட்சிக்காரன்   தலையீடு 

சுதந்திரமாய்   முடிவெடுக்க   முடியாமல் 
அதிகாரிகளின்  திண்டாட்டம் 

 அதிகாரிகள்  மட்டத்தில்  லஞ்சத்தை   ஆரம்பித்து 
அரசியல்வாதிகள்   தங்களை  வளர்த்துக் கொண்டார்கள் 

அரசியலில்  வந்ததாலே  
வசதி  வாய்ப்புகள்   பெறுகிப்போச்சு

எழுதப் படிக்க  தெரியலேன்னாலும் 
ஏழு  தலைமுறைக்கு  சொத்தாச்சி 

பட்டிமன்ற  விவாதங்கள்  
பகட்டான  விளம்பரங்கள் 
வரவேற்பு  வளையங்கள்    
வான  வேடிக்கைகள்  

மக்களின்  வரிப்பணம் 
பல  வழியில்  பாழாச்சு 

குலத்தொழிலை  ஒழித்துக் கட்ட 
போராடி  வெற்றி  பெற்றோர்

குலத்தொழிலில்  விதி விலக்காய்
அரசியலை  மட்டும்  விட்டார் 

வாரிசுவை  உருவாக்கி  
அரசியலில்  வரவழைத்தார்

அதிகாரத்தில்  அமர வைத்து
அலங்கரித்து  அழகு  பார்த்தார்

 நாட்டு  நடப்பு  தொடரும் ...

------த .சத்தியமூர்த்தி  

  
   

Saturday, 3 October 2020

Naattu Nadappu-part2

நாட்டு  நடப்பு -2

அனுபவ   அறிவு   இல்லை   
ஆளுகின்ற   திறமை   இல்லை 

விஷய   ஞானம்   ஏதுமில்லை 
விளம்பரப்   பிரிய முண்டு 

திறமையான   திட்டமில்லை 
தில்லு   முல்லுவுக்கு   குறைவில்லை 

பொது வாழ்வில்  ஒழுக்கமில்லை 
போர்ஜரிக்கு   அளவுமில்லை 

லட்சியத்திற்கு   வெற்றியில்லை 
லஞ்சத்துக்கு  பஞ்சமில்லை 

கொள்கைக்கு  மதிப்பில்லை 
கொள்ளைக்கு  முடிவில்லை

புத்தன்  பிறந்த  மண்ணில்  இன்னும் 
புனிதம்  வந்து  கலக்கவில்லை 

காந்தி  கண்ட   கனவு  பல 
காலம்  சென்றும்  மலரவில்லை 

தேசியவாதி  வேடம்  போட்டும் 
தேசம்  பற்றி  நினைவுமில்லை 

வருங்கால  தலைமுறையின் 
வாழ்வுக்கு  உத்திரவாதமில்லை 

அடிப்படைக்  கல்வி  கூட
கிடைப்பதற்கு  வசதியில்லை 

பட்டுச்சட்டை  போட்டு  தினம் 
பார்த்து  மகிழும்  ஆசையில்லை 

ஒட்டுப்  போட்ட  சட்டை  கூட 
ஒரு  சிலருக்குக்  கிடைப்பதில்லை 

 விருந்து  போல   உணவுண்டு  
செரிப்பதற்கு  மருந்து  உண்ணும் 
மேட்டுக்குடி  மக்களல்ல.. 

பசிப்பிணியைப்    போக்கிக்கொள்ள  
பழைய  கஞ்சி  கிடைத்தாலும்  
அமுதமென  கருதுகின்ற 
தெருவோர  பிரஜைகள்..  
 
நாட்டு  நடப்பு  தொடரும் .....

