September 5 teacher's day
MASTER
டாக்டர் இராதாகிருஷ்ணன் மட்டுமல்ல
கல்விக்கண் திறக்கும் ஆசிரியர்கள் அத்தனை பேரும்
முதல் குடிமகன் மட்டுமல்ல முக்கிய குடிமகன்கள்
ஏனென்றால் வாத்தியார்கள் நம் வணக்கத்துகுரியவர்கள் .
ஒழுக்கத்தைச் சொல்லித்தந்து சமூகத்தை காக்கும்
சரித்திரபுருஷர்கள்
படிப்பவரின் மனத்தினிலே ஞானஒளி ஏற்றுகின்ற
சூரிய தீபங்கள்
சமூகத்தைப் பாதுகாக்கும் சக்திவாய்ந்த
படைக்கலன்கள்.
அறியாமை இருள் கிழித்து அறிவொளியை ஏற்றி வைத்து
புத்தம் புது சமுதாயம் படைப்பதாலே இவர்கள்
பிரம்மாக்கள் .
அரிச்சுவடியில் ஆரம்பித்து பேரறிவு வரை
வாரி வாரி வழங்குவதால் கடை எட்டாவது
வள்ளல்கள் .
படிப்படியாக நாம் உயர்வதற்கு அடிப்படையாய் அமைந்திட்ட
காரணகர்த்தாக்கள் .
சத்தியத்தைச் சொல்லி தந்து சமூகத்தை பாதுகாக்கும் சக்தி வாய்ந்த
படைக்கலன்கள் .
வித்தையினை குறைவின்றி கற்றுத்தரும்
வித்தகர்கள் .
இவர்கள் விரல் அசைந்தால் கோடுகள் கூட கோலங்களாகும்
நல்ல ஓவியங்களாகும்
நா அசைந்தால் புரியாத விஷயங்கள் புரியவரும்
தெரியாத பாடத்தில் தெளிவுவரும்
தாய் தந்தைக்கு அடுத்து மூன்றாமிடம் குருவிற்கு
கவிதையாலே வாழ்த்திடுவோம் கற்றுத்தந்த ஆசான்களை
---த .சத்தியமூர்த்தி