Saturday, 10 July 2021

இரு சாராருக்கும் கனிவான வேண்டுகோள்-3

 இரு சாராருக்கும்  கனிவான  வேண்டுகோள்-3 

தமிழீழம்  ஒன்றே  ஈழமக்களின்  விடுதலைக்கான 
ஒரே  வழி  என்று  இறுதியாக  தீர்மானித்து, 

கட்டுகோப்பான ,  ஒழுக்கமான , ஒரு  நல்ல 
மக்கள்  இராணுவத்தைக்  கட்டமைத்து ,

சிங்கள  பேரினவாதத்தை  நடுநடுங்க  வைத்து , 
 தமிழர்  நிலப்பரப்பை  பல காலம்  பாதுகாத்து ,
 
ஈழ மக்களின்  காவல்  தெய்வமாக  வலம் வந்து ,
கடமையுணர்வோடு , களப்பணியாற்றி ,

 இறுதிக்கட்ட  யுத்தத்தில்  தன்  குடும்பம்  முழுவதையும் 
பலிகொடுத்து ,  தியாகம் , வீரம் , இவற்றின் 
சின்னமாய்  விளங்கும் 

மேதகு மாவீரன்  பிரபாகரனின்  பிம்பத்தை    
உலகில்  எந்த  கொம்பனாலும்  உடைக்க  முடியாது !!!

மோடியின்  வெறுப்பு  என்னும்  ஒற்றைக்  காரணத்தால் ,
 
தமிழக  மக்களால்  அலங்கரிக்கப்பட்ட  
ஆட்சிக்கட்டிலில் , அமர்த்தி  அழகுபார்க்கப்பட்ட 

தி .மு .க  அரசு  இதைக்   கண்டும்  காணாமல் 
இருப்பது  மிகுந்த  கவலையளிக்கிறது .

ஈழ  விடுதலைப்பற்றியும் , அம்மக்களை 
 பாதுகாத்த  இயக்கத்தைப் பற்றியும் , 

தவறாக  பிரச்சாரம் செய்வதை   நேர்மையான
திராவிடப்  பற்றாளர்கள் எவரும் 
 ஏற்றுக்கொள்ள மாட்டார்கள் ..

----வேண்டுகோள்  தொடரும் 

த .சத்தியமூர்த்தி  




No comments:

Post a Comment