------த .சத்தியமூர்த்தி 
  

 

Sunday, 27 September 2020

Naattu Nadappu-part1

நாட்டு  நடப்பு  - 1

ஏழைகளின்    விழிகளிலே   
எத்தனையோ  சோகம் 

படிக்கின்ற  இளவயதில்  
உழைக்கின்ற  கூட்டம் 

கஞ்சிக்கும்  அல்லாடும் 
இளந்தளிர்களின்  தாகம் 

கொள்ளையரைக்  கோட்டையினுள் 
ஆள  விட்டதின்  சாபம் 

பட்டியலோ  நீள்கிறது 
கட்சிகளின்  சாதனைகள் 

பட்டினியால்  வாடுகின்ற 
பரதேசிக்  கோலங்கள் 

மாளிகையில்  மதுவோடும்  மங்கையோடும்  
அதிகாரத்தின்  கொட்டம் 

மண்  குடிசையிலே  விளக்கேற்ற 
எண்ணெய்க்கோ   பஞ்சம் 

நாளெல்லாம்  உழைத்தாலும் 
நியாயமான  கூலியில்லை 

உழைப்பதற்கு  முன்  வந்தும் 
திறனுக்கேற்ற  வேலையில்லை 

லாபத்தின்  பெரும்பங்கு 
 கார்ப்பரேட்  முதலாளிகளின்  கைகளிலே 

பாடுபடும்    தொழிலாளர்களின் 
குடும்பங்களோ    வறுமையிலே 

ஐந்து  ரூபாய்  திருடியவன் 
 அகப்பட்டால்   சிறை  வாசம்

ஐந்து  கோடி  திருடினாலும் 
அதிகாரவர்க்கம்  என்றால்  சுகபோகம் 

சட்டத்திற்கும்  தோன்றிவிடும் 
அவர்கள்  மீது  புது  பாசம் 

சட்டத்தையே  வளைத்து விடும்
அவர்களின்  அதிகாரம் 

நீதிதேவன்  மயங்கியதோ  
மீளாத  நித்திரையில்  

ஜாதி  மத  முத்திரைகள் 
ஜனங்களின்  முகத்திரையில் 
 
நாட்டு  நடப்பு  தொடரும் ........      

                                                                ------த .சத்தியமூர்த்தி 
 


Saturday, 19 September 2020

Elaiya Thalaimurai

இளைய தலைமுறை 

விடியல்  உதித்ததால்  வெளிச்சம்  வந்தது 
வசந்தம்  வந்ததால்  வாழ்வு   மலர்ந்தது  

அன்பு  பிறந்ததால்  அகிலம்  இணைந்தது 
ஆசை  துறந்ததால்  அமைதி  கிடைத்தது 

நல்லது  நடப்பதால்  நம்பிக்கை  துளிர்த்தது 
காலம்  கனிந்ததால்  நினைத்ததெல்லாம்  நடந்தது 

கவிதையின்  துடிப்பால்  எழிச்சி  பிறந்தது 
காதல்  மலர்ந்ததால்  உள்ளம்  இனித்தது 

மனைவி  அமைந்ததால்  மகிழ்ச்சி  வந்தது 
மழலை  இணைந்ததால்  கடமை  சேர்ந்தது
 
மக்களாட்சியால்  சுதந்திரம்  உருவானது  
மக்களின்  உழைப்பால்  நாடு  செழித்தது 

நாட்டின் வளமை மேட்டுக்குடிக்கு மட்டும் சொந்தமானது
தட்டிக்கேட்கவோ  தலைமையில்லாமல்  போனது 

தலைமையேற்க  இளைய  தலைமுறையே  வாருங்கள்
உழலற்ற சமூகத்தை  உங்களிடமிருந்து  துவக்குங்கள் 

ஏழையின்பால்  பற்று  வைத்து  உண்மையாய்  உழையுங்கள் 
நேர்மையாய்  நடந்து  உண்மையான  சுதந்திரத்தை  உறுதிப்படுத்துங்கள் 

கருணை  பிறப்பதால்  மட்டுமே  வறுமை  ஓழியும் 
கல்வியால்  மட்டுமே  சமதர்ம  சமுதாயம்  சாத்தியமாகும் 

வலிமையான  இந்தியாவை  உருவாக்க 
 தோளோடு  தோள்  சேருங்கள்  

நாடு  உங்கள் மேல் நம்பிக்கை  வைத்து  காத்திருக்கிறது 
நீங்கள்  நிமிர்ந்தால்  வானமும்  தொட்டுவிடும்  தூரம் தான் 

