பெண்ணியம் பேசுவோம்-5
பெண்களின் முன்னேற்றம்
ஒட்டுமொத்த சமூகத்தின் முன்னேற்றம்
வயதுக்கு வந்து பல வருடம் கடந்தும்
வாலிபம் கொஞ்சம் கொஞ்சமாய் கரைந்த போதும்
சமூகத்தைப் பிடித்த கொடிய நோய்
வரதட்சணையெனும் பேராலே பெண்ணை வதைக்கிறது
பருவம் வந்து பெண்கள் படும் பாடு
பணத்தாசைப்பிடித்த பேய்களுக்கு தெரியவா போகிறது ?
நகை நட்டு தட்டு முட்டு சாமான் கோட்டு சூட்டு
மண்டபம் கச்சேரி விருந்து வண்டி வாகனம்
சீர்வரிசை என பட்டியலோ நீள்கிறது ..
திருமணச் சந்தையோ திக்குமுக்காட செய்யுது
முடிந்தவரை ஒட்டுமொத்தமாய் கறக்கப் பாக்குது ..
ஆணுக்கு இணையாய் பெண் பெரிய படிப்பு படித்தபோதும்
ஆணுக்கு நிகராய் பெண் கை நிறைய சம்பாதித்தபோதும்
கல்யாணப் பந்தலிலே மாப்பிள்ளைக்கு மட்டும்
மகுடம் சூட்டப் படுகிறது
பல இலட்சங்கள் வாரி இறைத்தப் பின் தான்
பெண்ணின் திருமணம் மங்களமாய் முடிகிறது
காசில்லாக் காரணத்தால் பல கன்னிப்பெண்ணின்
வாழ்வு கண்ணீரில் கரைகிறது
கார்பொரேட் முதலைகளுக்காக கறுப்புச் சட்டங்களை
விவாதமின்றி நிறைவேற்றும் மைய அரசு
வரதட்சணைக் கொடுமைக்கும் இருக்கும் சட்டத்தை
இன்னும் கடுமையாக்கினால் என்ன !!
பொன்னகையை வெறுத்து
கன்னியின் புன்னகையே போதும்
என்று சொல்லும் அளவுக்கு
ஆணின் உள்ளம் மாறவேண்டும்
பெண்ணியம் பேசப்படும்...
---த .சத்தியமூர்த்தி
No comments:
Post a Comment