Saturday, 31 July 2021

ezhathin enraiya nilai

 ஈழத்தின் இன்றைய  நிலை 

மீண்டும்  மீண்டும்  ஈழம்  பற்றிப்  பேச 
என்ன  இருக்கிறது ?

ஈழம்  முடிந்து  போன  கதையென்று  
சிங்களம்  கொக்கரிக்கிறது.

சொந்த  நாட்டு  மக்களையே  ரசாயன  குண்டு  போட்டு 
கொன்றக்   கொடுமை  ஈழத்தில்  நடந்தது 

ஏதோ  இலங்கையில்  என்றோ  நடந்தது 
என எண்ண  வேண்டாம் . 

இலங்கையைத்  தொடர்ந்து  இக்கொடுமை  
எங்கு  வேண்டுமானாலும்  நாளை  ஏற்படலாம் 

இன்னுமும்  ஐ .நாவில்  வெட்கமில்லாமல்  இலங்கையை 
மனசாட்சியற்ற  நாடுகள்  பாதுகாக்கிறது 

தமிழ்  மண்ணில்  சிங்கள  குடியேற்றம் 
வெற்றிகரமாய்  தொடர்கிறது 

நிலத்தை , வீட்டை ,தொழிலை ,உடைமையை 
எல்லாம்  இழந்து,  நடைபிணமாய்  தமிழினம் 

பயத்தில் , பதட்டத்தில் , நிம்மதியற்று 
கேட்பாரற்றுக்   கிடக்கிறது.

பக்கத்திலே  இருந்தும் , பரிதாபப்படும்  நிலையில்  தான் 
தமிழகம்  தலை  குனிந்து  நிற்கிறது .

தமிழத்தில்  உதித்த  சூரியன்  போல்  
தமிழீழத்திலும்  ஒருநாள்  விடியல்  உதிக்கும் 

கொல்லப்பட்ட  எம்  தமிழ்மக்கள்  விதையாய் விழுந்து
விருட்சமாய்  வளர்ந்து  வீரியத்தோடு  வருவார்கள் 

இலங்கையை  ஆண்ட  தமிழ்  வேந்தன்  இராவணனை  போல் ,
தமிழீழம்   ஆளும்  எழுச்சி  மிகு  தலைவனைக்  
காண  காலத்தோடு  சேர்ந்து  
நாமும் காத்திருப்போம்  

----த .சத்தியமூர்த்தி 

  











  





  

Wednesday, 28 July 2021

Penniyam Pesuvom part-4

பெண்ணியம்  பேசுவோம் -4 

ஆணுக்குப்   பெண்  அடிமை  
அடுப்படியில்  கிடப்பதே  பெண்ணுக்கு  பெருமை 

நாலு  சுவற்றுக்குள்  அடைபட்டுக்  கிடப்பதே  பெண்ணின்  நிலைமை 
பெண்ணுக்குக்   கல்வி  மறுப்பு 

 ஆணைச்சார்ந்தே  ஆயுளுக்கும்  கிடக்கவேண்டும் 
கணவன்  இறந்தால்  அவனோடு  உடன்கட்டை  ஏற வேண்டும்

பெண்ணுக்கு  சொத்துரிமை  கிடையாது 
பெண்ணுக்கென்று  தனிக்கருத்து  கூடாது 

விதவை  மறுமணம்  ஆச்சாரத்துக்கு  கேடு 
பருவமெய்து முன்னே  கொடிய  பால்ய விவாகம்

இப்படியெல்லாம்  கடந்த  காலத்தில் 
 கொழுப்பெடுத்த  ஆணினம்  
பெண்ணை  வீட்டிற்குள்  பூட்டி வைத்து
அடுக்கடுக்காய்  கொடுமை  செய்தது..

கீழ்  வான்  உதித்த  சூரியன்  போல்  
பாரதி  பெண்  விடுதலைப் பேசினான் 

பகுத்தறிவுப்  பகலவன்  தந்தை  பெரியாரும் 
பெண் விடுதலைக்கு  களம்  கண்டு  போராடினார் 

இராஜாராம்  மோகன் ராய்  எரியும்  நெருப்பிலே  
பெண்ணை  உயிரோடு  கொளுத்தும் கொடுமைக்கு
கடுமையான  சட்டம்  கொண்டுவந்து 
உடன்கட்டைக்கு  முற்றுப்புள்ளி  வைத்தார்..

சிறைப்பட்டுக்  கிடந்த பறவைக்  கூட்டை  திறந்ததும் 
தன்  சிறகை  விரித்து  வானில்  மகிழ்வுடன்  
வலம்   வருவது  போல்
 
அடைப்பட்டுக்கிடந்த  பெண்ணினம் 
கொஞ்சம்  கொஞ்சமாய்  விழிப்படைந்து 

கல்வியெனும்  அஸ்திரத்தைக்  கையில்  எடுத்து 
கம்பீரமாய்  உலா  வரத்துவங்கியது    

பெண்ணியம்  பேசப்படும்...

