Saturday, 18 July 2020

penmai

பெண்மை 

மஞ்சள்  செய்ததோர்  மகிமை 
மனம்  பறித்ததோர்  எழில்  பதுமை 

பாவை  உடலின்  செழுமை  
பார்க்கும்  கண்களுக்கு  இனிமை 

பூத்து  நின்றதோர்  இளமை 
புவனம்  யாவிற்கும்  ஓர்  புதுமை 

காதலிக்காக  காத்து  இருப்பது  மகிமை 
காதலியை  மனைவியாய்  அடைவது  பெருமை 

கண்டபடி  மனம்  அலைந்தால்  காண்பது  சிறுமை 
மனம்  திறந்து  பேசிவிட்டால்  மாறிவிடும்  நிலைமை 

 மங்கையரை  மகிழ்ச்சியுடன்  வாழ  வைப்பது  கடமை 
பெண்மை   என்றும்  ஆணுக்கு  அடிமை 

என   பேசித்திரிந்தது  மடமை 
மங்கையவள்  சுதந்திரம்   மதித்திடுதல்  நன்மை 

என்றாலும்  கட்டியவள்  காலமெல்லாம் 
கணவனுக்கே  உடைமை 

மொத்தத்தில்   பெண்மை  என்பதே   பெருமை 
பெண்மையை  மதிப்பதே   காலத்தின்  கடமை !!

----த .சத்தியமூர்த்தி   




 

No comments:

Post a Comment