த .சத்தியமூர்த்தி             

  

Sunday, 13 September 2020

Dhevathai

தேவதை 

திருமகள்  அழகினில்  தினம்  மனம்  ஏங்கும் 
கலைமகள்  அருளால்  கவி  பல  பாடும் 
மலைமகள்  மலைத்திடும்  திருமகள்  அழகு 
மனமே  நீ  கொஞ்சம்  அவளிடம்  பழகு 

பண்ணிசை  பாடும்  அவளது  பாங்கு 
பாவையின்  உறவுக்கு  தினம்  தினம்  ஏங்கு 
ஏழிசை  பொழியும்  தேவியின்  வீணை  
ஏங்க  வைத்திடும்  கோதையின்  அழகு 

எண்டிசை  தோறும்  என்னவள்  தோற்றம்
 ஏனடி இன்று  உன்னிடம்  மாற்றம்  
அன்பு  நெஞ்சம்  இன்று  அழைத்திடும்  அழைப்பு 
நெஞ்சில்  ஆசை  இருந்தும்  ஏனிந்த  நடிப்பு 

கைப்பற்றத்  துடிக்கும்  காதலன்  நினைப்பு 
போதையேற்றுதடி  பாவை  உந்தன்  சிரிப்பு 
காணாத  போதெல்லாம்  கனவினில்  கிளர்ச்சி 
காண்கின்ற   போதினில்  மனதினில்  மகிழ்ச்சி 

கோதை  வாழ்ந்திடும்  ஊரெந்தன்  இதயம் 
மங்கையின்  வரவால்  மகிழ்ச்சியின்  உதயம் 
காணாத  வேளையிலே   என்மேலே  கவனிப்பு  
கண்டு  விட்டாலோ  எனை  பாராதது  போல்  நடிப்பு 

   காத்திருக்கு  ரொம்ப  நாளா  
கன்னிப்பொண்ணு  பூத்து  நின்னு  
பார்வைக்கது  கன்னிப்புள்ள  
பழக்கத்தில  பச்சப்புள்ள    

பரிசம்  போட  உள்ள  புள்ள 
பச்சரிசி  பல்லு  புள்ள  
மாலை  மாத்தி  தேதி  வச்சு 
மஞ்சம்  போட  வாரேன்  புள்ள
  
---த .சத்தியமூர்த்தி 

 


 

Sunday, 6 September 2020

Mathippu

மதிப்பு 

மாணவரின்  மதிப்பு  அவர்  வாங்கும்  மதிப்பெண்ணிலே 
அன்னையின்  மதிப்பு  மழலையை  ஈன்றெடுப்பதிலே 

வணிகனிர்   மதிப்பு  தராசின்  நேர்மையிலே 
நிறுவனத்தின்  மதிப்பு  மக்களின்  நம்பிக்கையிலே 

முதலாளியின்  மதிப்பு  அவரது  இரும்பு பெட்டகத்திலே 
தொழிலாளியின்  மதிப்பு  அவர்  சிந்தும்  வியர்வையிலே 

உழைப்பின்  மதிப்பு  அவர்  உயரும்  அந்தஸ்திலே 
பணத்தின்  மதிப்பு   அதை  கையாள்பவர்  திறமையிலே 

தங்கத்தின்  மதிப்பு  கல்யாண  சந்தையிலே 
தலைவனின்  மதிப்பு  தொண்டர்களின்  அபிமானத்திலே 

உழவனிர் மதிப்பு  அவர்  செய்யும்  உற்பத்தியிலே 
உண்மையின்  மதிப்பு  நீதி  வெல்வதிலே 

நல்லவனின்  மதிப்பு  அவனது  நடத்தையிலே 
நாட்டின்  மதிப்பு  மக்களின்  வருமானத்திலே 

கவிதையின்  மதிப்பு  ரசிக்கும்  ரசிகர்களின்  ரசனையிலே 
காதலின்  மதிப்பு  காதலர்களின்  மன  உறுதியிலே 