---த .சத்தியமூர்த்தி 


Saturday, 24 July 2021

Thittamidal

திட்டமிடல்  

அறிவை  வளர்த்துக்கொள்ள  நல்ல  நல்ல 
நூல்களை  நாள்தோறும்  படிக்க  திட்டமிடல்  வேண்டும்

ஆரோக்கியம்  பெருக   நல்ல  நல்ல 
பழக்கங்களை  கை  கொள்ள  திட்டமிடல்  வேண்டும் 

முதுமையில்  மகிழ்ச்சிக்கு  
இளமையில்  திட்டமிடல்  வேண்டும் 

நாட்டின்  வளர்ச்சிக்கு  அரசாங்கம்  நல்ல நல்ல 
திட்டங்களை  உருவாக்க  திட்டமிடல்  வேண்டும் 

செலவைக்  குறைத்து  சேமிப்பை  வளர்க்கும்  நல்ல 
  வாழ்வியலை  கையாள  திட்டமிடல்  வேண்டும் 

வணிகத்தைப்  பெருக்கிக்  கொள்ள  நல்ல  நல்ல  
வாய்ப்புக்களை  ஏற்படுத்த  திட்டமிடல்  வேண்டும் 

வசதியை  அதிகரிக்க  நல்  வழியில்  
வருமானத்தை  அதிகரிக்க  திட்டமிடல்  வேண்டும் 

மக்கள்  எல்லோரும்  ஒன்றுபட்டு  உழைக்க 
நல்லாட்சி  மலர  திட்டமிடல்  வேண்டும் 

ஜனநாயகப்  பண்புகளைப்  பாதுகாக்கும்  நல்ல  
அரசாங்கம்  அமைய  திட்டமிடல்  வேண்டும் 

ஜாதி  மத  பேதங்கள்  கடந்து  சமூக  நீதிக்காக
மக்கள்  திரள  திட்டமிடல்  வேண்டும் 

ஏற்ற  தாழ்வு  இல்லாத  சம  தர்ம  சமுதாயம்  மலர 
இளைய  தலைமுறை  ஒன்றுகூடி  திட்டமிடல்  வேண்டும் 

ஒன்றுபட்டு  எல்லோரும்  ஒற்றுமையாய்  வாழ  நம்முள்
  இருக்கும்  பேதங்கள்  களைய  திட்டமிடல்  வேண்டும் 

மக்களை  மதிக்கின்ற  மக்களாட்சி  மலர்ந்ததென்று 
மகிழ்ச்சியில்  திளைக்க  திட்டமிடல்  வேண்டும் 

-----------------த .சத்தியமூர்த்தி 



 





Saturday, 17 July 2021

இரு சாராருக்கும் கனிவான வேண்டுகோள்-4

இரு  சாராருக்கும்  கனிவான  வேண்டுகோள் -4

தமிழகத்தில்  திராவிடத்தின்  வாக்கு வங்கி  80% இருக்க 
யாரைப்பார்த்து, எதற்க்காக  தேவையற்ற  வீண்  அச்சம் ?

சங்கிகள்  மகிழ்ச்சியடையும்  வகையில், 
 இனவிரோத  நடவடிக்கையில்  யாரும்  ஈடுபடாதீர்கள் 

தமிழகத்தையும், தமிழர்களையும்  பிரித்தாளும் 
சூழ்ச்சிக்கு  தெரிந்தோ,  தெரியாமலோ , யாரும்  
துணைபோகாதீர்கள்      

மதத்தை வைத்தோ,  ஜாதியை  வைத்தோ,
தமிழக மக்களிடம் அரசியல்  நடத்த  முடியாது 

என்பதையே  நடந்து  முடிந்த 
 சட்டசபைத்  தேர்தல் 
எதிரொலித்தது 

மக்களுக்காக  நல்லாட்சி  தரவேண்டும்  என்ற 
முனைப்புடன்  செயல்படும்  மாண்புமிகு  முதல்வர் 
தளபதியாரின் 
கரத்தை  வலுப்படுத்துங்கள் 

திராவிடமோ,  தமிழ்தேசியமோ,  தங்கள்
  கொள்கைகளை   மக்களிடம்  கொண்டு  செல்லுங்கள் 

மக்களின்  தீர்ப்புக்கு  தலைவணங்குங்கள் 

மறைந்த  மாபெரும்  தலைவர்களை , 
அவர்களின்  உழைப்பை , தியாகத்தை , 
தங்கள்  நலனுக்காக   வசைப்பாடாதீர்கள்

இதுவே  இருசாராருக்கும்  
தமிழின்பால்,  தமிழினத்தின்பால் ,
கொண்ட  பற்றின்பால்  வைக்கும் 

