Saturday, 25 September 2021

Vaazhkai part-5

 வாழ்க்கை -5

வாழ்க்கை  ஒரு  மந்திரக்கோல் 
அத்தனைக்கும்  ஆசை  பட  வைக்கும் 

வாழ்க்கை  ஒரு  திறவுகோல் 
அத்தனைக்கும்  மயங்க  வைக்கும் 

வாழ்க்கை  ஒரு  திறந்த  புத்தகம் 
படிக்க  சுவாரசியமாய்  இருக்கும் 

போதுமென்ற  மனமே  பொன்  செய்யும்  மருந்து 
இறைக்கிற  கிணறு  தான்  சுரக்கும் 

அன்னமிட்ட  வீட்டிலே  தான்  
அன்னலட்சுமி  விரும்பி  வாசம்  செய்வாள் 

வந்தாரை,  வாழ  வைக்கும்  வளமான  தமிழகம் 
வாழ்வை  செம்மையாக்கும்  வலிமையான  மந்திரங்கள்

சமூகத்தையே  வாழவைத்த  
பண்டைய  தமிழ்  நாகரிகம் !!

கூட்டுக்குடும்பமாய்  கள்ளங்கபடமில்லாமல்
வாழ்ந்த  நம்  மூதாதையர் ! 

விருந்தோம்பலை,  விரும்பிக்   கடமையாய்  செய்த 
நம்  தமிழ்  சொந்தங்கள்

வீரமும்  மானமும்  இரு  விழிகளாய் 
காத்த  உத்தமர்கள் 

தேசத்தின்  நலனுக்காக  வாழ்வை  தியாகம்  செய்த
கப்பலோட்டிய  தமிழன்   
சுப்பிரமணிய  பாரதி
சுப்பிரமணிய  சிவா

எப்பேர்ப்பட்ட பரம்பரைக்கு சொந்தக்காரர்கள்  நாம் !!

நம் வாழ்க்கை எப்போதும்  நம்  நலத்தோடு 
மட்டும்  முடிவதல்ல 

மண்ணுக்காய்  உயிர்  நீத்த  நம்  தேசியத்  தலைவர் 
மாவீரன் மேதகு  பிரபாகரனின் 
வழித்   தோன்றல்கள் 

அடுத்தவர்  நலனுக்காய்  நம்  காலடித்தடத்தை 
அழுத்தமாய்  பதிப்போம் 

வாழ்க்கைக்கு  புது  புது  அர்த்தத்தை  
வருங்கால தலைமுறைக்கு  எடுத்துரைப்போம் 

--த .சத்தியமூர்த்தி  

Saturday, 18 September 2021

Vaazhkai part-4

 வாழ்க்கை -4

மழலையில்  தொடங்கி  மரணத்தில்  முடிகிறது 
பிரம்மனும்  அடுத்தடுத்து  பிறவி  
தந்து  கொண்டே  இருக்கிறான் 

சலிக்காமல்  பாமரனும்  மீண்டும்  மீண்டும் 
இறந்து  போகிறான் 

படிப்பு , வேலை,  திருமணம்,  குழந்தை , பேரக்குழந்தை 
என  சம்சார  சக்கரத்தில்  ஏராளமான  சங்கிலிகள் 

இந்த  சாதாரண  வாழ்வை  சாமானியன்  வாழட்டும்
நாம்   இதிலிருந்து  கொஞ்சம்  மாறுபட்டவர்கள் 

ஆசை  ஆசையாய்  பழகிய  அத்தனை  
உறவுகளையும்  விட்டுவிட்டு  ஒருநாள்  

கூட்டைவிட்டுக்   குருவி  பறப்பது  போல்  
உடற்கூட்டை  விட்டு  ஆன்மா  பிரிகிறது 

எத்தனை  பேர்  விருப்பப்பட்டு  சாகிறார்கள் 
எத்தனை  பேர்  விருப்பப்படாமல்  சாவைத்  தடுத்துவிட்டார்கள் 

ஒருவருமில்லை 

எங்கிருந்து  வந்தோம் ! எங்கே  திரும்பி  போகிறோம் !
எதற்காக  வந்தோம் ! ஒன்றுக்கும்  பதிலில்லை.

ஆன்ம  தேடலில்  அத்தனைக்கும்  விடை கிடைக்கும் 
அதை  இந்த  பிறவியில்  இருந்து  துவக்குவோம் 

ஞானிகளும் , யோகிகளும் , சித்தர்களும் 
இந்த  புள்ளியிலிருந்து  தான்  புறப்பட்டார்கள் 

ஐயன்  வள்ளுவர்  பெருந்தகை  
"பிறவிப் பெருங்கடல்  நீந்துவர்  நீந்தார்
இறைவன்  அடி  சேரார்"  என்றார் 

வாழ்வைப்பற்றி  பேசும்போது  நம்மை மேம்படுத்தும் 
 யோக நிலையைப்  பற்றி  சொல்லவேண்டும் 

ஆன்ம  தேடலை  ஆரம்பிப்போம்  
நாம்  யாரென்ற கேள்விக்கு  பதில்  கிடைக்கும் 

--த .சத்தியமூர்த்தி  

Saturday, 11 September 2021

Puratchi kanal BHARATHI

புரட்சிக்   கனல் பாரதி   

இன்று   உங்கள்  நினைவு  நாள் 

உங்கள்  பெயரிலே  உள்ளது  எழுச்சித்தீ !
நீ  பறங்கியரைப்   பயமுறுத்திய  காட்டுத்தீ !
பாமரனை  தட்டியெழுப்பிய  வேள்வித்தீ !

