Sunday, 30 May 2021

மீண்டும் மீண்டும் கொரோனா ஏன் ?

மீண்டும்  மீண்டும்  கொரோனா  ஏன் ?

இரும்புப்   பெட்டிக்குள்
  பணத்தைப்  பூட்டி வைத்து
மனதை  இரும்பாக்கிய  சில  தனவான்களாலே 

தான  தர்மங்கள் 
 கொஞ்சமாகி  
அரிதிலும்  அரிதாய்   போனதாலே

தொழிலாளரைச்  சுரண்டி
  கொள்ளையடிக்கும்  முதலாளிகள்  
சிலரின்  பேராசையாலே 

மனித  நேயமின்றி  மக்களையெல்லாம்  
ஏய்ச்சிப்  பிழைக்கும் 
 கார்ப்பரேட்டுகளாலே 

அரசியலுக்குள்  மதத்தைக்  கலந்து  
மக்களைப்  பிரிக்கும்  
 சூழ்ச்சியினாலே  

இலாபம்  ஒன்றையே  பெரிதாய்  எண்ணி 
 நேரம் பார்த்து கொள்ளையடிக்கும் 
சில  வியாபாரியினாலே 

தடுப்பூசிக்கும்  வரியைப்  போடும்  
மனசாட்சியற்ற 
 மைய  அரசினாலே 

பிஞ்சு  சிறார்களிடம்  
கொஞ்சும்  மொழிபேசும் 
கொழுப்பெடுத்த  சில  ஆசிரியராலே 

பிரித்துக்  கொடுக்கும் பாங்கு  இல்லாமல் 
கிடைத்ததையெல்லாம்  மொத்தமாய் 
சுருட்டுவதாலே 

ஆன்ம  நேயமின்றி
  பணத்தாசைப்  பிடித்து 
ஆளாய்ப்  பறந்து   அலைவதனாலே  

சத்தியத்தை  மறந்து  
அத்தனைப்  பாவத்தையும் 
ஆசை  ஆசையாய்  செய்வதனாலே

-----இன்னும்  எத்தனை  எத்தனையோ !!!

த .சத்தியமூர்த்தி  

 

   
    
 

Saturday, 22 May 2021

Meendum Corona

மீண்டும் கொரோனா  

கூண்டுக்குள்  அடைப்பட்ட  கிளிகளைப்  போல , மீண்டும் 
 எம்மக்கள்  வீட்டிற்குள்  முடங்கிப்  போனார்கள் 

இரண்டாம்  அலையின்  தாக்கம்  வேகமாக  
மக்களை  நிலை  குனியச்  செய்கிறது 

அத்தனை  மாநிலத்திலும்  கோலோச்ச  வேண்டுமென்று 
தேர்தலில்  , ஆட்சி அதிகாரத்தில் , அக்கறைக்காட்டிய
 
மையஅரசு ஆக்சிஜன்  தயாரிப்பில்  , அதன் 
கையிருப்பில்  ஏன்  ஆர்வம்  காட்டவில்லை ?

கீழ்  வான்  உதித்த  சூரியன்  போல்  
தமிழகத்தில்  நடைபெற்ற  ஆட்சி மாற்றம்

எம் மக்கள்  மனதில்  எத்தனையோ  
நம்பிக்கை  வெளிச்சத்தை  ஏற்படுத்தியுள்ளது 

கொடூரமாக  கொல்லுகின்ற  இக்கொடிய 
தொற்றிலிருந்து  மக்களைக்  காப்பதே 
இப்புதிய  அரசின்  தலையாய  கடமையாகும் 

பொது  இடத்தில்  கட்டாயம்  முகக்கவசம்  அணிந்து 
இடைவெளியைக்  கடைப்பிடிக்கவும் 

கூட்டம்  கூட்டமாய்  கூடுவதைத்   தவிர்த்து
விலை  மதிப்பில்லா  உயிரிழப்பைத்  தவிருங்கள் 

எல்லோரும்  நம்பிக்கையோடு  ஒருங்கிணைந்து
 
இக்கொடிய  நோயை  இந்தியாவை  விட்டு 
விரட்டினோம்  எனும்  வெற்றிச்செய்தியை 
 
உலகுக்கு  உரத்தக்குரலில்
  எடுத்துச்  சொல்லும்
நாளை  ஆவலுடன்  எதிர்ப்பார்போம் 

---த .சத்தியமூர்த்தி  
 




 




   


 

Saturday, 15 May 2021

கவலை இல்லா மனிதன்

 கவலை  இல்லா மனிதன் 

கவலையில்லா  உள்ளம்  ஏது ?

மழலையாய்  மண்ணில்  தவழுமட்டும் 
அன்னையின்  அரவணைப்பில்  இருந்தமட்டும் 
எந்த எதிர்பார்ப்பும்  இல்லாதமட்டும்
நமக்கு  கவலையில்லை !

