Sunday, 9 July 2023

Nermai

நேர்மை  

உண்மை  உறங்கும்  நேரம் 
 பொய்மை இங்கே  தலை விரித்தாடுகிறது   

பஞ்சையாய் , பராரிகளாய் , பாமரர்கள்  வாழ்வதற்கு 
நேர்மையற்ற  சமூகமே  காரணமாகிறது 

வாய்மையைத்  தொலைத்ததால்  மக்களின்  
வாழ்வில்  வறுமை  சூழ்ந்தது 

கலப்படம் , பதுக்கல்  , கடத்தல் அத்தியாவசியப்   
பொருட்களின்  விலையை  உயர்த்தியது 

மனிதாபமற்ற  மக்களில்  சிலரின் மனநிலையோ 
பணத்தை  நோக்கி  பயணமாகிறது 

உண்மை  ஒரு நாள்  வெளிச்சத்திற்கு  வரும்  என்ற 
அச்சமின்றி  தவறு  மேல்  தவறு  செய்கிறது 

எல்லாமும்  எங்களுக்கே  என  கிடைத்தவர்கள்  
சுருட்டுவது  வழக்கமாகிறது 

சட்டமும் , நீதியும் , பணம்  படைத்தவர்களை  
அரணாய்  பாதுகாக்கிறது  

இளைத்தவனைப்  பார்த்து  கொழுத்தவன்  
கொழுப்போடு  கொக்கரிக்க  முடிகிறது 

சமூகத்தில்  நடப்பதையெல்லாம்  சாமானியனால் 
ஏக்கத்தோடு  மட்டுமே  பார்க்க முடிகிறது

என்றாவது ஒரு நாள் ஏழைக்கும்  விடியல் 
கீழ்வானில்  முளைக்கும்  என்ற  நம்பிக்கை இருக்கிறது 

சத்தியம்  மட்டுமே  சத்தியமாய்  நிலைக்கும் 
என்பதை  வரலாறு  சாட்சியாய்  சொல்கிறது 

நேர்மை  என்னும்  அணையா  விளக்கு  மீண்டும்
மக்களின்  நெஞ்சங்களில்  சுடர்  விடும்  நன்னாளே 

வாய்மையை  வரவேற்கும்  திருநாளாகும் ..

--த .சத்தியமூர்த்தி 

Sunday, 11 June 2023

Kadum Kodai

 கடும்  கோடை 

கோடையின் தாக்கம்  கொளுத்தும்  வெயிலால் 
மக்களை  வாட்டி  வதைக்கிறது 

விண்கலங்களை  ஏற்றிக்கொண்டு,  கடும்வேகத்தில்   ராக்கெட் 
வான்  மண்டலத்தில்  ஓட்டை  போடுவதால்  வெப்பத்தின்  
தாக்கம்  அதிகரிக்கிறது 

மேலைநாடுகள்  தங்கள்  வான்  மண்டலத்தைப் பாதுகாக்க  
தங்கள்  விண்கலங்களை  இந்தியாவிடம்  தந்து  விண்ணில்  
செலுத்துவதால்  நம்  வான்  மண்டலம்  பாதிப்புக்குள்ளாகிறது  

மணலை  அள்ளுவது  , கனிமங்களை  வெட்டுவது ,
மலையைக்   குடைவது,  இப்படி  இயற்கையை  அதிகாரவர்க்கம்

கொள்ளையடிக்கும் போது , தட்டிகேட்காத   மக்களை  இயற்கை 
இதுபோல  காலம் பார்த்து கடுமையாக  தண்டிக்கிறது 

மரக்கன்றுகளை  நடுவது , பராமரித்து  வளர்ப்பது ,
நீர்நிலைகளைப்  பாதுகாப்பது  இவைதான்  வெப்பத்தை  
தணிக்க  உதவும்  

மழைக்காலத்தில்  பெருகிவரும்  மழைநீரை  சேமிக்க  
வழிசெய்யாமல்  வீணாக  பெரும்பகுதி  
கடலில்  கலப்பதாலும்  , நீராதாரம்  வெகுவாகக்  குறைந்து
 
வடஇந்தியாவைப்   போன்ற  கடும் வெப்பம்
 நம்  தமிழகத்தில்  உள்ளது 

நம்  முன்னோர்கள்  இயற்கையோடு  இணைந்து  தங்கள்  
வாழ்வை  அமைத்துக்கொண்டதால்  கடந்த  
களங்களில்   இதுபோன்ற  வெயில்  கிடையாது

இனியாவது  விழித்துக்கொண்டு  நீர்நிலைகளை  தூர்வாறி 
மழைநீரை  சேமிப்போம்  

பாலைவனம்  போல்  நம்  தமிழ்  மண்ணை  மலடாக்காமல்  
எப்போதும்  ஈரத்தோடு  இருக்க  பாதுகாப்போம் 

தன்னை  வெட்டுபவனைக்  கூட  தாங்கி நிற்கும்  
தயாள  குணம்  படைத்தது  நம்  தமிழ்  மண் 

மரம்  நடுவோம் . மழை பெறுவோம் .
வெய்யில்  தானாக  தணியும் ..

