Saturday, 27 November 2021

Ninaivil Ninra Kathai-4

நினைவில்  நின்ற  கதை -4 

விடிந்த  பொழுதை  வரவேற்று 
கதிரவனைக்  கை  கூப்பி  வணங்கி  
பதிப்பகம்  நோக்கிப்  புறப்பட்டேன் 

வழியில்  வண்டியை  நிறுத்தி  கொஞ்சம்  
காலார  நடை  போட பூங்காவில்  நுழைந்தேன் 

பூத்துக்  குலுங்கிய  பூக்களெல்லாம்  எனை 
வரவேற்பது  போல்  தலையை  மெல்ல  அசைத்தது 

வீசுகின்ற  தென்றல்  வாஞ்சையோடு  எனை  
வருடிக்  கொடுத்து  புத்துணர்ச்சியாக்கியது 

சிறகடித்து  பறக்கும்  பட்டாம்பூச்சியின்  அழகு  என் 
சிந்தையைக்  கொள்ளைக்  கொண்டது 

எத்தனை  அழகோடு  அந்த  இறைவன்  
இந்த  பூமியைப்  படைத்திருக்கிறான் 

அவன்  படைப்பில்  மனம்  மகிழ்ந்திருந்த  வேளை,
எல்லா  அழகையும்  தோற்கடிப்பது  போல் 

வில்லேந்திய   விழிகளோடும், கலகலவென  சிரிப்போடும் ,
தோழிகள்  புடை  சூழ  கடற்கரையில்  கண்ட

அப்பேரழகி  
பூங்காவின்  அழகை  கூட்ட நந்தவனமாய்  நுழைந்தாள் !!

 பார்த்தவுடன்  எல்லோரையும்  வசீகரிக்கும்  பருவம் 
கனவினிலே  வந்து  மயங்க  வைத்த  உருவம்

காலையில்  தோன்றிய  மகிழ்ச்சிக்கானக்   காரணத்தை, 
அருகில்  செல்ல  அச்சப்பட்டு  இருந்த  இடத்திலிருந்தே ,
அவளைப்  பார்த்து  பார்த்து  பூரித்தப்போது
தான் புரிந்தது  

கனவில்  கண்டு  வந்த  என்  தேவதையை  
கண்முன்  கொண்டு  வந்து  நிறுத்திய  
கடவுளுக்கு  நன்றி  சொன்னேன்  

---த .சத்தியமூர்த்தி 

No comments:

Post a Comment