தமிழின்  மதிப்பு  தரணியெங்கும்  எதிரொலிப்பதாலே 
தமிழனின்  மதிப்பு  காதல் , மானம் , வீரத்தினாலே 

அழகின்  மதிப்பு  பார்க்கும்  பார்வையினாலே 
அன்பின்  மதிப்பு  கொடுத்து  உதவும்  தியாகத்தினாலே 

மதிப்பு  என்பது  குறியீடு  
அதுவே  நமது  வாழ்வின்  செப்பேடு 
பிறர்  மதிக்க  வாழ்வதே  வாழ்வியலின்  வரலாறு 
எல்லோரையும்  சமமாக  மதித்து  வாழ்வோம் 

----த .சத்தியமூர்த்தி  



  

Sunday, 30 August 2020

Vetriyen Ragasiyam

வெற்றியின்  இரகசியம்   

மண்ணை நம்பி பயிரு  இங்கே  செழித்து வளருதுங்க 
பெண்ணை  நம்பி  குடும்பம்  இங்கே  முன்னுக்கு  வருதுங்க 

மண்ணும்  பெண்ணும்  நல்லா  அமைஞ்சா  வாழ்க்கை  மின்னுங்க 
வாழுற  வாழ்க்கையை  ஊறு  மெச்சவே  வாழ்ந்து  பாருங்க  

இறைக்கிற  கிணறு  சுரக்குமுன்னு  சொன்னது  பொய்யில்லே
ஏழை  பாழைக்கு  உதவுவதாலே  கொஞ்சமும்  குறைவதில்லே 

படிப்பு  மட்டுமே  பரம்பரைக்கு  சொத்தா  சேத்து  வையுங்க 
பாழாப்போன  பணத்தாலே  மனசு  ரொம்ப  கெட்டுப்போச்சுங்க 

சத்தியம்  தான்  ஜெயிக்கும்னு  சந்ததிக்கு  சொல்லி  வையுங்க 
வருங்கால  தலைமுறை  நேர்மையோடு  நடக்கும்  பாருங்க 

விதியின்  பேரைச்  சொல்லி  மதியை  மழுங்கச் செய்வாங்க 
கர்ம  வினையென்று  பல  கதைகளைக்  கட்டி விடுவாங்க

பாவத்தின்  சம்பளமென்று  பழைய  பல்லவியைப்  பாடிச் செல்வாங்க
பத்தாம்  பசலியின்  பசப்பு  வார்த்தையை  ஒதுக்கி  தள்ளுங்க 

வெளியே  வந்தால்  வெற்றி  இருக்குது  
நம்பிக்கையோடு   புறப்பட்டு   வாருங்கள் 

செக்கு  மாடு  போலவே  செஞ்ச வேலையை  
திரும்ப  திரும்ப  செய்யாம  

கொஞ்சம்  மாத்தி  யோசித்து , திறமையைக்கூட்டி 
புதுசா  ஏதாவது  செஞ்சா  தான்   ஊறு மெச்சுங்க 

இது  தான்   உழைப்பின்  ரகசியங்க !
இதுவே  வெற்றியின்  ரகசியங்க !! 
   
----த .சத்தியமூர்த்தி  
       

Saturday, 22 August 2020

manasu

மனசு 

மனம்  ஒரு  காற்றாடி 
சதா  அலைந்துக்கொண்டே  இருக்கும்

மனம்  ஒரு  கற்பூரப்பெட்டகம் 
நினைவுகளை  நிரப்பிக்கொண்டே  இருக்கும் 

மனம்  ஒரு  குரங்கு 
ஒன்றிலிருந்து  ஒன்றிற்கு  தாவிக் குதிக்கும் 

மனம்  ஒரு  மாயக்கண்ணாடி  
உலகத்திற்கு  வெளிச்சம்  போட்டு  நம்மை  காட்டிக்கொடுத்துவிடும்  

