Sunday, 30 August 2020

Vetriyen Ragasiyam

வெற்றியின்  இரகசியம்   

மண்ணை நம்பி பயிரு  இங்கே  செழித்து வளருதுங்க 
பெண்ணை  நம்பி  குடும்பம்  இங்கே  முன்னுக்கு  வருதுங்க 

மண்ணும்  பெண்ணும்  நல்லா  அமைஞ்சா  வாழ்க்கை  மின்னுங்க 
வாழுற  வாழ்க்கையை  ஊறு  மெச்சவே  வாழ்ந்து  பாருங்க  

இறைக்கிற  கிணறு  சுரக்குமுன்னு  சொன்னது  பொய்யில்லே
ஏழை  பாழைக்கு  உதவுவதாலே  கொஞ்சமும்  குறைவதில்லே 

படிப்பு  மட்டுமே  பரம்பரைக்கு  சொத்தா  சேத்து  வையுங்க 
பாழாப்போன  பணத்தாலே  மனசு  ரொம்ப  கெட்டுப்போச்சுங்க 

சத்தியம்  தான்  ஜெயிக்கும்னு  சந்ததிக்கு  சொல்லி  வையுங்க 
வருங்கால  தலைமுறை  நேர்மையோடு  நடக்கும்  பாருங்க 

விதியின்  பேரைச்  சொல்லி  மதியை  மழுங்கச் செய்வாங்க 
கர்ம  வினையென்று  பல  கதைகளைக்  கட்டி விடுவாங்க

பாவத்தின்  சம்பளமென்று  பழைய  பல்லவியைப்  பாடிச் செல்வாங்க
பத்தாம்  பசலியின்  பசப்பு  வார்த்தையை  ஒதுக்கி  தள்ளுங்க 

வெளியே  வந்தால்  வெற்றி  இருக்குது  
நம்பிக்கையோடு   புறப்பட்டு   வாருங்கள் 

செக்கு  மாடு  போலவே  செஞ்ச வேலையை  
திரும்ப  திரும்ப  செய்யாம  

கொஞ்சம்  மாத்தி  யோசித்து , திறமையைக்கூட்டி 
புதுசா  ஏதாவது  செஞ்சா  தான்   ஊறு மெச்சுங்க 

இது  தான்   உழைப்பின்  ரகசியங்க !
இதுவே  வெற்றியின்  ரகசியங்க !! 
   
----த .சத்தியமூர்த்தி  
       

Saturday, 22 August 2020

manasu

மனசு 

மனம்  ஒரு  காற்றாடி 
சதா  அலைந்துக்கொண்டே  இருக்கும்

மனம்  ஒரு  கற்பூரப்பெட்டகம் 
நினைவுகளை  நிரப்பிக்கொண்டே  இருக்கும் 

மனம்  ஒரு  குரங்கு 
ஒன்றிலிருந்து  ஒன்றிற்கு  தாவிக் குதிக்கும் 

மனம்  ஒரு  மாயக்கண்ணாடி  
உலகத்திற்கு  வெளிச்சம்  போட்டு  நம்மை  காட்டிக்கொடுத்துவிடும்  

மனம்  ஒரு  பம்பரம் 
நிலையாய்  இல்லாமல்  சுற்றிக்கொண்டே  இருக்கும் 

மனம்  ஒரு எந்திரம் 
எப்போதும்  இயங்கிக்கொண்டே  இருக்கும் 

மனம்  ஒரு  அதிசய  பூப்பந்து 
நம்மை  உதைத்துக்கொண்டே  இருக்கும் 

மனம்  ஒரு  வற்றாத  ஜீவ நதி 
எண்ணங்களை  ஆறாக  பெருக  விடும் 

மனம்  ஒரு  அழகிய  குதிரை 
நமக்கு  அடங்காமல்  ஓடிக்கொண்டே  இருக்கும் 

மனம்  ஒரு  அடங்காப்பிள்ளை 
தவறு  செய்ய  வைத்து  நம்மை  மாட்டி விடும்

மனம் ஒரு  கனவுக்கன்னி 
எட்டாததற்கு  கொட்டாவி  விடும் 

இக்கொடிய  மனதை  அடக்குவது  எப்படி ?

