விடியற்காலை
கடல் குளித்து மெல்ல மெல்ல மேலெழுப்பி
முகில் கிழித்து கதிர் பரப்பும் கதிரவனின்
எழில் அழகை விழியிலே பருகும் நேரம்
இளந்தென்றல் மேனி தொட்டு இளைப்பாறவைத்த நேரம்
அதிகாலை பொழுதாகும் அழகான விடியலாகும்
பறவையினம் கூட்டாக சிறகடித்த வேலை
பார்ப்பவர் கண்ணுக்கு விருந்தளிக்கும் வேலை
கடலோரம் கரையோரம் காலளந்த போது
ஆசையுடன் ஓடி வந்து அலை தழுவும் நேரம்
அன்போடு கையினிலே நீரெடுத்துக்கொஞ்சம்
அடுத்து நின்ற நண்பன் மேல் நானடித்த போதும்
அசையாதிருக்கும் அவன் விழியோ கடலழகை ரசிக்கும்
பூத்து நிற்கும் மலரெல்லாம் எழில் படைத்தக்கோலம்
பறவைகளும் தொடர்ந்திங்கு பூபாளம் பாடும்
கோவில் மணி ஓசை மெல்ல தென்றலிலே மிதந்து வரும்
விடியற்காலை சொர்க்கம் இறைவன் படைத்த இனபம்
ரசிக்கின்ற கண்ணுக்கு ரசனைகளும் தோன்றும்
அழகைப் படைத்திட்ட ஆண்டவனுக்கு நன்றி சொல்ல வேண்டும்
-------- த. சத்தியமூர்த்தி
முகில் கிழித்து கதிர் பரப்பும் கதிரவனின்
எழில் அழகை விழியிலே பருகும் நேரம்
இளந்தென்றல் மேனி தொட்டு இளைப்பாறவைத்த நேரம்
அதிகாலை பொழுதாகும் அழகான விடியலாகும்
பறவையினம் கூட்டாக சிறகடித்த வேலை
பார்ப்பவர் கண்ணுக்கு விருந்தளிக்கும் வேலை
கடலோரம் கரையோரம் காலளந்த போது
ஆசையுடன் ஓடி வந்து அலை தழுவும் நேரம்
அன்போடு கையினிலே நீரெடுத்துக்கொஞ்சம்
அடுத்து நின்ற நண்பன் மேல் நானடித்த போதும்
அசையாதிருக்கும் அவன் விழியோ கடலழகை ரசிக்கும்
பூத்து நிற்கும் மலரெல்லாம் எழில் படைத்தக்கோலம்
பறவைகளும் தொடர்ந்திங்கு பூபாளம் பாடும்
கோவில் மணி ஓசை மெல்ல தென்றலிலே மிதந்து வரும்
விடியற்காலை சொர்க்கம் இறைவன் படைத்த இனபம்
ரசிக்கின்ற கண்ணுக்கு ரசனைகளும் தோன்றும்
அழகைப் படைத்திட்ட ஆண்டவனுக்கு நன்றி சொல்ல வேண்டும்
-------- த. சத்தியமூர்த்தி
Super ma...good initiavive
ReplyDelete