Saturday, 13 March 2021

Maanudam Tharippom part-2

மானுடம் தரிப்போம் -2 

கள்ளமில்லா புன்சிரிப்போடு  
கை , காலை  ஆட்டி  புத்தம்  புது  பூவாய் 
மழலையாய்  மண்ணுக்கு  வந்தோம் ..

தாயின்  மடியை  அரவணைத்து 
மிரள  மிரள  இம்மண்ணைப்  பார்த்தோம்..

வளர , வளர , ஆசையில்  விழுந்து 
பேராசையை  தினம்  விதைத்து  
காம , கோப ,கொடூரத்தை  வளர்த்து,
 
மனதை  மயக்கும்  பணமெனும்  ஒற்றை 
மந்திரத்திற்குக்  கட்டுப்பட்டு  அதற்காக
  
நாயாய் , பேயாய் ,அலைந்து  திரிந்து ,
நய வஞ்சகங்கள் கோடி  புரிந்து ,
நல்லோர்  மனதை  நடுங்கச்செய்து..

தான் , தனது, தன்  குடும்பமெனும்  
குறுகிய  வட்டத்தில்  சுருங்கி 

சொந்த  பந்தங்களை  ஒதுக்கி 
உறவுகளை  உதறித்தள்ளி  

ராஜபோகமாய்  சில  காலம்  வாழ்ந்து 
பண்ணிய  பாவத்தின்  பலனாய்  

தேகப்பொலிவிழந்து  , குடும்பத்திற்கு  பாரமாகி 
பாயில்  விழுந்து , நோய் முற்றி  

வெறுங்கையோடு   மீண்டும்  
மண்ணுக்குள்  புதைந்தோம் !

மானிடா  ! 

உன்  பிறப்பின்  மகிமையைப்  பார்த்தாயா ?

யாருக்கும்  உன்னால்  ஒரு  பயனும்  இல்லையென்றால்
உன்  பிறப்பு  எதற்கு ?

பல  தலைமுறைக்கு  சொத்து  சேர்க்கும் 
கனவான்களே  ! 

கொஞ்சம்  எடுத்து  ஏழைக்கு  தர்மம்  செய்தால் 
உங்கள்  ஆஸ்தி  என்ன  குறைந்தா  போகும் ?

உங்கள்  அஸ்தியோடு  கூட  வருவது 
நீங்கள்  செய்த  தர்மம்  மட்டுமே !

மானுடம்  தொடரும்..

--த .சத்தியமூர்த்தி    
 
 

 



      

No comments:

Post a Comment