Saturday, 28 November 2020

Piriyaa Vidai part-1

 பிரியா  விடை-1 

குயில்  கூவும்  சோலையிலே - என்  மனம் 
மகிழும்  வேளையிலே, 
இளைப்பாறக்  கண்ணயர்ந்தேன்

இதயத்தைத்  தொடும்  வகையில்  
இசையோடு  கலந்து வரும்
குரலோசை  தனைக்கேட்டு
  
குரல்  வந்த  திசை  நோக்கி
மெதுவாகத்தான்  நடந்தேன் 
அருகில்  நான்  சென்றவுடன், 

அதுவரையில்  வந்த  குரலோசைக் கேட்கவில்லை 
ஒருவரையும்  காணவில்லை - கால்  கடுக்க 
சோலை முழுதும் நான்  நடந்து  பார்த்தாலும் 
குரலுக்குரியவளை  பார்க்க  முடியவில்லை 

களைப்போடுக்  கண்மூடி  நிழலோரம்  நான்  கிடக்க 
தென்றலது  மெல்ல வந்து 
தேகமதை  தீண்டுவது  போல் ,

பசியோடு  இருந்தவனின்  பார்வை  முன் 
பழுத்த  மரம்  பாதையிலே முளைப்பது போல், 

தண்ணீருக்கு  அலைந்தவனின்  பார்வை  முன் 
தடாகமொன்று  தட்டுப்பட்டது  போல் ,

கடும்  வெயிலில்  நிழலுக்கு அலைந்தவன்  முன் 
பந்தலொன்று  பாதையிலே  தோன்றியது  போல், 

உள்ளங்கவர்ந்த  பெண்ணொருத்தி  மெல்ல  மெல்ல
என்  சிந்தையெல்லாம்   நிறைந்தது  போல்,

கண்டு வந்த  கனவொன்று  கண்  முன்னே 
உண்மையென  நேரில் வந்து  தோன்றியது போல் ,

ஆவலோடு அலை  பாய்ந்த  என்  கண் முன்னே 
அழகான  பெண்ணொருத்தி  அவதரித்தாள் !

பிரியா விடை  தொடரும் ....

----த.சத்தியமூர்த்தி  
  

No comments:

Post a Comment