Sunday, 27 September 2020

Naattu Nadappu-part1

நாட்டு  நடப்பு  - 1

ஏழைகளின்    விழிகளிலே   
எத்தனையோ  சோகம் 

படிக்கின்ற  இளவயதில்  
உழைக்கின்ற  கூட்டம் 

கஞ்சிக்கும்  அல்லாடும் 
இளந்தளிர்களின்  தாகம் 

கொள்ளையரைக்  கோட்டையினுள் 
ஆள  விட்டதின்  சாபம் 

பட்டியலோ  நீள்கிறது 
கட்சிகளின்  சாதனைகள் 

பட்டினியால்  வாடுகின்ற 
பரதேசிக்  கோலங்கள் 

மாளிகையில்  மதுவோடும்  மங்கையோடும்  
அதிகாரத்தின்  கொட்டம் 

மண்  குடிசையிலே  விளக்கேற்ற 
எண்ணெய்க்கோ   பஞ்சம் 

நாளெல்லாம்  உழைத்தாலும் 
நியாயமான  கூலியில்லை 

உழைப்பதற்கு  முன்  வந்தும் 
திறனுக்கேற்ற  வேலையில்லை 

லாபத்தின்  பெரும்பங்கு 
 கார்ப்பரேட்  முதலாளிகளின்  கைகளிலே 

பாடுபடும்    தொழிலாளர்களின் 
குடும்பங்களோ    வறுமையிலே 

ஐந்து  ரூபாய்  திருடியவன் 
 அகப்பட்டால்   சிறை  வாசம்

ஐந்து  கோடி  திருடினாலும் 
அதிகாரவர்க்கம்  என்றால்  சுகபோகம் 

சட்டத்திற்கும்  தோன்றிவிடும் 
அவர்கள்  மீது  புது  பாசம் 

சட்டத்தையே  வளைத்து விடும்
அவர்களின்  அதிகாரம் 

நீதிதேவன்  மயங்கியதோ  
மீளாத  நித்திரையில்  

ஜாதி  மத  முத்திரைகள் 
ஜனங்களின்  முகத்திரையில் 
 
நாட்டு  நடப்பு  தொடரும் ........      

                                                                ------த .சத்தியமூர்த்தி 
 


Saturday, 19 September 2020

Elaiya Thalaimurai

இளைய தலைமுறை 

விடியல்  உதித்ததால்  வெளிச்சம்  வந்தது 
வசந்தம்  வந்ததால்  வாழ்வு   மலர்ந்தது  

அன்பு  பிறந்ததால்  அகிலம்  இணைந்தது 
ஆசை  துறந்ததால்  அமைதி  கிடைத்தது 

நல்லது  நடப்பதால்  நம்பிக்கை  துளிர்த்தது 
காலம்  கனிந்ததால்  நினைத்ததெல்லாம்  நடந்தது 

கவிதையின்  துடிப்பால்  எழிச்சி  பிறந்தது 
காதல்  மலர்ந்ததால்  உள்ளம்  இனித்தது 

மனைவி  அமைந்ததால்  மகிழ்ச்சி  வந்தது 
மழலை  இணைந்ததால்  கடமை  சேர்ந்தது
 
மக்களாட்சியால்  சுதந்திரம்  உருவானது  
மக்களின்  உழைப்பால்  நாடு  செழித்தது 

நாட்டின் வளமை மேட்டுக்குடிக்கு மட்டும் சொந்தமானது
தட்டிக்கேட்கவோ  தலைமையில்லாமல்  போனது 

தலைமையேற்க  இளைய  தலைமுறையே  வாருங்கள்
உழலற்ற சமூகத்தை  உங்களிடமிருந்து  துவக்குங்கள் 

ஏழையின்பால்  பற்று  வைத்து  உண்மையாய்  உழையுங்கள் 
நேர்மையாய்  நடந்து  உண்மையான  சுதந்திரத்தை  உறுதிப்படுத்துங்கள் 

கருணை  பிறப்பதால்  மட்டுமே  வறுமை  ஓழியும் 
கல்வியால்  மட்டுமே  சமதர்ம  சமுதாயம்  சாத்தியமாகும் 

வலிமையான  இந்தியாவை  உருவாக்க 
 தோளோடு  தோள்  சேருங்கள்  

நாடு  உங்கள் மேல் நம்பிக்கை  வைத்து  காத்திருக்கிறது 
நீங்கள்  நிமிர்ந்தால்  வானமும்  தொட்டுவிடும்  தூரம் தான் 

த .சத்தியமூர்த்தி             

  

