Sunday, 5 July 2020

iyarkaien ragasiyam

இயற்கையின்  இரகசியம் 

 பெய்யாமல்  இருந்து  கெடுக்கக்கூடியதும்  அவ்வாறு 
கெட்ட  மக்களுக்கு  ஆதரவாய்  பொழிந்து 
வாழ வைப்பதும்  மாமழையின்  சிறப்பு  என  
வள்ளுவர்  பெருந்தகை  சொல்கின்றார் 

பொழியாமல்  செய்த  தவறை
  மழைமேகம்  திருத்திக்கொள்கிறது

கடல்  அலையால்  அடித்து  வரப்பட்ட குப்பைகளையும்
கழிவுகளையும்  தன்னால்  ஏற்பட்ட  தவறென்று  உணர்ந்து 
அடுத்து  வந்த  அலையால்  மீண்டும்  அக்குப்பைகளையும் 
கழிவுகளையும்  கடலுக்குள்ளே  ஐக்கியமாக்கும் 
அலையின்  சிறப்பை  என்னென்பேன் !

செய்த  தவறை  உடனே சரி  செய்யும்  கடல்  அலையின் 
மாண்பும்  மக்களை  வாட்டினாலும்  உடனே  பொழிந்து 
வாழ  வைக்கும்  மழையின்  சிறப்பும் தான்  
இயற்கையின்  இரகசியம் 

மனிதன்  மட்டும் தான் தான்  செய்த  தவறை 
ஒத்துக்கொள்வதும்  இல்லை 
திருத்திக்கொள்வதும்  இல்லை 

அங்கே  அலைகள்  தொடர்ந்து  அடித்துக்கொண்டே  இருக்கிறது 
 மழையும்  யுகங்களைக்கடந்து  பொழிந்து  கொண்டே  இருக்கிறது
அந்த  அலையையும்  மழையையும்  பார்த்து  ரசித்த  
மாமனிதர்களின்  நிலை  !

ஆறடிக்குள்  முடங்கி  அடங்கி  அடக்கமானார்கள் 

செய்த  தவறை  திருத்திக்கொண்டால்  நாமும்  அந்த  
இயற்கையைப்  போல  காலங்கடந்து  வாழ்வோம் !!
        
-------------த .சத்தியமூர்த்தி 
   

 

No comments:

Post a Comment