--த .சத்தியமூர்த்தி 
   

Saturday, 27 May 2023

Kudi Magangaluku

 குடி  மகன்களுக்கு 

கல் தோன்றி , மண்  தோன்றா காலத்தே 
முன் தோன்றிய  மூத்தக்குடி  எம்  தமிழர் குடி

உலகுக்கே  நாகரிகத்தைக்  கற்றுத்தந்த  
கட்டுப்பாடு மிக்க  ஓர்  குடி  என்  தமிழர்  குடி 

இத்தனை  சிறப்புமிக்க  தமிழினம்  ஒரு  சில 
அரசியல்வாதிகளின்  சூழ்ச்சிக்கி  இரையாகி  

கோடிகோடியாக  கொள்ளையடிக்க , மக்களிடம் 
கடந்த  நாற்பது  ஆண்டுகளில்  திராவிட அரசுகள் 

மதுவுக்கு   அடிமையாக்கி , மதியை  இழக்கவைத்து 
நடைப்பிணமாய்  தள்ளாட  வைத்துள்ளார்கள் 

குடி  குடியைக்  கெடுக்கும்  
குடி  குடும்பத்தின்  மகிழ்ச்சியைக்  கெடுக்கும் 

குடி  மெல்ல  மெல்ல  உயிரைக்   குடிக்கும்
குடி  குடும்பத்தை  நடுத்தெருவில்  நிறுத்தும் 

குடியின் மூலம்  வருவாயைப்  (தங்கள்)  பெருக்கி 
தமிழினத்தை  நாசமாக்குவதே  
திராவிட மாடலின்  சாதனையாகும் 

குடிப்பதற்கு  முன்னால்  உங்களின்  சிந்தனைக்கு 
46000 கோடி  ரூபாயை  உங்களிடமிருந்து,  சாமர்த்தியமாக
சுரண்டுகின்ற , உறிஞ்சுகின்ற , அரசின்  
திட்டத்திற்கு  துணைபோகாதீர்கள் 

ஊர்க் குடியைக்  கெடுத்துவிட்டு  தங்கள்  குடி  மட்டும் 
வசதியாக  வாழும்  என்று  யாரும்  கனவு  காணாதீர்கள் 

காலம்  உங்களைக்  கடுமையாக  தண்டிக்கும் 

மதுவிலிருந்து  மீண்டு  வந்து  தமிழர்களே  குடும்பத்தோடு 
மகிழ்ச்சியாக  வாழ  முயற்சி  செய்யுங்கள் 

மதுயெனும்  அரக்கனின்  பிடியிலிருந்து  தமிழினம் 
விடுபடும்  நாளே  எம்  இனத்தின்  திருநாளாகும் 

அந்நாளை  நோக்கி  நம்பிக்கையோடு  நகர்வோம் 

---த .சத்தியமூர்த்தி 

Sunday, 7 May 2023

penne ! vazhga nee pallandu !!

பெண்ணே ! வாழ்க  நீ  பல்லாண்டு !!

மஞ்சளும் , குங்குமம்  சூடி , மணமாலை  கழுத்தில்  ஏந்தி ,
மங்கள  நாண்  பூண்டு , கண்ணுக்கு  ஒத்த 

 கணவனோடு  குடும்பம்  என்னும் , படகில் 
பயணிக்கும்  குலமகளே ! வாழ்க  நீ  பல்லாண்டு !!

கதிரவன்  எழும்பும்  காலை  நேரத்தில்  கன  கச்சிதமாய் 
எழுந்து , குளித்து  நீராடி ,பால் பொங்கவைத்து 

பல்வேறு பலகாரம்  செய்து , வயிறார  படைத்து 
உண்ணும்  அழகைப்  பார்க்கும்  உத்தமியே ! வாழ்க  நீ  பல்லாண்டு !!

குடும்பச்சுமையை , குதூகலத்துடன்  சுமந்து  , 
வருங்காலச்  சந்ததியை  வயிற்றினில்  சுமந்து ,

அதோடு  ஓடியாடி,  வேலையும்  செய்து  தாய்மை 
பூரித்து  நிற்கும்  மனையாலே ! வாழ்க  நீ  பல்லாண்டு !!

பெற்றெடுத்த  குழந்தையை  கையில்  சுமந்து 
வாரியெடுத்து  அமுதமெனும்  பால்  கொடுத்து  

மார்போடு  அணைத்து , மழலை  மொழிபேசும்  
குழந்தைக்கு  முத்தமீந்து , கொஞ்சி  மகிழ்ந்து 

குழந்தையோடு  குழ்நதையாய்  மாறிய  
குலக்கொழுந்தே ! வாழ்க  நீ  பல்லாண்டு !!

பள்ளிக்கு  அனுப்ப  , அத்தனையும்  பார்த்து  பார்த்து செய்து 
வளரும்  குழந்தையோடு  வேலை  செய்த  களைப்பில் 

தேகம்  இளைத்து , வாலிபத்தை  கொஞ்சம்  கொஞ்சமாக 
கடக்கும்போது  கணவன்  , மகள் என  

குடும்பத்துக்காக  கரையும்  மெழுகுவர்த்தியே !
வாழ்க  நீ  பல்லாண்டு !!

நல்ல  வரன்  அமைந்தால்  திருமணத்தை  நல்லபடி 
நடத்திவிட , அதற்கான  முனைப்பில்  

ஜாதகத்தைக்  கையிலெடுத்து , அதற்கான  வேலையில்  
இறங்கி  மகளை  நல்ல இடத்தில்  மணமுடிக்க 

ஓடியாடும்  திருமகளே !
வாழ்க  நீ  பல்லாண்டு !!

மங்கள  நாண்  சூடி மகள் , தன்  மணாளனோடு  
புதுவாழ்வு  துவக்கி  தன்  புது மனையில் 

தாயைபபோலவே  குடும்பம்  என்னும் 
 படகில்  பயணிக்கப்   புறப்பட்டாள்

குடும்பத்திற்காகவே  வாழும்  
குலமகள்களே  ! வாழ்க  நீங்கள்   பல்லாண்டு !!

--த .சத்தியமூர்த்தி