மனம்  ஒரு  பம்பரம் 
நிலையாய்  இல்லாமல்  சுற்றிக்கொண்டே  இருக்கும் 

மனம்  ஒரு எந்திரம் 
எப்போதும்  இயங்கிக்கொண்டே  இருக்கும் 

மனம்  ஒரு  அதிசய  பூப்பந்து 
நம்மை  உதைத்துக்கொண்டே  இருக்கும் 

மனம்  ஒரு  வற்றாத  ஜீவ நதி 
எண்ணங்களை  ஆறாக  பெருக  விடும் 

மனம்  ஒரு  அழகிய  குதிரை 
நமக்கு  அடங்காமல்  ஓடிக்கொண்டே  இருக்கும் 

மனம்  ஒரு  அடங்காப்பிள்ளை 
தவறு  செய்ய  வைத்து  நம்மை  மாட்டி விடும்

மனம் ஒரு  கனவுக்கன்னி 
எட்டாததற்கு  கொட்டாவி  விடும் 

இக்கொடிய  மனதை  அடக்குவது  எப்படி ?

இருப்பதைக்கொண்டு  மகிழ்வுடன்  வாழ்வதாலும் ,
இல்லாதவர்க்கு  உதவுவதை  கடமையாக  கருதுவதாலும்,
ஆசைகளைப்   படிப்படியாக  குறைத்துக்கொள்வதாலும் ,
நல்ல  எண்ணங்களை  நாள்தோறும்  வளர்த்துக்கொள்வதாலும் 

நம்  மனதை  கொஞ்சம்  கொஞ்சமாக  
நம்  வழிக்குக் கொண்டுவந்து  அடக்கி விடலாம்    

மனதை  அடக்கி  மகிழ்வுடன்  வாழ்வோம்

---த .சத்தியமூர்த்தி 

  







Saturday, 15 August 2020

illam vantha azhagu mayil

இல்லம்  வந்த  அழகு  மயில் 

பார்த்து  வச்ச  மாப்பிள்ளை  தான் 
பக்கத்திலே  வந்து  விட்டால் 

சேர்த்து  வைத்த  ஆசையெல்லாம் 
செயல்  வடிவம்  ஆகுதடி 

நேத்து  வந்த  மாமன்  மேலே  
நினைப்பெல்லாம்  ஆனதாலே  

காத்திருந்த  கன்னிப்பூவும்  - அவன் 
கைப்பட்டு  கனிந்ததடி  

பொழுது  சாய்ந்த பின்னாலே 
மச்சான்  கூட  முன்னாலே  

போனதாலே  தன்னாலே  
மயங்கி  நிக்குது  பெண்புள்ளே 

விழியாலே  ஜாடை  பேசி 
மொழியாலே  காதல்  பேசி 

வளர்ந்து  நிற்கும்  அழகு  பொண்ணு சிரிக்குது 
 பாவம்  ஏதேதோ  எண்ணி  எண்ணி  ஏங்குது 

அன்று  உள்ளத்திலே  குடி  புகுந்த  உத்தமி
இன்று  இல்லத்திலே  விளக்கேற்றும்  பத்தினி 

என்றும்  எண்ணத்திலே  கலந்து விட்ட தாரகை 
என்  நெஞ்சமெல்லாம்  இனிக்கின்ற  தேவதை 

அன்பு  மொழி  பேசும்  அழகு  மயில்  ஓவியமே 
இல்லம்  அலங்கரிக்கும்  பழகு  தமிழ்க்காவியமே!!

சொர்க்கமதைக் காண்கின்றோம் 
சொந்தமெனக் கொள்கின்றோம் 

த .சத்தியமூர்த்தி 


      

Saturday, 8 August 2020

kanniyen ekkam

கன்னியின் ஏக்கம் 

குழந்தையாய்  இருந்தவள்  குமரியாகி  
தங்கச்சிலைப்போல் நிற்கிறாள் 

மகளின்  வளர்ச்சிக்கண்டு  தாயின்
  உள்ளம்  பூரிப்படைகிறது 
வளர்ந்துநிற்கும்  பெண்ணைக்காணும் போதெல்லாம்
தந்தை  உள்ளம்  தவிக்கிறது
 
வயதுக்கு  வந்து  பல  வருடங்கடந்தும் 
 மணவாழ்வு  அமையவில்லை
இந்தக்கன்னி  நெஞ்சிலே  கணவன்  
ஏக்கமோ  முடிந்தபாடில்லை 

