Saturday, 6 March 2021

Maanudam Tharippom part-1

மானுடம்  தரிப்போம்-1  

ஆயிரமாயிரம்  ஜீவ ராசிகளில் 
அரிது  அரிது  மானிடராய்  பிறத்தல்  அரிது 

எத்தனை  தவம் செய்து  இருந்தால் 
கிடைத்தற்கரிய  இம்  மானிடப்   பிறப்பு  கிட்டும் 

விதை  விழுந்து , முளைத்து , செடியாகி , மரமாகி 
காய்  தந்து , கனி  தந்து ,இளைப்பாற  இடம் தந்து 
தான்  பிறந்ததன்  பயனை
  செவ்வனே செய்தது ..

வானிலிருந்து  விழும்  மழைத்துளிகள்  மக்கள்  
தாகத்தைத்  தீர்த்து , தன்  வரவின்  
மகத்துவத்தைப்   பறைசாற்றியது ..

 ஆடு , மாடு ,கோழி,பன்றி ,அத்தனையும் 
மனிதனின்  நாவிற்கு  ருசியாகி 
வயிற்றுக்குள்  அடைப்பட்டுப் போனது ..

இயற்கையின்  படைப்புக்களை அதன்  அனுமதியின்றி 
கிடைத்ததையெல்லாம்  அனுபவிக்கும் 
அதிகாரத்தை  மனிதனுக்கு  யார்  தந்தது ?

சிரிக்கவும் , சிந்திக்கவும் , ஆற்றல்  படைத்த 
மனித இனம்  இந்த  பிரபஞ்சத்திற்கு  
திருப்பி  எதைக்  கொடுத்தது ?

சக மனிதனின்  சுக  துக்கத்தைக்  கண்டு  கொள்ளாத 
மனித  மனம்  பாறையாய்  உறைந்து  போனது  ஏன் ?

புழுவை விட  ஈனப்பிறவியா  மானிடப்பிறவி
 
எதைக்  கொண்டுவந்தாய்  
இருப்பதையெல்லாம்  இரும்புப்பெட்டிக்குள் 
பூட்டி  வைத்துவிட்டு  
எதைக்கொண்டு  செல்லப்போகிறாய் !    

வாழ்வின்  பயனை  அறிந்திடு  மானிடா..

மானுடம்   தொடரும் ..

----த .சத்தியமூர்த்தி  




  

 
 

No comments:

Post a Comment