Saturday, 9 April 2022

Ennam Pol Vazhvu

 எண்ணம்  போல்  வாழ்வு!

வெள்ளத்தனையது  மலரின்  நீர்  மட்டம்  
வாழ்வின்  உள்ளத்தனையது  உயர்வு - வள்ளுவன்  வாக்கு 

நற்சிந்தனையும்,  நல் எண்ணமுமே - நம்மை  
உயர்த்தும்  படைக்கலன்களாகும்  

ஒவ்வொரு  நாளும்  முயற்சி  செய்ய  முன்னேற்றம் 
இலக்கை  நோக்கி  நகர்வதே  வெற்றியின்  இரகசியமாகும்

தனி  மனிதனின்  வெற்றியை  அவன்  உழைப்பு  தீர்மானிக்கும்  
ஒரு  சமூகத்தின்  வெற்றியை  நல்ல  தலைமை  தீர்மானிக்கும்  

ஒரு  நாட்டின்  வெற்றி  மக்களின்  பொருளாதாரத்தை  உயர்த்தும் 
நல்லோழுக்கமும் நற்பண்புகளும்  மக்களின்  வாழ்வாதாரத்தை
உயர்த்தும் 

படித்த  சமூகம்  வெறும்  பணத்தை  சம்பாதிக்கும்  - ஆனால்  
பண்பான  சமூகம்  தான்  நல்ல  தலைமுறையை  உருவாக்கும் 

வாடிய  பயிரைக்  கண்டபோது  வாடினேன் 
என்ற  வள்ளலாரின்  எண்ணம்  தான்
 
 அணையா  அடுப்பை  ஏற்றி  வைத்து 
 மக்களின்  பசிப்பிணியை  அணைத்தது

வெற்றிக்  கோட்டைத்  தொடுவது  தான்  நம்  
எல்லோரின்   இலட்சியமாகும்

ஒவ்வொரு  மனிதனின்  உயர்ந்த  எண்ணமே  
நம்  தேசத்தைப்  பாதுகாக்கும்  அரணாகும் 

நல்லதே  நினைப்போம் ! நல்லதே  செய்வோம் !!
நமக்கு  நல்லதே  நடக்கும் !!!

---த .சத்தியமூர்த்தி 

No comments:

Post a Comment