Sunday, 26 December 2021

Ninaivil Ninra Kathai-8

நினைவில்  நின்ற  கதை -8

பார்த்தவுடன்  பதிப்பாசிரியருக்கு என்  மனங்கவர்ந்த 
பெண்ணைப்  பிடித்துப்   போயிற்று

மெல்ல  அவள்  குடும்பம்  பற்றிப்   பேசினார்

பெண்ணின்  தகப்பனாரும்  பதிப்பகம்  நடத்துவதாக  
சொன்னதும்  திருமணமே  முடிந்தது  போல மகிழ்ந்தார் 

இருவரும்  சந்தித்து  எங்கள்  காதல்  விவகாரம்  பற்றி  பேசினர்
 
"எதையாவது  சாதித்து  விட்டு  பணமும் , பேரும் , புகழுடன்
வந்தால் , தன்  மகளை  மணமுடித்து  தருவதாக  சொன்னார் "

பார்  போற்றும்  கவிஞனாய்  வரும்  முயற்சியில்  தான்  
வாரம்  ஒரு  கவிதை  வெளியிட்டு   வருகிறேன் 

வெள்ளைத்  தாமரையில்  வீற்றிருக்கும்
  அன்னை  கலைவாணி  அகிலம்  போற்றும்  

கவிஞனாக  என்னை  வெளிச்சத்திற்கு  
வெகுவிரைவில்  வெளிக்கொணர்வாள் 

அவள்  ஆசியுடன்  எங்கள்  திருமணம்  நிச்சயம்  நிகழும் 

அமுதமெனும்  இனிய  தமிழே  என்  இனிய  
இல்லறத்திற்கு  அஸ்திவாரமாய்  அமைவது  மகிழ்ச்சிக்குரியது 

தமிழ்  மேல்  பற்றுக்கொண்ட  எம்  தமிழ்  மக்களின்  
நல்லாதரவே  எனை  மேலும்  மேலும்  கவி  படைக்க  உதவும்  

என்  தமிழோடு  தொடர்ந்து  பயணிக்கும்  வாசகர்  
அனைவருக்கும்  தமிழ்த்தாயின்  அருளும்  ஆசியும் 
நிச்சயம்  கிடைக்கும் 

மொழிப்பற்றும்,  இனப்பற்றும்  கொண்ட  எம்  தமிழ்  குடிமக்கள் 
ஒற்றுமையோடு  காலங்கடந்தும்  வாழ்க! வாழ்க!  வாழ்க !!!

----த .சத்தியமூர்த்தி   

No comments:

Post a Comment