Saturday, 15 August 2020

illam vantha azhagu mayil

இல்லம்  வந்த  அழகு  மயில் 

பார்த்து  வச்ச  மாப்பிள்ளை  தான் 
பக்கத்திலே  வந்து  விட்டால் 

சேர்த்து  வைத்த  ஆசையெல்லாம் 
செயல்  வடிவம்  ஆகுதடி 

நேத்து  வந்த  மாமன்  மேலே  
நினைப்பெல்லாம்  ஆனதாலே  

காத்திருந்த  கன்னிப்பூவும்  - அவன் 
கைப்பட்டு  கனிந்ததடி  

பொழுது  சாய்ந்த பின்னாலே 
மச்சான்  கூட  முன்னாலே  

போனதாலே  தன்னாலே  
மயங்கி  நிக்குது  பெண்புள்ளே 

விழியாலே  ஜாடை  பேசி 
மொழியாலே  காதல்  பேசி 

வளர்ந்து  நிற்கும்  அழகு  பொண்ணு சிரிக்குது 
 பாவம்  ஏதேதோ  எண்ணி  எண்ணி  ஏங்குது 

அன்று  உள்ளத்திலே  குடி  புகுந்த  உத்தமி
இன்று  இல்லத்திலே  விளக்கேற்றும்  பத்தினி 

என்றும்  எண்ணத்திலே  கலந்து விட்ட தாரகை 
என்  நெஞ்சமெல்லாம்  இனிக்கின்ற  தேவதை 

அன்பு  மொழி  பேசும்  அழகு  மயில்  ஓவியமே 
இல்லம்  அலங்கரிக்கும்  பழகு  தமிழ்க்காவியமே!!

சொர்க்கமதைக் காண்கின்றோம் 
சொந்தமெனக் கொள்கின்றோம் 

த .சத்தியமூர்த்தி 


      

No comments:

Post a Comment