Sunday, 3 July 2022

Adambara Thirumanangal

 ஆடம்பரத்  திருமணங்கள் 

ஒரு  இரவில்  படோடாபம்  காட்ட  பல  
இலட்சங்கள் வாரி  இறைத்து  திருமணம்  
செய்ய யாரிட்டது  கட்டளை ?

பக்கத்தில்  இருப்பவனைப்  பார்க்கக்கூட  மனமில்லாத  
மனம்  படைத்தோர்  கல்யாணத்தில்  மட்டும்  
கவலையில்லாமல்   செலவு செய்வது  யாருக்காக ?

சாப்பிட  ஆரம்பிக்கும் போது இலையில்  வைக்க 
ஆரம்பித்தவர்கள்  சாப்பிட்டு  முடியும்  போதும்  யாருக்காக  வகைவகையாய்  வைத்துக்கொண்டே  போகிறார்கள் 

 பாதிக்கும்  மேலாக  இலையுடன்  குப்பைக்கு  
போகும்   உணவு வகைகளை  பசியோடு  இருக்கும்  
 பாமரனுக்கு  பகிர மனம்  உண்டா  ?

  சிக்கனமாய்  செய்யுங்கள் என  சொல்ல  வரவில்லை 
தேவைக்கு  மேலே  வீண்  செலவு  எதற்காக ?

படிப்புக்காக , மருத்துவத்திற்காக , சமூகநலத்திற்காக  ,
இன்னும்  அரசாங்கத்திடம்  உதவி  கேட்கும்   நிலையில் 
மக்கள்  உள்ளார்கள் 

திருமனச்  செலவில்  ஒரு   பகுதியை  இதுபோல 
நல்ல  காரியத்திற்கு  மடை  மாற்றம்  செய்தால்  
மணமக்கள்  வாழ்வு  சிறக்குமல்லவா !

 வசதிப்  படைத்தோர்  சிந்திப்பீர் ! 
ஆடம்பரத்  திருமணத்தைத்  தவிர்ப்பீர் ! 

கல்யாணம்  என்பது  இரு  மனங்களின்  
சங்கமம்  தான்  

அதற்காக   கட்சிக்   கட்டிக்கொண்டு 
 காசை வாரி  இறைக்காதீர்! 

செல்வம்  அதிகமாய்   ஆண்டவன்  கொடுத்தது 
இல்லாத  ஏழைக்கும் சேர்த்துத்தான் 

வாழ்க! மணமக்கள் பல்லாண்டு!
 வளமோடும் , நலமோடும்  நூறாண்டு !

த .சத்தியமூர்த்தி 

No comments:

Post a Comment