பெண்  விடுதலைப்  பேசிய  புரட்சிப்புனல் 
கம்பீரமாய்  வலம்  வந்த  சுட்டெரிக்கும்  சூரியன் 

அச்சமில்லை,  அச்சமில்லை,  அச்சமென்பதில்லையே !
உச்சிமீது  வான்  இடிந்து  வீழுகின்ற  போதிலும் 
  அச்சமில்லை,  அச்சமில்லை, அச்சமென்பதில்லையே !

தமிழனை,  அவன்  உணர்வினை,   உசுப்பிவிட்டு
வெள்ளையனை  எதிர்க்க  அணி  திரட்டிய  
அற்புதப்   பாடல்   

சுதந்திர  கனலைப்  பற்றவைத்து  நாடுமுழுவதும் 
மக்களை  கிளர்த்தெழுந்து   போராட  
அழைப்பு  விடுத்த  அற்புத  கீதம் 

வாழ்நாள்  முழுவதும்  வறுமையில்  வாடியபோதும் ,

நாட்டுவிடுதனைக்காக  தன்னை  பற்ற  வைத்துக்கொண்ட 
மெழுகுவர்த்தி   

எட்டயபுரத்து  சீமானிடம்  அரசவைக்  கவிஞனாய்
வாழ்ந்திருந்தால்  வறுமையை  எட்டி  
உதைத்திருக்க  முடியும் 

தேசத்தைப்   பாடும்  பாரதியால்  தனி  மனித  துதி  
எப்படி  பாட  இயலும் ?

பாரதியின்  இறுதி  ஊர்வலத்தில்  வெறும்  11பேர் 
மட்டும்  கலந்துகொண்டார்கள்  என்ற  செய்தி  

தமிழனின்  நன்றி  உணர்ச்சிக்கு  
வரலாற்று  சான்றாய்  உள்ளது 

ஆங்கிலேயருக்கு  அந்நாளில்  பயந்தது  போல,
அதிகார  வர்க்கத்துக்கு  அடிமையாய்  
தமிழ்ச்சமூகம்  இன்றும்  கிடக்கிறது 

அச்சமில்லை,  அச்சமில்லை,  பாட்டு மட்டும்
தொடர்ந்து  ஒலித்துக்  கொண்டிருக்கிறது 

அச்சத்தோடு  தமிழ்ச்சமூகம்  வாய்பொத்திக்  
கிடக்கிறது 

மீண்டும்  ஒரு  பாரதி  வரும்  நாளைப்பார்த்து 

----த .சத்தியமூர்த்தி 









  






 



    










 


 

Saturday, 4 September 2021

Vaazhkai part-3

வாழ்க்கை -3 

வாழ்க்கை 
சிலருக்கு  இனிக்கிறது 
பலருக்கு  கசக்கிறது 

வாழ்க்கையின்  தேடலே 
வெறும்  பணத்தை  மையமாக  கொண்டுள்ளது 

அரசியலைக்  கற்றுத்தர, 
ஆன்மிகத்தை  வழிகாட்ட ,

உடல்நலத்தைப்   பேணிக்காக்க,
சேமிப்பை  வலியுறுத்த , 

ஒழுக்கத்தைச்   சொல்லித்தர , 
நற்பண்புகளை  வளர்த்துக்கொள்ள ,

நல்ல  நூல்களோடு  உறவாட ,
சமூகத்தை  பற்றி  சிந்திக்க 

 இப்படி 

வாழ்க்கையை  முழுமையாக்க  
ஏராளமான  காரணிகள்  உள்ளன 

ஆனால்  பணம்  என்ற  ஒற்றை மந்திரம் 
இதையெல்லாம் திரும்பி  பார்க்கக்கூட  
நம்மை  விடுவதில்லை .

அரசியல்  தெளிவு பெற 
நம்  சமூகத்தை  யாராலும்  ஏமாற்ற முடியாது 

ஆன்மீக  ஞானம்  வர 
நாம்  யாரென்ற  தெளிவு  வரும் 

சேமிப்பே  நம்மை  செல்வந்தனாக்கும் 

நற்பண்பும்  ஒழுக்கமும்  நம் 
உடலைப்   பலப்படுத்தும் 

நல்ல  நூல்களோ  நம்மை 
வெற்றியாளனாய்  வழிநடத்தும் 

வாழ்க்கையின்  மொத்த  பரிமானத்தையும் 
அனுபவித்து  ருசியுங்கள் 

வாழ்க்கையை  வாழ  ஆரம்பியுங்கள்  

--த .சத்தியமூர்த்தி