Sunday, 27 June 2021

இரு சாராருக்கும் கனிவான வேண்டுகோள்-1

 இரு சாராருக்கும்  கனிவான  வேண்டுகோள்-1

தமிழ்  மொழிக்காகவும் , தமிழ்  இனத்திற்காகவும் ,
ஈழத்   தமிழரின்   இன்னலுக்காகவும் ,
 
வாழ்நாள்  முழுவதும்  பல்வேறு  
போராட்டங்களை  முன்னெடுத்தவர்கள் 
திராவிடர்  கழக , திராவிட  முன்னேற்றக்  கழகத்தார் ..
  
தந்தை  பெரியார் , பேரறிஞர் அண்ணா ,
முத்தமிழறிஞர்  கலைஞர் போன்ற
 
மாபெரும்  தலைவர்களின்  பிம்பத்தை  உடைப்போம் 
என  தமிழ்  தேசியம்  பேசுவதும் ,

வரலாற்றை  மறைக்கப்  பார்ப்பதும் ,
வரலாற்றை  மாற்றப்  பார்ப்பதும் ,

விந்தையிலும்  விந்தை !! 

புலிகளைக்  காரணம்  காட்டி 
திமுக  ஆட்சியைக்  கலைத்ததும் ,

கலைஞரும் , பேராசிரியரும்  சட்டமன்ற 
உறுப்பினர்  பதவியைத்  துறந்ததும் ,

டெசோ  மாநாடு  நடத்தி  இலங்கைப்  பிரச்சனையை 
தமிழகம்  முழுக்கக்   கொண்டு சென்றதும் ,

சமூகநீதி  , சுயமரியாதை , சமத்துவம் 
போன்றவற்றைக்  கட்டமைத்ததும் , 

தமிழகத்தை  வளர்ச்சிப்   பெற்ற
மாநிலமாக  மாற்றியதும் ,

திராவிடத்தின்  சாதனை 

இலங்கையில்  
கணவன்  கண் முன்னே , மனைவியைக்  கற்பழித்ததும் ,
சகோதரன்  கண் முன்னே , சகோதரியை  நிர்வாணப்படுத்தியதும் , 

தமிழனின்  தொடை  கறி  விற்கப்படும் 
என  பதாகைக்   கட்டியதும் ,

வெறிபிடித்த  வேட்டை  நாயைப்போல  தமிழினத்தை 
கருவருத்த  சிங்கள  இராணுவத்தை  எதிர்த்து

முப்பது  ஆண்டுகாலம்  அரசியல்  வழியில் 
போராட்டம்  நடத்தி  இனிவேறு 
வழியே  இல்லையென்றக்   கட்டத்தில் 

ஈழ  விடுதலைக்கும் , ஈழ  மக்களைக் காக்கவும் ,
அங்குள்ள  நம்  சகோதரர்கள் 

ஆயுதம்  ஏந்தினார்கள் 
  
-----வேண்டுகோள்  தொடரும்..

த . சத்தியமூர்த்தி  
 



  

 


 
 




 

Saturday, 19 June 2021

Atharam

ஆதாரம் 

யானைக்கு  அங்குசம்  ஆதாரம் 

குதிரைக்கு  கடிவாளம்  ஆதாரம் 

 கப்பலுக்கு  நங்கூரம்  ஆதாரம்
 
கவிதைக்கு  சொல்லாடல்  ஆதாரம் 

விழிக்கு  கருணையே  ஆதாரம்

மொழிக்கு  இலக்கணமே  ஆதாரம் 

தமிழுக்கு  இனிமையே  ஆதாரம் 

தமிழர்க்கு  விருந்தோம்பலே  ஆதாரம் 

உடலுக்கு  உயிரே  ஆதாரம்
 
உலகுக்கு  ஒளியே  ஆதாரம் 

உயர்வுக்கு  உழைப்பே  ஆதாரம் 

வெற்றிக்கு  நம்பிக்கையே  ஆதாரம் 

நெஞ்சுக்கு  நீதியே  ஆதாரம் 

நேர்மைக்கு  உண்மையே  ஆதாரம்
 
கல்வி தான்  மனித  குலத்தின்  ஆதாரம்  

காலமே  நம்  வளர்ச்சியின்  ஆதாரம் 

வறியவர்க்கு  கொடுப்பதே  செல்வத்தின்  ஆதாரம் 

வறுமையை  ஒழிப்பதே  மானுடத்தின்  ஆதாரம் 

மனிதனுக்கு  மானமும்  வீரமுமே  ஆதாரம் 

மக்களாட்சியே  உரிமைக்கு  ஆதாரம் 

நாட்டுக்கு  நல்லாட்சியே  ஆதாரம் 

நல்லவரை  ஆள வைப்பதே  பொற்காலம்  

விடுதலைக்கு  அஞ்சாமை  ஆதாரம் 

ஜனநாயகத்திற்கு  வி ழிப்புணர்வே  ஆதாரம் 

இன  உணர்வு  கொள்வதே  
காலத்தின்  கட்டாயம் 

ஒன்று பட்டு வெல்வதே  
நம்  அனைவரின்  இலக்காகும் 

 ---த .சத்தியமூர்த்தி 

 

 

Sunday, 13 June 2021

vizhi kaatiya jalangal

விழி  காட்டிய  ஜாலங்கள் 

சிலைகொத்த  மேனி  உன்  எழில்  கண்டு 
சிந்தனையை  இழந்து  நின்ற  கனமுண்டு 

உன்  விழி  காட்டிய  ஜாலங்கள்  எத்தனையோ ?
அவை  விபரீத  விளையாட்டின்  முத்திரையோ !

நிலையில்லா  உன் நெஞ்சம் என்  வசமே 
நீ  தானே  என்  தோட்ட  பூ  வாசமே 

உன்னோடு  கலந்து விட்ட உயிரிங்கே  
ஊரெல்லாம்  தேடியும்  நீ  எங்கே ?

போட்டு  வைத்த  பூப்பந்தல்  வாடுதிங்கே
பொட்டு வைத்த  பூவழகி  போனதெங்கே ?    

ஆசைக்காட்டி  காதல்  பயிர்  வளர்த்தவளே 
ஏனோ  பாதியிலே  பரிதவிக்க  விட்டுவிட்டாய்  

வானத்து  விண்மீனோ  வெண்ணிலவை  வட்டமிட ,
கானகத்து  குயிலினங்கள்  கானத்தை  பாடி  வர, 

காவிருக்கும்  பூவெல்லாம்  வண்டுக்காய்  காத்திருக்க ,
மானத்தை  உயிராய்  மதிக்கும்  மங்கையர்  வழிவந்த 

வையகத்து  பெண் மானின்  
பொன்  கரத்தைப்   பற்றிநின்று 
முன்பு  யான்  பெற்றிருந்த  சுகத்தை  எண்ணி 

பெருமூச்சு  விட்டபடி  

விழி  நீரால்  அமைந்த  குளத்தில்  என் 
நெஞ்சமெனும்  மீனாடும்  விபரீத  
விளையாட்டைக்   காணத்தான்

உன்  விழி காட்டிய  ஜாலங்கள்  அன்று 
அதன்  விடை  காண  முடிந்தது  இன்று 

---த . சத்தியமூர்த்தி