வளர்ந்த  பின்போ  
கவலையில்லா  நாளில்லை 

படித்து  பட்டம்  வாங்கினாலும் 
அலைந்து திரித்து வேலைக்காக  
ஆளாய்  பறந்தபோதும்

வேலையில்லை  என்னும்போது 
கவலைவந்து  சூழுது  

 காலம்  முழுதும்  உழைத்தாலும் 
கால்வயிற்றுக்கஞ்சிக்கும் 

ஆளாகப்   பறக்கும்போது  
வாழ்க்கை  இங்கு  கசக்குது 

காலமெல்லாம்  ஏங்க வச்சி 
கண்டபடி  சுத்த  வெச்சி
 
கண்ணுக்கு  பிடிச்ச பெண்ணுக்கு
  கல்யாணம்னு  தெரிஞ்சதுமே 
கவலை வந்து சூழுது 
  
பணம்  படைத்தக்  கூட்டத்துக்கும் 
பிணி  பிடித்து  ஆட்டும்போது
படாதபாடு  படுகிறது 

காலை  மாலை  வேளை  தோறும் 
கடவுளையே  கும்பிட்டும் 
பக்தன்  உள்ளம்  கலங்குது 

 பகுத்தறிவு  பேசிக்கிட்டு
நாத்திகனாய்  நடமாடும்  
நண்பருக்கும் கவலையுண்டு 

   அத்தனை  கவலைக்கும்  அஸ்திவாரம்  எது ?
ஆசை  ஆசை  ஆசை  தான் 

த .சத்தியமூர்த்தி 

Saturday, 8 May 2021

சேரிக்கு என்று விடியல் ?(3)

சேரிக்கு  என்று  விடியல் -3 

வறுமையின்  விளிம்பிலே  
வாழவைக்  கடப்பவர்கள் 

இருளிலே  பெரும்  பொழுது 
இன்னலைச்  சந்திப்பவர்கள் 

வெளிச்சத்தின்  கீற்றுக்காக
ஏங்கித்  தவிப்பவர்கள் 

நாளெல்லாம்  உழைத்தும் 
ஓரடிக்கூட முன்னேறாதவர்கள் 

தலைமுறை  தலைமுறையாக  ஏழையாகவே 
வாழ்ந்து  மடிந்தவர்கள் 

தந்தைப்  பெரியார் , பேரறிஞர்  அண்ணா 
முத்தமிழறிஞர்  கலைஞர்  மூவரின்

கூட்டணியால்  தமிழகத்தில்
தீண்டாமை  ஒழிந்தது 

சமத்துவம்  பிறந்தது 
சமூகநீதி  மலர்ந்தது 

குடிசைமாற்று  வாரியம்  முலம் 
குடிசையை  அகற்றி  
கோபுரத்தில்  உயர்த்தி  பார்த்து  மகிழ்ந்தது 

அரசியலமைப்பு  சட்டம்  இயற்றிய 
அண்ணல்  பாபா  சாகேப்  அம்பேத்கர்க்கு 

இதுபோல  தளபதிகள்  அடுத்தடுத்து  
தோன்றாததால் 

ஏனைய  இந்தியாவில் இன்னும்  இச்சமூகம் 
எல்லா நிலையிலும்  தாழ்ந்துக்  கிடக்கிறது 

எல்லோரும்  கல்விக்  கற்று 
ஏற்றமுடன்  வாழக்  கற்றால்

சேரிக்கும்  விடிவு  உண்டு
செல்வம்  வந்து  சேரும்  அங்கு 

---த.சத்தியமூர்த்தி  
      








 












       

Saturday, 1 May 2021

சேரிக்கு என்று விடியல் ?(2)

 சேரிக்கு  என்று  விடியல் ?(2)

குப்பைகளைக்  கொண்டு வந்து 
வீதி  நடுவில்  கொட்டிப்புட்டு

சாக்கடையின்  ஓரம்  இவங்க  வீடுங்க 
இந்த  சாதிஜனம்  ரொம்ப  ரொம்ப  பாவங்க 

குழாயடி  சண்டை  உண்டு 
குடித்து  விட்டு  ஆட்டமுண்டு 

கலவரங்கள்  ஆவதுண்டு  
கலாட்டாக்கள்  தொடர்வதுண்டு 

அடிதடி  அமர்க்களங்கள்  
அன்றாடம்  நடப்பதுண்டு 

அத்தனையும்  சகித்துக்கொண்டு 
இங்கிருக்க  ஜனங்களுண்டு 

படிக்கிற வயதினில்  
வேலைக்கு  அனுப்பி விட்டு

கிடைக்கிற  கூலியிலும்  
குடிக்கிற  தகப்பனுண்டு 

படிக்க  முடியாமல் 
படுத்து  ஓய்வெடுக்க  முடியாமல் 

பாட்டுச்சத்தம்  மாறி  மாறி  
சேரி  முழுக்க ஒலிப்பதுண்டு 

படிப்பறிவின்மையால்  
வாழ்வை  தொலைத்தவர்கள்  

அடியாளாய் இருந்தே 
அநியாயமாய்  ஏமாற்றப்பட்டவர்கள் 

---த.சத்தியமூர்த்தி