இளைய தலைமுறை
விடியல் உதித்ததால் வெளிச்சம் வந்தது
வசந்தம் வந்ததால் வாழ்வு மலர்ந்தது
அன்பு பிறந்ததால் அகிலம் இணைந்தது
ஆசை துறந்ததால் அமைதி கிடைத்தது
நல்லது நடப்பதால் நம்பிக்கை துளிர்த்தது
காலம் கனிந்ததால் நினைத்ததெல்லாம் நடந்தது
கவிதையின் துடிப்பால் எழிச்சி பிறந்தது
காதல் மலர்ந்ததால் உள்ளம் இனித்தது
மனைவி அமைந்ததால் மகிழ்ச்சி வந்தது
மழலை இணைந்ததால் கடமை சேர்ந்தது
மக்களாட்சியால் சுதந்திரம் உருவானது
மக்களின் உழைப்பால் நாடு செழித்தது
நாட்டின் வளமை மேட்டுக்குடிக்கு மட்டும் சொந்தமானது
தட்டிக்கேட்கவோ தலைமையில்லாமல் போனது
தலைமையேற்க இளைய தலைமுறையே வாருங்கள்
உழலற்ற சமூகத்தை உங்களிடமிருந்து துவக்குங்கள்
ஏழையின்பால் பற்று வைத்து உண்மையாய் உழையுங்கள்
நேர்மையாய் நடந்து உண்மையான சுதந்திரத்தை உறுதிப்படுத்துங்கள்
கருணை பிறப்பதால் மட்டுமே வறுமை ஓழியும்
கல்வியால் மட்டுமே சமதர்ம சமுதாயம் சாத்தியமாகும்
வலிமையான இந்தியாவை உருவாக்க
தோளோடு தோள் சேருங்கள்
நாடு உங்கள் மேல் நம்பிக்கை வைத்து காத்திருக்கிறது
நீங்கள் நிமிர்ந்தால் வானமும் தொட்டுவிடும் தூரம் தான்
த .சத்தியமூர்த்தி
No comments:
Post a Comment