Sunday, 5 June 2022

Kadarkarai Sollum Seithi

 கடற்கரை சொல்லும் செய்தி  

காசு  குறைவாக  இருந்தாலும்  பொழுது  போக்க  
தைரியமாய்  செல்லுமிடம்  கடற்கரை 

அனல்   பறக்கும் கோடையைச்   சமாளிக்க
 சாமானியர்கள் கூடுமிடம்   கடற்கரை 

நீண்ட  நெடிய   கடற்கரையைத்  தன்னகத்தேக் 
 கொண்டது  சென்னைப்  பட்டணம் 

வேர்த்து , வியர்த்து ,  வரும் மக்களின்  மேல் 
குளிர்ந்தக்  காற்றை  வீசி  ஆசுவாசப்படுத்தவது   கடற்கரை 

தேங்காய் , மாங்காய் ,பட்டாணி , சுண்டல் ,காலங்காலமாய் 
கடற்கலையில்  விற்கும்  நொறுக்குத்தீனி  

 கடற்கரையின்  அழகே  இடைவிடாது  கரையை  
முத்தமிட்டுக்  கொண்டிருக்கும்  கடல்  அலைகள் தான் 

மணலிலே  ஓவியம்  வரைந்து   அதை  அலைகள்  வந்து  
 கலைத்திடாமல்  இருக்க  குழந்தைகள்  படும்பாடு  குதூகலமானது 

  சோர்ந்து  கிடந்த  மனதையும் , உடலையும் , சுறுசுறுப்பாக்கி  
மகிழ்ச்சியோடு  திருப்பியனுப்பும்  மாமருந்து   கடற்கரை 

திருமண  தம்பதிகளும் , இனிய  காதலர்களும் 
உறவை  வளர்த்துக்கொள்ள  உதவும்   கடற்கரை 

கைகோர்த்து,  பாதுகாப்பாய்  வரிசையில்  நின்று  
ஆக்ரோஷமாய்  வரும்  அலையையே  ஆவலாய்  எதிர்பார்த்து  

ஓங்கியடித்து  நம்  உடையை  நனைத்ததும்  சந்தோஷத்தில்  
துள்ளிகுதிப்பதும் , கூச்சலிடுவதும் , கடற்கரையில்  நிகழும்  அற்புதம் 

இத்தனை  பெருமைமிகு   கடற்கரையில்  இன்று  வடநாட்டு  
மக்கள் தான்  கூட்டம்  கூட்டமாய்  கூடுகிறார்கள் 

எங்கே  போனார்கள்  நம்   தமிழ்  குடிகள் ?
 கடற்கரைக்கு  வருவதற்கும்  முடியாமலா  போனார்கள் !

சென்னையை  விட்டு  வெகுதூரம்  புறநகர்  நோக்கி 
 தமிழர்கள் நகர்ந்துக்  கொண்டிருக்கிறார்கள் 

தம்  சொந்த   மண்ணிலே  ஒவ்வொரு  அடையாளத்தையும் 
தொலைத்துக்  கொண்டு  இருக்கிறார்கள் 

 கடற்கரை  சொல்லும்  செய்தி  இதுதான் 

த .சத்தியமூர்த்தி 

No comments:

Post a Comment