இருப்பதைக்கொண்டு  மகிழ்வுடன்  வாழ்வதாலும் ,
இல்லாதவர்க்கு  உதவுவதை  கடமையாக  கருதுவதாலும்,
ஆசைகளைப்   படிப்படியாக  குறைத்துக்கொள்வதாலும் ,
நல்ல  எண்ணங்களை  நாள்தோறும்  வளர்த்துக்கொள்வதாலும் 

நம்  மனதை  கொஞ்சம்  கொஞ்சமாக  
நம்  வழிக்குக் கொண்டுவந்து  அடக்கி விடலாம்    

மனதை  அடக்கி  மகிழ்வுடன்  வாழ்வோம்

---த .சத்தியமூர்த்தி 

  







Saturday, 15 August 2020

illam vantha azhagu mayil

இல்லம்  வந்த  அழகு  மயில் 

பார்த்து  வச்ச  மாப்பிள்ளை  தான் 
பக்கத்திலே  வந்து  விட்டால் 

சேர்த்து  வைத்த  ஆசையெல்லாம் 
செயல்  வடிவம்  ஆகுதடி 

நேத்து  வந்த  மாமன்  மேலே  
நினைப்பெல்லாம்  ஆனதாலே  

காத்திருந்த  கன்னிப்பூவும்  - அவன் 
கைப்பட்டு  கனிந்ததடி  

பொழுது  சாய்ந்த பின்னாலே 
மச்சான்  கூட  முன்னாலே  

போனதாலே  தன்னாலே  
மயங்கி  நிக்குது  பெண்புள்ளே 

விழியாலே  ஜாடை  பேசி 
மொழியாலே  காதல்  பேசி 

வளர்ந்து  நிற்கும்  அழகு  பொண்ணு சிரிக்குது 
 பாவம்  ஏதேதோ  எண்ணி  எண்ணி  ஏங்குது 

அன்று  உள்ளத்திலே  குடி  புகுந்த  உத்தமி
இன்று  இல்லத்திலே  விளக்கேற்றும்  பத்தினி 

என்றும்  எண்ணத்திலே  கலந்து விட்ட தாரகை 
என்  நெஞ்சமெல்லாம்  இனிக்கின்ற  தேவதை 

அன்பு  மொழி  பேசும்  அழகு  மயில்  ஓவியமே 
இல்லம்  அலங்கரிக்கும்  பழகு  தமிழ்க்காவியமே!!

சொர்க்கமதைக் காண்கின்றோம் 
சொந்தமெனக் கொள்கின்றோம் 

த .சத்தியமூர்த்தி 


      

Saturday, 8 August 2020

kanniyen ekkam

கன்னியின் ஏக்கம் 

குழந்தையாய்  இருந்தவள்  குமரியாகி  
தங்கச்சிலைப்போல் நிற்கிறாள் 

மகளின்  வளர்ச்சிக்கண்டு  தாயின்
  உள்ளம்  பூரிப்படைகிறது 
வளர்ந்துநிற்கும்  பெண்ணைக்காணும் போதெல்லாம்
தந்தை  உள்ளம்  தவிக்கிறது
 
வயதுக்கு  வந்து  பல  வருடங்கடந்தும் 
 மணவாழ்வு  அமையவில்லை
இந்தக்கன்னி  நெஞ்சிலே  கணவன்  
ஏக்கமோ  முடிந்தபாடில்லை 

தட்சணைக்கொடுக்க  நகையில்லாமல் 
நங்கை  ஏங்குகின்றாள் 
அழகிருந்தும்  இளமை  இருந்தும் 
தனி  மரமாய்  தவிக்கின்றாள்
 
பொன்னையும்  தந்து  பெண்ணையும்  தந்தால்  
மாப்பிள்ளை  சிரிக்கின்றார்  
அதில் ஒன்றிரண்டு  குறைந்தாலும் 
எகிறிக்  குதிக்கின்றார்

கன்னி  சிந்துகின்ற  கண்ணீரைப்பற்றி 
கவலை  யாருக்குமில்லை  
உள்ளம்  உடைவதை  பெண்மை  தவிப்பதை 
பெரிதாய்  நினைப்பதில்லை
 
பெண்ணே  பெண்ணுக்கு  பகையாவதை  
திருமணச்சந்தையில்  காணலாம் 

தம்  பிள்ளைக்கு   பெண்ணைத் தேடும்போது   
 ஆயிரம்  கேட்கும்  மாமியாரே 
ஒரு  பெண்ணுக்கு  தாயாய்  இருப்பதை  ஏனோ 
மறந்து  விடுகின்றாள் 

பெண்  வேலைக்குச்  சென்று  சம்பாதித்தாலும்
இந்த  நிலைமை  மாறவில்லை 

சம்பளப் பணத்தோடு  சகலமும் 
 கொட்டி  அழுதால்  தான்  
மேளம் கொட்ட  முடிகிறது  
தாலி  கழுத்தில்  ஏறுகிறது
 
தட்சணை  வாங்காமல்  கன்னியை  மணந்து
காப்பாற்ற  மனமில்லை 
காலங்கடந்தும்  பெண்ணை  விலை  பேசும் 
கொடுமை  மாறவில்லை 

--த .சத்தியமூர்த்தி       



 

 

Saturday, 1 August 2020

Ethu azhagu

எது  அழகு!

