Sunday, 31 July 2022

Petrorgalin Kavanathirku

 பெற்றோர்களின்  கவனத்திற்கு 

தாலாட்டி , சீராட்டி , கண்போல்  வளர்த்த பிள்ளைகளைப்  
பள்ளியில்  சேர்க்கும்  போது  பெற்றோர்கள் அதிக 
கவனம்  செலுத்த வேண்டும்

கார்ப்பரேட்  பள்ளிகளின் அட்டூழியங்களுக்கு எப்படியாவது 
 அந்தப்  பள்ளியில்  தங்கள்   பிள்ளைகளைச் சேர்க்க  வேண்டும் 
என்ற  பெற்றோர்களின்  முனைப்பும்   ஒரு காரணமாகும் 

 அருகில்  இருக்கும் பள்ளியைத்   தவிர்த்துவிட்டு  பெண் பிள்ளைகளைக் 
கல்விக்காக  வெகுதூரம்  அனுப்புவதைத்  தவிர்க்க  வேண்டும் 

பணம்  ஆதிக்கம்  செலுத்தும்  ஒரு  சமூகத்தில்  நம்  பிள்ளையைப் 
பாதுகாப்பான  பள்ளியில்  சேர்ப்பது  நமது  பொறுப்பும்  கடமையுமாகும் 

எளியோரைத்  தாழ்த்தி ,வலியோரை  வாழ்த்தும்  வழக்கமான 
சமூகத்தில்   குற்றப்  பின்னணியுடைய  பள்ளியில்  தொடர்ந்து  நம் 
குழந்தைகளைச்  சேர்ப்பது  எத்தனை  கொடுமையானது ?

காலப்  போக்கில்  எதையும்  மறப்பதால்   இது போன்ற
தவறுகள் தொடர்கதையாகிறது   
 
காலம்  எப்போதும்  கயவர்களுக்கு  துணை  போகாது
 
மக்களின் எழுச்சிக்கு  முன்பாக   எந்த  கூட்டமைப்பும் 
எந்த  பள்ளியையும்  காப்பாற்ற  முடியாது  

தர்மதேவதையின்   கண்கள் கட்டப்பட்டிருந்தாலும்  
நீதிதேவனின்  தண்டனையிலிருந்து  தப்ப  முடியாது 

பெற்றோர்கள்  தங்கள்  பிள்ளைகளிடம்  மனம்  விட்டு  
நண்பர்கள்  போல்  பழக  வேண்டும்

மதிப்பெண்களுக்குத்   தரும்  மதிப்பை விட  
மகளின் பாதுகாப்பில்  தனி  கவனம்  செலுத்துங்கள் 

 அரசுப்  பள்ளியில்  படித்த  ஐயா அப்துல்கலாம்  அவர்கள்  
விஞ்ஞானியாகி , குடியரசுத்   தலைவரானார் 

விழிப்புணர்வோடு  செயல்படுங்கள் 
பொறுப்புணர்ந்து  பிள்ளைகளைப்  பாதுகாத்துக்  கொள்ளுங்கள் .

---த .சத்தியமூர்த்தி  

No comments:

Post a Comment