பெண்ணே ! வாழ்க நீ பல்லாண்டு !!
மஞ்சளும் , குங்குமம் சூடி , மணமாலை கழுத்தில் ஏந்தி ,
மங்கள நாண் பூண்டு , கண்ணுக்கு ஒத்த
கணவனோடு குடும்பம் என்னும் , படகில்
பயணிக்கும் குலமகளே ! வாழ்க நீ பல்லாண்டு !!
கதிரவன் எழும்பும் காலை நேரத்தில் கன கச்சிதமாய்
எழுந்து , குளித்து நீராடி ,பால் பொங்கவைத்து
பல்வேறு பலகாரம் செய்து , வயிறார படைத்து
உண்ணும் அழகைப் பார்க்கும் உத்தமியே ! வாழ்க நீ பல்லாண்டு !!
குடும்பச்சுமையை , குதூகலத்துடன் சுமந்து ,
வருங்காலச் சந்ததியை வயிற்றினில் சுமந்து ,
அதோடு ஓடியாடி, வேலையும் செய்து தாய்மை
பூரித்து நிற்கும் மனையாலே ! வாழ்க நீ பல்லாண்டு !!
பெற்றெடுத்த குழந்தையை கையில் சுமந்து
வாரியெடுத்து அமுதமெனும் பால் கொடுத்து
மார்போடு அணைத்து , மழலை மொழிபேசும்
குழந்தைக்கு முத்தமீந்து , கொஞ்சி மகிழ்ந்து
குழந்தையோடு குழ்நதையாய் மாறிய
குலக்கொழுந்தே ! வாழ்க நீ பல்லாண்டு !!
பள்ளிக்கு அனுப்ப , அத்தனையும் பார்த்து பார்த்து செய்து
வளரும் குழந்தையோடு வேலை செய்த களைப்பில்
தேகம் இளைத்து , வாலிபத்தை கொஞ்சம் கொஞ்சமாக
கடக்கும்போது கணவன் , மகள் என
குடும்பத்துக்காக கரையும் மெழுகுவர்த்தியே !
வாழ்க நீ பல்லாண்டு !!
நல்ல வரன் அமைந்தால் திருமணத்தை நல்லபடி
நடத்திவிட , அதற்கான முனைப்பில்
ஜாதகத்தைக் கையிலெடுத்து , அதற்கான வேலையில்
இறங்கி மகளை நல்ல இடத்தில் மணமுடிக்க
ஓடியாடும் திருமகளே !
வாழ்க நீ பல்லாண்டு !!
மங்கள நாண் சூடி மகள் , தன் மணாளனோடு
புதுவாழ்வு துவக்கி தன் புது மனையில்
தாயைபபோலவே குடும்பம் என்னும்
படகில் பயணிக்கப் புறப்பட்டாள்
குடும்பத்திற்காகவே வாழும்
குலமகள்களே ! வாழ்க நீங்கள் பல்லாண்டு !!
--த .சத்தியமூர்த்தி
No comments:
Post a Comment