Saturday, 11 July 2020

pillai nila

பிள்ளை  நிலா 

பட்டுப்  போன்ற  கன்னம்  கொண்டு  
பஞ்சுப்  போன்ற  கையை  ஆட்டி  ஆட்டி 
தொட்டினிலே  தெய்வமொன்று  அசையுது - நம் 
சொந்தமொன்று  வந்து  இங்கு  சேர்ந்தது 

கள்ளமில்லா  சிரிப்பு  ஒன்று
 பிள்ளை  இங்கு  சிரிக்கக்கண்டு 
காணும்  கண்கள்  ஆனந்தத்தில்  துள்ளுது -என் 
கவலையெல்லாம்  காணாமல்  போனது 

மழலைச்செல்வம்  வாரியெடுத்து - என் 
மார்போடு  அணைத்த  போது 
மகிழ்ச்சி  வெள்ளம்  பெருகுது  
மனமெல்லாம்  இனிக்குது  

முத்தமொன்று  கன்னத்திலும்  
முகத்திலும்  மாறி  மாறி  பதித்த  போது 
தேனாக  இனித்தது - தெம்பாக  இருந்தது 

கையில்  கிடைத்தப்பொருளையெல்லாம்  எடுக்குது 
உடன்  வாயில்  போட்டு  மெல்ல  மெல்ல   சுவைக்குது 
மண்ணைக்கூட  ஆசையோடு  தின்னுது 
கண்ணைப்போல  தாயுள்ளம்  காக்குது 

செல்வமிங்கு  எத்தனையோ  மண்ணில்  உண்டு 
உயிர்த்  துடிப்பாகும்   மழலைச்செல்வத்திற்கு   ஈடாக  ஏதுண்டு !
தெய்வம்  தந்த  பரிசு  ஏதேனும்  கிடைத்ததென்றால் 
அன்பான  மனைவியும்  அவள்  எனக்களித்த  மழலையும் 

சொர்க்கமென்று  ஏதுமில்லை  
சொந்தமென்று  வந்த 
 மனைவிபோல - மழலைப்போல

அன்புசெல்வங்கள்   எனக்களித்த 
ஆண்டவனுக்கு   நன்றி  சொல்வேன் !!

----------- த .சத்தியமூர்த்தி   







No comments:

Post a Comment