காவல் தெய்வங்கள்
மலை முகட்டின் விளிம்பிலிருந்து
மஞ்சள் நிலவு புறப்பட்டது
கடல் அலையில் ஆசை தீரக் குளித்து,
மெல்ல மெல்ல மேலெழும்பியது வெண்ணிலவு
பௌர்ணமியில் ஒளி வெள்ளம் அவனியெங்கும்
பாய்ச்சி பொன்னிறமாய் மின்னியது தங்கநிலவு
தேய்பிறையாய் தேய்ந்தாலும் , மீண்டும் வளர்பிறையாய்
வாழ்வு வரும் எனும் தத்துவத்தைச் சொல்கிறது வானிலவு
பெண்ணின் அழகிய முகத்தோடு தன்னை ஒப்பிட்டதாலோ,
வெட்கப்பட்டு மேகத்திற்குள் ஓடி ஒளிந்தது பெண்ணிலவு
மயக்குகின்ற மாலைப்பொழுது வந்தவுடன்
மகிழ்ச்சியுடன் உலா வந்தது காதல் நிலவு
கதிரவனின் ஒளியைக் கடன் வாங்கி,
இரவு முழுதும் ஆட்சி செய்யும் பொன்னிலவு
பொழுது புலர்ந்ததும் விடை பெறுகிறது
இடை விடாமல் கண்ணைச் சிமிட்டிக்கொண்டே
நம்மை கண்காணிக்கிறது நட்சத்திரங்கள்
ஒரு சிறிய குமிழ் விளக்கு எரிவதற்கும் நாம்
பணம் கட்ட வேண்டும் -- ஆனால்
இயற்க்கைக் கருணையோடு நமக்குத் தந்த
கொடையை நன்றியோடு நினைத்துப் பார்ப்போம்
கதிரவனும் , வெண்ணிலவும் , சமூகத்தைக் காக்கின்ற
கலங்கரை விளக்கமாக , காவல் தெய்வங்களாக ,
நம்மிடம் கூலி வாங்காமலே நமக்கு
உண்மையாக தொண்டு செய்கிறது
---த .சத்தியமூர்த்தி