Sunday, 27 June 2021

இரு சாராருக்கும் கனிவான வேண்டுகோள்-1

 இரு சாராருக்கும்  கனிவான  வேண்டுகோள்-1

தமிழ்  மொழிக்காகவும் , தமிழ்  இனத்திற்காகவும் ,
ஈழத்   தமிழரின்   இன்னலுக்காகவும் ,
 
வாழ்நாள்  முழுவதும்  பல்வேறு  
போராட்டங்களை  முன்னெடுத்தவர்கள் 
திராவிடர்  கழக , திராவிட  முன்னேற்றக்  கழகத்தார் ..
  
தந்தை  பெரியார் , பேரறிஞர் அண்ணா ,
முத்தமிழறிஞர்  கலைஞர் போன்ற
 
மாபெரும்  தலைவர்களின்  பிம்பத்தை  உடைப்போம் 
என  தமிழ்  தேசியம்  பேசுவதும் ,

வரலாற்றை  மறைக்கப்  பார்ப்பதும் ,
வரலாற்றை  மாற்றப்  பார்ப்பதும் ,

விந்தையிலும்  விந்தை !! 

புலிகளைக்  காரணம்  காட்டி 
திமுக  ஆட்சியைக்  கலைத்ததும் ,

கலைஞரும் , பேராசிரியரும்  சட்டமன்ற 
உறுப்பினர்  பதவியைத்  துறந்ததும் ,

டெசோ  மாநாடு  நடத்தி  இலங்கைப்  பிரச்சனையை 
தமிழகம்  முழுக்கக்   கொண்டு சென்றதும் ,

சமூகநீதி  , சுயமரியாதை , சமத்துவம் 
போன்றவற்றைக்  கட்டமைத்ததும் , 

தமிழகத்தை  வளர்ச்சிப்   பெற்ற
மாநிலமாக  மாற்றியதும் ,

திராவிடத்தின்  சாதனை 

இலங்கையில்  
கணவன்  கண் முன்னே , மனைவியைக்  கற்பழித்ததும் ,
சகோதரன்  கண் முன்னே , சகோதரியை  நிர்வாணப்படுத்தியதும் , 

தமிழனின்  தொடை  கறி  விற்கப்படும் 
என  பதாகைக்   கட்டியதும் ,

வெறிபிடித்த  வேட்டை  நாயைப்போல  தமிழினத்தை 
கருவருத்த  சிங்கள  இராணுவத்தை  எதிர்த்து

முப்பது  ஆண்டுகாலம்  அரசியல்  வழியில் 
போராட்டம்  நடத்தி  இனிவேறு 
வழியே  இல்லையென்றக்   கட்டத்தில் 

ஈழ  விடுதலைக்கும் , ஈழ  மக்களைக் காக்கவும் ,
அங்குள்ள  நம்  சகோதரர்கள் 

ஆயுதம்  ஏந்தினார்கள் 
  
-----வேண்டுகோள்  தொடரும்..

த . சத்தியமூர்த்தி  
 



  

 


 
 




 

No comments:

Post a Comment