தட்சணைக்கொடுக்க  நகையில்லாமல் 
நங்கை  ஏங்குகின்றாள் 
அழகிருந்தும்  இளமை  இருந்தும் 
தனி  மரமாய்  தவிக்கின்றாள்
 
பொன்னையும்  தந்து  பெண்ணையும்  தந்தால்  
மாப்பிள்ளை  சிரிக்கின்றார்  
அதில் ஒன்றிரண்டு  குறைந்தாலும் 
எகிறிக்  குதிக்கின்றார்

கன்னி  சிந்துகின்ற  கண்ணீரைப்பற்றி 
கவலை  யாருக்குமில்லை  
உள்ளம்  உடைவதை  பெண்மை  தவிப்பதை 
பெரிதாய்  நினைப்பதில்லை
 
பெண்ணே  பெண்ணுக்கு  பகையாவதை  
திருமணச்சந்தையில்  காணலாம் 

தம்  பிள்ளைக்கு   பெண்ணைத் தேடும்போது   
 ஆயிரம்  கேட்கும்  மாமியாரே 
ஒரு  பெண்ணுக்கு  தாயாய்  இருப்பதை  ஏனோ 
மறந்து  விடுகின்றாள் 

பெண்  வேலைக்குச்  சென்று  சம்பாதித்தாலும்
இந்த  நிலைமை  மாறவில்லை 

சம்பளப் பணத்தோடு  சகலமும் 
 கொட்டி  அழுதால்  தான்  
மேளம் கொட்ட  முடிகிறது  
தாலி  கழுத்தில்  ஏறுகிறது
 
தட்சணை  வாங்காமல்  கன்னியை  மணந்து
காப்பாற்ற  மனமில்லை 
காலங்கடந்தும்  பெண்ணை  விலை  பேசும் 
கொடுமை  மாறவில்லை 

--த .சத்தியமூர்த்தி       



 

 

Saturday, 1 August 2020

Ethu azhagu

எது  அழகு!

கதிர்  பரப்பி  காலை வரும் கதிரவன் அழகு 
முகில்  கிழித்து  வெளி வந்த  முழு மதி  அழகு 

அணிஅணியாய்  மேலெழும்பி   வரும்  கடல்  அலையும்  அழகு 
சுதந்திரமாய்  பறந்து வரும்  பறவைகளும்  அழகு 

பூபாளம்  இசைத்து வரும்  விடியற்காலை  அழகு 
புவனமெல்லாம்  பூத்து நிற்கும்  மலர்களெல்லாம்  அழகு 

கள்ளமில்லா  சிரிப்பாலே  உள்ளமெல்லாம்  கொள்ளை கொண்ட மழலைகளும்  அழகு 
கைகொட்டி  ரசிக்கும்  கன்னிப்பெண்ணின்  கருவிழியும்  அழகு 

உயிரை  வளர்க்கும்  பயிரை  வாழ வைக்க 
திரண்டுவரும்  கருமேகம்  அழகு 
வானிலிருந்து  மத்தாப்புப்போல்   பொழிகின்ற  மாமழையும்  அழகு 

மழையைக்  கண்ட  மகிழ்ச்சியில்  தன்  தோகையை  
விரித்து  ஆடும்  வண்ண மயில்  அழகு 
கம்பீரமாய்  கடைத்தெருவில்  அசைந்து  ஆடி வரும்  யானை  அழகு  

தவழ்ந்து  வந்து  குதித்து  விழும்  நீர்வீழ்ச்சி  அழகு 
தாவி தாவி  விளையாடும்  மந்திகளும்  அழகு 

பாட்டாளியின்   கைவண்ணத்தில்  உருவான  கலைப்படைப்புகள்  அழகு
 கவிஞனின்  சிந்தனையில்  பிறக்கின்ற  கற்பனையும்  அழகு 

இல்லையென்று  கேட்போர்க்கு  இல்லையென்று  சொல்லாமல் 
அள்ளி அள்ளி தரும்  வள்ளலின்  சிவந்த  கரம்   அழகு 

பசி போன  பின்னே  ஏழையின்  முகத்தில் தோன்றும் 
 புன்சிரிப்பே  அழகுக்கெல்லாம்  பேரழகு !!

