Monday, 23 March 2020

Vidiyarkalai

விடியற்காலை 

கடல்  குளித்து  மெல்ல மெல்ல  மேலெழுப்பி 
முகில்  கிழித்து  கதிர்  பரப்பும்  கதிரவனின் 
எழில்  அழகை  விழியிலே  பருகும்  நேரம் 
இளந்தென்றல்  மேனி  தொட்டு இளைப்பாறவைத்த  நேரம் 


அதிகாலை  பொழுதாகும்  அழகான  விடியலாகும்   
பறவையினம்  கூட்டாக  சிறகடித்த  வேலை  
பார்ப்பவர்  கண்ணுக்கு  விருந்தளிக்கும்  வேலை  


கடலோரம்  கரையோரம்  காலளந்த  போது 
 ஆசையுடன்  ஓடி  வந்து  அலை  தழுவும்  நேரம்  
அன்போடு  கையினிலே  நீரெடுத்துக்கொஞ்சம் 
அடுத்து  நின்ற  நண்பன்  மேல்  நானடித்த  போதும்  
அசையாதிருக்கும்   அவன்  விழியோ  கடலழகை  ரசிக்கும் 


பூத்து நிற்கும்  மலரெல்லாம்  எழில்  படைத்தக்கோலம்  
பறவைகளும்  தொடர்ந்திங்கு பூபாளம்  பாடும்  
கோவில்  மணி  ஓசை  மெல்ல  தென்றலிலே  மிதந்து  வரும்  
விடியற்காலை  சொர்க்கம்  இறைவன்  படைத்த  இனபம்  
ரசிக்கின்ற  கண்ணுக்கு  ரசனைகளும்  தோன்றும்  
அழகைப்  படைத்திட்ட  ஆண்டவனுக்கு  நன்றி  சொல்ல  வேண்டும் 


                -------- த.  சத்தியமூர்த்தி 


1 comment: