மன அமைதி
ஆசையெனும் மாயையில் சிக்கி
அவதியுறும்போது நமக்கு தேவை மன அமைதி
ஓடி ஓடி சளித்தப்பின் நமக்கு
புத்துணர்ச்சி தருவது மன அமைதி
எண்ண அலைகள் எண்ணிக்கையில் அடங்காமல்
அடுத்தடுத்து தொல்லைத் தரும்போது தேவை மன அமைதி
குடும்ப பாரம் நம்மை அழுத்தும்போது
குதூகலத்துடன் சமாளிக்க உதவுவது மன அமைதி
காலை எழுந்தவுடன் கண்மூடி தியானத்தால் வரும்
அமைதி அந்த நாள் முழுவதும் செயல்பட உதவும்
பரபரப்பாய் இயங்கும் அவசர உலகில்
பாதுகாப்பாய் இருக்க உதவும் மன அமைதி
கோடி பணம் கிடைத்தாலும் கிட்டாத சுகமே
கொஞ்சநேரம் கிடைக்கும் மன அமைதி
கண்டதையும் நினைத்து சதா கவலைப்படும்
மனதிற்கு கட்டாயம் தேவை சலனமற்ற அமைதி
ஆலையம் சென்று ஆண்டவனைத் தரிசிப்பதால்
அனந்தமுடன் கிடைக்கும் மன அமைதி
சித்தர் சமாதியில் தியானம் செய்ய
கிடைத்திடும் நிர்மூலமான அமைதி
இருப்பதில் கொஞ்சம் பகிர்ந்து கொடுக்க
இல்லாதவன் சிரிப்பிலே தோன்றும் அமைதி
ஒற்றுமையுடன் சமூகம் சேர்ந்து வாழ முற்பட்டால்
நாடு முழுவதும் தோன்றும் நல்லதோர் மன அமைதி
----த .சத்தியமூர்த்தி