Sunday, 26 December 2021

Christmas

ஆண்டவர்  பிறந்த  நாள் 
அகிலம்  முழுவதும்  அன்பு  மலர்ந்த  நாள் 
எளிமையின்  சின்னமாய், எல்லோரின்  பாவத்தையும்  
சிலுவையில்  சுமந்து , தியாகத்தின்  திருவுருவாய்  
இயேசுபிரான்  வந்து  பிறந்த  உன்னத  நன்னாளில் 
மனங்கனிந்த  கிறிஸ்துமஸ்  இனிய  நல்வாழ்த்துக்கள் !!

Ninaivil Ninra Kathai-8

நினைவில்  நின்ற  கதை -8

பார்த்தவுடன்  பதிப்பாசிரியருக்கு என்  மனங்கவர்ந்த 
பெண்ணைப்  பிடித்துப்   போயிற்று

மெல்ல  அவள்  குடும்பம்  பற்றிப்   பேசினார்

பெண்ணின்  தகப்பனாரும்  பதிப்பகம்  நடத்துவதாக  
சொன்னதும்  திருமணமே  முடிந்தது  போல மகிழ்ந்தார் 

இருவரும்  சந்தித்து  எங்கள்  காதல்  விவகாரம்  பற்றி  பேசினர்
 
"எதையாவது  சாதித்து  விட்டு  பணமும் , பேரும் , புகழுடன்
வந்தால் , தன்  மகளை  மணமுடித்து  தருவதாக  சொன்னார் "

பார்  போற்றும்  கவிஞனாய்  வரும்  முயற்சியில்  தான்  
வாரம்  ஒரு  கவிதை  வெளியிட்டு   வருகிறேன் 

வெள்ளைத்  தாமரையில்  வீற்றிருக்கும்
  அன்னை  கலைவாணி  அகிலம்  போற்றும்  

கவிஞனாக  என்னை  வெளிச்சத்திற்கு  
வெகுவிரைவில்  வெளிக்கொணர்வாள் 

அவள்  ஆசியுடன்  எங்கள்  திருமணம்  நிச்சயம்  நிகழும் 

அமுதமெனும்  இனிய  தமிழே  என்  இனிய  
இல்லறத்திற்கு  அஸ்திவாரமாய்  அமைவது  மகிழ்ச்சிக்குரியது 

தமிழ்  மேல்  பற்றுக்கொண்ட  எம்  தமிழ்  மக்களின்  
நல்லாதரவே  எனை  மேலும்  மேலும்  கவி  படைக்க  உதவும்  

என்  தமிழோடு  தொடர்ந்து  பயணிக்கும்  வாசகர்  
அனைவருக்கும்  தமிழ்த்தாயின்  அருளும்  ஆசியும் 
நிச்சயம்  கிடைக்கும் 

மொழிப்பற்றும்,  இனப்பற்றும்  கொண்ட  எம்  தமிழ்  குடிமக்கள் 
ஒற்றுமையோடு  காலங்கடந்தும்  வாழ்க! வாழ்க!  வாழ்க !!!

----த .சத்தியமூர்த்தி   

Saturday, 18 December 2021

Ninaivil Ninra Kathai-7

 நினைவில்  நின்ற  கதை-7

எப்படி  கெட்டியாக  மனதை  வைத்திருந்தாலும் 
இது  எப்படி  திடிரென்று  ஒருவர்  மேல் மையல்  கொள்கிறது
பார்க்காமல்  போனாலோ  மனம்  பதறுகிறது 

எதை வைத்து  அவள்  மேல்  இப்படி  ஒரு  எண்ணம்  ஏற்பட்டது 
அவளைப்  பற்றி  முழுமையாக  எதுவும்  தெரியாமல்  
அவள்  தான்  இனியெல்லாம்  என  எண்ணத்  தோன்றுகிறது

இருவரும்  சொல்லி  வைத்தார்  போல்  
இதைத்தான்  எண்ணிக்  கொண்டிருந்தோம் 

   பதிப்பாசிரியர்  கேட்டார் " எவ்வளவு  நாள்  பழக்கம் !
ஒரு  ஆறு  மாதமாக  பதில்  சொன்னேன் 

பெண்  எப்படி ? படித்தவளா , வசதியானவளா ,
எந்த  சமூகம் ? இந்த  ஊரா  
அடுத்தடுத்து கேள்வி  கேட்டார் 

ஒன்றுக்கும்  என்னிடம்  பதிலில்லை 
 
எதுவுமே  தெரியாது,
ஆனால்  அவளை  உன்னோடு  சேர்த்து  வைக்கவேண்டும்

எப்படிடா  எல்லோரும்  ஒரேமாதிரி  காதலிக்கிறீர்கள் ? 

பேசியது  உண்டா ?
ஆம் , விழியால்  பேசிக்கொள்வோம்

சுத்தம்,
அடுத்தமுறை  உன்னோடு  நானும்  வருகிறேன் 
உன்  மனம்  விரும்பியவளைக்   காண 

என்னை  நம்பித்தான்  உன்னை  சென்னைக்கு  
அனுப்பி   இருக்கிறார்கள்  உன்  பெற்றோர்." 

