வாழ்க்கை -10
வாழ்வைப் புரட்டிப் போடும் மூன்று காரணிகள்
அவை பிணி மூப்பு மரணம்
திடமான மன உறுதி இருந்தால் எந்த
வியாதியையும் விரட்டியடிக்கலாம்
கடந்து போன காலம் தரும்
கசப்பான பரிசு மூப்பு
தியானம் , எளிய உடற்பயிற்சி ,
அளவான உணவால் , வயோதிகத்தை வெல்லலாம்
வாழ்க்கையில் சந்தித்தே தீரவேண்டிய
கடைசி அனுபவம் மரணம்
மரணத்தின் தருவாயில் வாழ்வின்
மகோன்னதம் புரிகிறது
சமாதியின் முன்னிலையில்
சகலமும் புரிகிறது
தீராப்பசியோடு இருந்த நெரும்பு
உடலை விழுங்குகிறது
பற்றி எரிந்தப் பின்னர்
சாம்பல் மிச்சமாயிற்று
மனிதனின் வாழ்வை இந்த மரணம்
முடித்து வைக்கிறது
அழிகின்ற உடல் கொண்டு
அன்றாடம் ஆயிரம் நடிப்பு !!
உடலென்பது உண்மையில் மறைகின்ற பதிப்பு !!
மற்றொரு உடலோடு கலந்தாடும் களிப்பு !!
உடலாலே செய்த பிழை ஆறாத தழும்பு !!
கிடைப்பதற்கு அரிது இந்த மானிடப்பிறப்பு..
நீ மனிதனாக பிறந்ததால் யாருக்கு சிறப்பு ?
"ஊருக்கு உணவளிக்கும் உத்தமரை,
நாட்டுக்கு நலம் சேர்க்கும் நல்லவரை ,
மரணத்திற்கப்பாலும் மக்கள் நினைப்பர்
வாழ்வின் இலக்கணமே இது தான் !!"
-----த .சத்தியமூர்த்தி