பெண்மை
மஞ்சள் செய்ததோர் மகிமை
மனம் பறித்ததோர் எழில் பதுமை
பாவை உடலின் செழுமை
பார்க்கும் கண்களுக்கு இனிமை
பூத்து நின்றதோர் இளமை
புவனம் யாவிற்கும் ஓர் புதுமை
காதலிக்காக காத்து இருப்பது மகிமை
காதலியை மனைவியாய் அடைவது பெருமை
கண்டபடி மனம் அலைந்தால் காண்பது சிறுமை
மனம் திறந்து பேசிவிட்டால் மாறிவிடும் நிலைமை
மங்கையரை மகிழ்ச்சியுடன் வாழ வைப்பது கடமை
பெண்மை என்றும் ஆணுக்கு அடிமை
என பேசித்திரிந்தது மடமை
மங்கையவள் சுதந்திரம் மதித்திடுதல் நன்மை
என்றாலும் கட்டியவள் காலமெல்லாம்
கணவனுக்கே உடைமை
மொத்தத்தில் பெண்மை என்பதே பெருமை
பெண்மையை மதிப்பதே காலத்தின் கடமை !!
----த .சத்தியமூர்த்தி