  விஷயத்தை    அவர்  காதில்  போட்ட  பின்னால் 
கொஞ்சம்  மனம்  இலேசானது 

எப்பொழுதும்  விரும்பிப்  படிக்கும்  பாரதியின் 
கவிதைக்குள்  நுழைந்தேன்

"எத்தனைக்  கோடி  இன்பம்  வைத்தாய்  பராசக்தி"

வாழ்நாள்  முழுவதும்  வறுமையில்  வாடிய  மாபெரும்
கவிஞனின்  பார்வையில்  எத்தனை  இன்பம் 

கண்ணம்மாவை,  அன்புமனைவியை  உயிராய் 
நேசித்ததால்  அவன்  உள்ளம்  எதற்கும்  கலங்கியதில்லை 

---த .சத்தியமூர்த்தி   





     













 



   








  


      


Saturday, 11 December 2021

Ninaivil Ninra Kathai-6

நினைவில்  நின்ற  கதை-6

எப்படியும்  என்  எண்ணத்தை  வெளிப்படுத்தி விட 
ஒவ்வொரு  முறை  முயன்றும்  எதோ  ஒன்று  தடுத்தது 

மயக்குகின்ற  மாலைப்பொழுதில்  மல்லிகையைத்  தலையில் சூடி 
மஞ்சள் பூசிய  மகாலட்சுமி  எனை நோக்கி  மெல்ல வந்தாள் 

"ஆளை  விழுங்குவது  போல  பார்த்துக்  கொண்டே  
இருந்தால்  போதுமா ?"
தேனிதழை  மெல்லத்  திறந்து  பேசினாள் 

அதிர்ச்சியும், ஆனந்தமும் , ஒரு  சேர  கலந்து,
அசையாமல்  அவளைப்  பார்த்தபடி  நிற்கிறேன் 

எனக்கில்லாத  தைரியம்  அவளுக்காவது  ஏற்பட்டதே !
மகிழ்ச்சியில்  என்  மனம்  துள்ளியது 

"காலத்தைக்  கடத்தினால்  கானல்  நீர்  போல்  
காணாமல்  போயிடுவேன்  

பெண்  பார்க்கும்  படலம்  வீட்டில் தொடங்கிவிட்டார்கள் "
மறுபடியும்  அவளே  பேசினாள்-- நான்  சிரித்தபடி 

"கண்ணில்  ஆரம்பித்த  நம்  காதல்  மங்களமாய்  
கல்யாணத்தில்  தான்  முடியும் , கவலைப்  படாதே "

என்  பேச்சைக்  கேட்டதும்  அவள்  கண்ணில்  
தாரை  தாரையாய்  கண்ணீர்  வழிந்தது 

என்ன  தான்  அவளுக்கு  ஆறுதல்  சொன்னாலும் 
எனக்குள்  ஒரு வித பயம்  ஆரம்பித்தது 

காதலிக்க  இரு மனம் ஒன்று  பட்டால்  போதும் - ஆனால் 
திருமணத்திற்கு  எத்தனை  மனம்  ஒன்று  சேர  வேண்டும் 
எப்படியாவது  எங்களை  ஒன்று  சேர்த்து  விடு 

கண்ணில்  பட்ட  தெய்வத்திடமெல்லாம்  
வேண்டுகோள்  வைத்தேன்  

களத்தில்  இறங்கி  அவள்  கவலையைத்  தீர்க்க 
பதிப்பக  முதலாளியைத்  தேடிச்  சென்றேன் 

-----த .சத்தியமூர்த்தி 












   
 










   




Saturday, 4 December 2021

Ninaivil Ninra Kathai-5

நினைவில் நின்ற  கதை-5

பூங்காவில்  ஊஞ்சலில்  அமர்ந்து  ஊர்வசி  ஆட 
அவள்  அழகில்  சொக்கிப்போனேன்

நான்  பார்ப்பதை  அவளது  உள்ளுணர்வு  உணர்த்தியதாலோ 
சட்டென  அவளும்  என்மேல்  பார்வையைப்  பதித்தாள் 

அந்த  பார்வையில்  பலநாள்  பழகியது  போல்
கனிவும்  பரிவும்  இருந்தது 

அந்தப்  பார்வைக்குத்  தான்  எத்தனை  மகிமை !!

கடைவீதியில்  ஒருநாள், ஆலயத்தில்  ஒருநாள் 
கல்லூரி  செல்லும்  வழியில்  ஒருநாள் 

அடுத்தடுத்து சொல்லி  வைத்தது  போல  
அவளும்  நானும்  பார்வையை  மட்டும்  
ரகசியமாய்  பரிமாறிக் கொண்டோம் 

அந்த  பார்வையில்  தான்  எத்தனை  எத்தனை  ஆசைகள் !!

அந்த  நாட்கள்  தான்  என்  வாழ்வில்  உண்மையிலே 
மறக்க முடியாத  பொன்னான  காலம் 

எத்தனை  உற்சாகம்,  எப்போதும்  சுறுசுறுப்பு ,
நடை,  உடை , பாவனை எல்லாவற்றிலும்  
அப்படி  ஒரு  அக்கறை  

ஒரு  பெண்ணை  வெற்றிக்  கொண்டதை  உலகமே  
என்  கைக்குள்  கிடைத்ததைப்  போல்  மகிழ்தேன் 

வசதி   வாய்ப்பு  குறைந்திருந்தாலும்
மனதளவில்  ராஜாவாக  வலம்   வந்தேன் 

நாட்கள்   நகர்ந்தது 
 
உள்ளத்தில்  உள்ளதை  ஏனோ 
வாய்விட்டுச்   சொல்ல  முடியவில்லை 

சொல்லி  இருந்தால்  சந்தோஷப்பட்டிருப்பாள் 

யதார்த்தத்தையும்  உணரவில்லை - என் 
நிலையையும்  உயர்த்திக்  கொள்ளவில்லை 

அதன்  விளைவு  

----த .சத்தியமூர்த்தி