--- த .சத்தியமூர்த்தி      



     

      

   

kadhalum kadanthupogum

காதலும்  கடந்துபோகும் 

பெண்ணே!  நீ  புரியாத  புதிரென்பேன் 

நீயே 
குளிர்ச்சித்தரும்  நிலவாவாய்
சுட்டெரிக்கும்  சுடராவாய் 
தென்றலைப்போல்  தழுவிடுவாய் 
புயலைப்போல்  தாக்கிடுவாய் 
கலகலப்பாக  இருந்திடுவாய்
கடுகைப்போல்  வெடித்திடுவாய் 
கனவினிலே  இனித்திடுவாய் 
காதல் தந்து  விலகிடுவாய்   

எளிதாக  மனம்  மாற  பெண்ணுக்கு  இறைவன்   கற்றுத்தந்தான் 
எண்ணி  எண்ணி  மாய்ந்து  போக ஆணுக்கு  வரம்  தந்தான் 

புலம்ப  வைத்து கலங்க  வைத்து  கவிதையினை  வடிக்க வைத்தான்
ஊரெல்லாம்  விடிந்த பின்னும் அவன்  வாழ்வை  இருள  வைத்தான் 

    அன்பாக  பேசி  அவனை  ஏமாற்றிய  கலையென்ன 
நினைத்தாலே  நெஞ்சமெல்லாம்  எரிகின்ற  கனலென்ன 

அவனை  துடிக்கவைத்து  வெகுதூரம்  போன  விந்தையென்ன 
இடம் விட்டு  இடம் சென்றும்  அவன்  இதயத்தில்  இருப்பதனால் -
 முள்ளாக   குத்தியே  அவன்  மூச்சுக்கு  வேட்டு வைத்தாய் 

     மறந்து  விடுங்கள் 
     மன்னித்து  விடுங்கள் 

இரு  வரியில்  விடைபெற்றாள் 
அவளை  மன்னித்து விட்டான் 
ஆனால்  மறக்கவில்லை 

அவன்  நினைவை  இழந்தால்  அவளை  மறப்பான் 
அவன்  உயிரை  இழந்தால்  அவளை  மறப்பான் 

----த.சத்தியமூர்த்தி 

Saturday, 18 July 2020

penmai

பெண்மை 

மஞ்சள்  செய்ததோர்  மகிமை 
மனம்  பறித்ததோர்  எழில்  பதுமை 

பாவை  உடலின்  செழுமை  
பார்க்கும்  கண்களுக்கு  இனிமை 

பூத்து  நின்றதோர்  இளமை 
புவனம்  யாவிற்கும்  ஓர்  புதுமை 

காதலிக்காக  காத்து  இருப்பது  மகிமை 
காதலியை  மனைவியாய்  அடைவது  பெருமை 

கண்டபடி  மனம்  அலைந்தால்  காண்பது  சிறுமை 
மனம்  திறந்து  பேசிவிட்டால்  மாறிவிடும்  நிலைமை 

 மங்கையரை  மகிழ்ச்சியுடன்  வாழ  வைப்பது  கடமை 
பெண்மை   என்றும்  ஆணுக்கு  அடிமை 

என   பேசித்திரிந்தது  மடமை 
மங்கையவள்  சுதந்திரம்   மதித்திடுதல்  நன்மை 

என்றாலும்  கட்டியவள்  காலமெல்லாம் 
கணவனுக்கே  உடைமை 

மொத்தத்தில்   பெண்மை  என்பதே   பெருமை 
பெண்மையை  மதிப்பதே   காலத்தின்  கடமை !!