கதிர்  பரப்பி  காலை வரும் கதிரவன் அழகு 
முகில்  கிழித்து  வெளி வந்த  முழு மதி  அழகு 

அணிஅணியாய்  மேலெழும்பி   வரும்  கடல்  அலையும்  அழகு 
சுதந்திரமாய்  பறந்து வரும்  பறவைகளும்  அழகு 

பூபாளம்  இசைத்து வரும்  விடியற்காலை  அழகு 
புவனமெல்லாம்  பூத்து நிற்கும்  மலர்களெல்லாம்  அழகு 

கள்ளமில்லா  சிரிப்பாலே  உள்ளமெல்லாம்  கொள்ளை கொண்ட மழலைகளும்  அழகு 
கைகொட்டி  ரசிக்கும்  கன்னிப்பெண்ணின்  கருவிழியும்  அழகு 

உயிரை  வளர்க்கும்  பயிரை  வாழ வைக்க 
திரண்டுவரும்  கருமேகம்  அழகு 
வானிலிருந்து  மத்தாப்புப்போல்   பொழிகின்ற  மாமழையும்  அழகு 

மழையைக்  கண்ட  மகிழ்ச்சியில்  தன்  தோகையை  
விரித்து  ஆடும்  வண்ண மயில்  அழகு 
கம்பீரமாய்  கடைத்தெருவில்  அசைந்து  ஆடி வரும்  யானை  அழகு  

தவழ்ந்து  வந்து  குதித்து  விழும்  நீர்வீழ்ச்சி  அழகு 
தாவி தாவி  விளையாடும்  மந்திகளும்  அழகு 

பாட்டாளியின்   கைவண்ணத்தில்  உருவான  கலைப்படைப்புகள்  அழகு
 கவிஞனின்  சிந்தனையில்  பிறக்கின்ற  கற்பனையும்  அழகு 

இல்லையென்று  கேட்போர்க்கு  இல்லையென்று  சொல்லாமல் 
அள்ளி அள்ளி தரும்  வள்ளலின்  சிவந்த  கரம்   அழகு 

பசி போன  பின்னே  ஏழையின்  முகத்தில் தோன்றும் 
 புன்சிரிப்பே  அழகுக்கெல்லாம்  பேரழகு !!

--- த .சத்தியமூர்த்தி      



     

      

   

kadhalum kadanthupogum

காதலும்  கடந்துபோகும் 

பெண்ணே!  நீ  புரியாத  புதிரென்பேன் 

நீயே 
குளிர்ச்சித்தரும்  நிலவாவாய்
சுட்டெரிக்கும்  சுடராவாய் 
தென்றலைப்போல்  தழுவிடுவாய் 
புயலைப்போல்  தாக்கிடுவாய் 
கலகலப்பாக  இருந்திடுவாய்
கடுகைப்போல்  வெடித்திடுவாய் 
கனவினிலே  இனித்திடுவாய் 
காதல் தந்து  விலகிடுவாய்   

எளிதாக  மனம்  மாற  பெண்ணுக்கு  இறைவன்   கற்றுத்தந்தான் 
எண்ணி  எண்ணி  மாய்ந்து  போக ஆணுக்கு  வரம்  தந்தான் 

புலம்ப  வைத்து கலங்க  வைத்து  கவிதையினை  வடிக்க வைத்தான்
ஊரெல்லாம்  விடிந்த பின்னும் அவன்  வாழ்வை  இருள  வைத்தான் 

    அன்பாக  பேசி  அவனை  ஏமாற்றிய  கலையென்ன 
நினைத்தாலே  நெஞ்சமெல்லாம்  எரிகின்ற  கனலென்ன 

அவனை  துடிக்கவைத்து  வெகுதூரம்  போன  விந்தையென்ன 
இடம் விட்டு  இடம் சென்றும்  அவன்  இதயத்தில்  இருப்பதனால் -
 முள்ளாக   குத்தியே  அவன்  மூச்சுக்கு  வேட்டு வைத்தாய் 

     மறந்து  விடுங்கள் 
     மன்னித்து  விடுங்கள் 

இரு  வரியில்  விடைபெற்றாள் 
அவளை  மன்னித்து விட்டான் 
ஆனால்  மறக்கவில்லை 

அவன்  நினைவை  இழந்தால்  அவளை  மறப்பான் 
அவன்  உயிரை  இழந்தால்  அவளை  மறப்பான் 

----த.சத்தியமூர்த்தி