Sunday, 30 August 2020

Vetriyen Ragasiyam

வெற்றியின்  இரகசியம்   

மண்ணை நம்பி பயிரு  இங்கே  செழித்து வளருதுங்க 
பெண்ணை  நம்பி  குடும்பம்  இங்கே  முன்னுக்கு  வருதுங்க 

மண்ணும்  பெண்ணும்  நல்லா  அமைஞ்சா  வாழ்க்கை  மின்னுங்க 
வாழுற  வாழ்க்கையை  ஊறு  மெச்சவே  வாழ்ந்து  பாருங்க  

இறைக்கிற  கிணறு  சுரக்குமுன்னு  சொன்னது  பொய்யில்லே
ஏழை  பாழைக்கு  உதவுவதாலே  கொஞ்சமும்  குறைவதில்லே 

படிப்பு  மட்டுமே  பரம்பரைக்கு  சொத்தா  சேத்து  வையுங்க 
பாழாப்போன  பணத்தாலே  மனசு  ரொம்ப  கெட்டுப்போச்சுங்க 

சத்தியம்  தான்  ஜெயிக்கும்னு  சந்ததிக்கு  சொல்லி  வையுங்க 
வருங்கால  தலைமுறை  நேர்மையோடு  நடக்கும்  பாருங்க 

விதியின்  பேரைச்  சொல்லி  மதியை  மழுங்கச் செய்வாங்க 
கர்ம  வினையென்று  பல  கதைகளைக்  கட்டி விடுவாங்க

பாவத்தின்  சம்பளமென்று  பழைய  பல்லவியைப்  பாடிச் செல்வாங்க
பத்தாம்  பசலியின்  பசப்பு  வார்த்தையை  ஒதுக்கி  தள்ளுங்க 

வெளியே  வந்தால்  வெற்றி  இருக்குது  
நம்பிக்கையோடு   புறப்பட்டு   வாருங்கள் 

செக்கு  மாடு  போலவே  செஞ்ச வேலையை  
திரும்ப  திரும்ப  செய்யாம  

கொஞ்சம்  மாத்தி  யோசித்து , திறமையைக்கூட்டி 
புதுசா  ஏதாவது  செஞ்சா  தான்   ஊறு மெச்சுங்க 

இது  தான்   உழைப்பின்  ரகசியங்க !
இதுவே  வெற்றியின்  ரகசியங்க !! 
   
----த .சத்தியமூர்த்தி  
       

No comments:

Post a Comment