கனிவான  அன்பு  வேண்டுகோள் -

த .சத்தியமூர்த்தி  




Saturday, 10 July 2021

இரு சாராருக்கும் கனிவான வேண்டுகோள்-3

 இரு சாராருக்கும்  கனிவான  வேண்டுகோள்-3 

தமிழீழம்  ஒன்றே  ஈழமக்களின்  விடுதலைக்கான 
ஒரே  வழி  என்று  இறுதியாக  தீர்மானித்து, 

கட்டுகோப்பான ,  ஒழுக்கமான , ஒரு  நல்ல 
மக்கள்  இராணுவத்தைக்  கட்டமைத்து ,

சிங்கள  பேரினவாதத்தை  நடுநடுங்க  வைத்து , 
 தமிழர்  நிலப்பரப்பை  பல காலம்  பாதுகாத்து ,
 
ஈழ மக்களின்  காவல்  தெய்வமாக  வலம் வந்து ,
கடமையுணர்வோடு , களப்பணியாற்றி ,

 இறுதிக்கட்ட  யுத்தத்தில்  தன்  குடும்பம்  முழுவதையும் 
பலிகொடுத்து ,  தியாகம் , வீரம் , இவற்றின் 
சின்னமாய்  விளங்கும் 

மேதகு மாவீரன்  பிரபாகரனின்  பிம்பத்தை    
உலகில்  எந்த  கொம்பனாலும்  உடைக்க  முடியாது !!!

மோடியின்  வெறுப்பு  என்னும்  ஒற்றைக்  காரணத்தால் ,
 
தமிழக  மக்களால்  அலங்கரிக்கப்பட்ட  
ஆட்சிக்கட்டிலில் , அமர்த்தி  அழகுபார்க்கப்பட்ட 

தி .மு .க  அரசு  இதைக்   கண்டும்  காணாமல் 
இருப்பது  மிகுந்த  கவலையளிக்கிறது .

ஈழ  விடுதலைப்பற்றியும் , அம்மக்களை 
 பாதுகாத்த  இயக்கத்தைப் பற்றியும் , 

தவறாக  பிரச்சாரம் செய்வதை   நேர்மையான
திராவிடப்  பற்றாளர்கள் எவரும் 
 ஏற்றுக்கொள்ள மாட்டார்கள் ..

----வேண்டுகோள்  தொடரும் 

த .சத்தியமூர்த்தி  




Sunday, 4 July 2021

இரு சாராருக்கும் கனிவான வேண்டுகோள்-2

 இரு சாராருக்கும் கனிவான வேண்டுகோள்-2

ஈழத்து  சகோதரர்களை  தமிழகத்திற்கு 
அழைத்து  வந்து , அன்றைய  இந்திய  அரசு 

ஆயுதப்  பயிற்சி  அளித்தது   இன்றைய 
இளைஞர்களுக்கு  தெரிய  வாய்ப்பில்லை ..

மறைந்த  மக்கள்  திலகம்  M.G.R  அவர்கள் 
ஈழ  விடுதலைக்காக  பெரும்  தொகையை
  
புலிகளுக்கு  நிதியாக  வாரி  வழங்கினார் ..
இதெல்லாம்  கடந்த  கால  வரலாறு. 

ஈழ  மண்ணில்  90,000 விதவைகள்  தங்கள் 
வாழ்வுக்காக , இன்றும்  போராடுகிறார்கள் .

முள்ளி  வாய்க்கால்  படுகொலையை 
முன்னின்று  நடத்திய  மாபாவிகளிடம் ,

இனவெறிப்  பிடித்த  சிங்கள  மக்கள்  மீண்டும் 
ஆட்சி  அதிகாரத்தைக்  கொடுத்துள்ளார்கள் .

ஈழப்  படுகொலை  நடந்து  ஆண்டு  பல 
கடந்தும்  பாதிக்கப்பட்ட  அம்மக்களுக்கு ,

சர்வதேச  சமூகத்திடமிருந்து  நீதி  கிடைக்கவில்லை !!!
  
இதைப்பற்றியெல்லாம்  பேசாமல் ,
 
திராவிடம் 2.0 , அரக்கன் என  புதுப்புது  பெயரில்
அரைவேக்காட்டு , அதிமேதாவிகள் 

ஈழ  விடுதலை  நெடும்  வரலாற்றை  முழுவதும் 
படிக்காமல்  ஏதேதோ  பிதற்றுகிறார்கள் . 

புலிக்கொடியோடு  தமிழகத்தில்  வலம் வந்த
நாம்தமிழர் 

புலித்தலைவரைக்  கொச்சைப்படுத்தும்  போது ,
ஆவேசமாக  பேசாமல்  அமைதி  காப்பது  
ஆச்சரியமளிக்கிறது  !! 

  -----வேண்டுகோள்  தொடரும்----

த . சத்தியமூர்த்தி