----த .சத்தியமூர்த்தி   




 

Saturday, 11 July 2020

pillai nila

பிள்ளை  நிலா 

பட்டுப்  போன்ற  கன்னம்  கொண்டு  
பஞ்சுப்  போன்ற  கையை  ஆட்டி  ஆட்டி 
தொட்டினிலே  தெய்வமொன்று  அசையுது - நம் 
சொந்தமொன்று  வந்து  இங்கு  சேர்ந்தது 

கள்ளமில்லா  சிரிப்பு  ஒன்று
 பிள்ளை  இங்கு  சிரிக்கக்கண்டு 
காணும்  கண்கள்  ஆனந்தத்தில்  துள்ளுது -என் 
கவலையெல்லாம்  காணாமல்  போனது 

மழலைச்செல்வம்  வாரியெடுத்து - என் 
மார்போடு  அணைத்த  போது 
மகிழ்ச்சி  வெள்ளம்  பெருகுது  
மனமெல்லாம்  இனிக்குது  

முத்தமொன்று  கன்னத்திலும்  
முகத்திலும்  மாறி  மாறி  பதித்த  போது 
தேனாக  இனித்தது - தெம்பாக  இருந்தது 

கையில்  கிடைத்தப்பொருளையெல்லாம்  எடுக்குது 
உடன்  வாயில்  போட்டு  மெல்ல  மெல்ல   சுவைக்குது 
மண்ணைக்கூட  ஆசையோடு  தின்னுது 
கண்ணைப்போல  தாயுள்ளம்  காக்குது 

செல்வமிங்கு  எத்தனையோ  மண்ணில்  உண்டு 
உயிர்த்  துடிப்பாகும்   மழலைச்செல்வத்திற்கு   ஈடாக  ஏதுண்டு !
தெய்வம்  தந்த  பரிசு  ஏதேனும்  கிடைத்ததென்றால் 
அன்பான  மனைவியும்  அவள்  எனக்களித்த  மழலையும் 

சொர்க்கமென்று  ஏதுமில்லை  
சொந்தமென்று  வந்த 
 மனைவிபோல - மழலைப்போல

அன்புசெல்வங்கள்   எனக்களித்த 
ஆண்டவனுக்கு   நன்றி  சொல்வேன் !!

----------- த .சத்தியமூர்த்தி   







velicham

வெளிச்சம்

பரவியிருந்த  கும்மிருட்டை 
காணாமல்  செய்தது  சூரிய  வெளிச்சம் ..

மனதில் உதித்த  எதிர்மறை  சிந்தனையை 
அகலச் செய்தது  அறிவு  வெளிச்சம் ...

ஒரு  தீக்குச்சியின்  வெளிச்சம் 
இருட்டைத்  தின்றுவிடும்...
  
இருண்ட   அறையில்  அகல்  விளக்கின்  வெளிச்சம் ...
இருட்டைத்  தேடித்தேடி  இல்லாமல்  செய்துவிடும் 

மெழுகுவர்த்தியின்  வெளிச்சம் ..
 தியாகத்தின்  அடையாளம்
  
தீப்பந்தத்தின்  வெளிச்சம் ...
 எல்லோர்க்கும் வழி  காட்ட  உதவும் 

அண்ணாமலையாரின்  தீப  வெளிச்சம் 
அகிலத்திற்கே  ஏற்றி  வைத்த  ஞான  வெளிச்சம் ..

வெற்றியைக் கொண்டாட  கொளுத்தி விடும்  
பட்டாசு  திரியிலிருந்து  புறப்படும்  வெளிச்சமே  
மகிழ்ச்சியின்  உச்சத்தின்  அடையாளம்   

வெளிச்சத்தின்  உறைவிடம்  
பிரகாசத்தின்  இருப்பிடம்

வருங்காலத்தின்  நம்பிக்கையே 
ஏழைகளின்  கண்ணில்  தெரியும்  எதிர்கால  வெளிச்சம் 

எல்லோரின்  வாழ்வின்  ஏக்கமே 
என்றாவது  ஒரு நாள்  விடியும் 
என்ற  வெளிச்சத்தை  நோக்கித்தான் 

வாருங்கள்  தோழர்களே 
 ஆளுக்கொரு தீபமேற்றி 
வெளிச்சத்தைக்  கொண்டாடுவோம் 

                                     -----------த . சத்தியமூர்த்தி