Sunday, 13 September 2020

Dhevathai

தேவதை 

திருமகள்  அழகினில்  தினம்  மனம்  ஏங்கும் 
கலைமகள்  அருளால்  கவி  பல  பாடும் 
மலைமகள்  மலைத்திடும்  திருமகள்  அழகு 
மனமே  நீ  கொஞ்சம்  அவளிடம்  பழகு 

பண்ணிசை  பாடும்  அவளது  பாங்கு 
பாவையின்  உறவுக்கு  தினம்  தினம்  ஏங்கு 
ஏழிசை  பொழியும்  தேவியின்  வீணை  
ஏங்க  வைத்திடும்  கோதையின்  அழகு 

எண்டிசை  தோறும்  என்னவள்  தோற்றம்
 ஏனடி இன்று  உன்னிடம்  மாற்றம்  
அன்பு  நெஞ்சம்  இன்று  அழைத்திடும்  அழைப்பு 
நெஞ்சில்  ஆசை  இருந்தும்  ஏனிந்த  நடிப்பு 

கைப்பற்றத்  துடிக்கும்  காதலன்  நினைப்பு 
போதையேற்றுதடி  பாவை  உந்தன்  சிரிப்பு 
காணாத  போதெல்லாம்  கனவினில்  கிளர்ச்சி 
காண்கின்ற   போதினில்  மனதினில்  மகிழ்ச்சி 

கோதை  வாழ்ந்திடும்  ஊரெந்தன்  இதயம் 
மங்கையின்  வரவால்  மகிழ்ச்சியின்  உதயம் 
காணாத  வேளையிலே   என்மேலே  கவனிப்பு  
கண்டு  விட்டாலோ  எனை  பாராதது  போல்  நடிப்பு 

   காத்திருக்கு  ரொம்ப  நாளா  
கன்னிப்பொண்ணு  பூத்து  நின்னு  
பார்வைக்கது  கன்னிப்புள்ள  
பழக்கத்தில  பச்சப்புள்ள    

பரிசம்  போட  உள்ள  புள்ள 
பச்சரிசி  பல்லு  புள்ள  
மாலை  மாத்தி  தேதி  வச்சு 
மஞ்சம்  போட  வாரேன்  புள்ள
  
---த .சத்தியமூர்த்தி 

 


 

Sunday, 6 September 2020

Mathippu

மதிப்பு 

மாணவரின்  மதிப்பு  அவர்  வாங்கும்  மதிப்பெண்ணிலே 
அன்னையின்  மதிப்பு  மழலையை  ஈன்றெடுப்பதிலே 

வணிகனிர்   மதிப்பு  தராசின்  நேர்மையிலே 
நிறுவனத்தின்  மதிப்பு  மக்களின்  நம்பிக்கையிலே 

முதலாளியின்  மதிப்பு  அவரது  இரும்பு பெட்டகத்திலே 
தொழிலாளியின்  மதிப்பு  அவர்  சிந்தும்  வியர்வையிலே 

உழைப்பின்  மதிப்பு  அவர்  உயரும்  அந்தஸ்திலே 
பணத்தின்  மதிப்பு   அதை  கையாள்பவர்  திறமையிலே 

தங்கத்தின்  மதிப்பு  கல்யாண  சந்தையிலே 
தலைவனின்  மதிப்பு  தொண்டர்களின்  அபிமானத்திலே 

உழவனிர் மதிப்பு  அவர்  செய்யும்  உற்பத்தியிலே 
உண்மையின்  மதிப்பு  நீதி  வெல்வதிலே 

நல்லவனின்  மதிப்பு  அவனது  நடத்தையிலே 
நாட்டின்  மதிப்பு  மக்களின்  வருமானத்திலே 

கவிதையின்  மதிப்பு  ரசிக்கும்  ரசிகர்களின்  ரசனையிலே 
காதலின்  மதிப்பு  காதலர்களின்  மன  உறுதியிலே 

தமிழின்  மதிப்பு  தரணியெங்கும்  எதிரொலிப்பதாலே 
தமிழனின்  மதிப்பு  காதல் , மானம் , வீரத்தினாலே 

அழகின்  மதிப்பு  பார்க்கும்  பார்வையினாலே 
அன்பின்  மதிப்பு  கொடுத்து  உதவும்  தியாகத்தினாலே 

மதிப்பு  என்பது  குறியீடு  
அதுவே  நமது  வாழ்வின்  செப்பேடு 
பிறர்  மதிக்க  வாழ்வதே  வாழ்வியலின்  வரலாறு 
எல்லோரையும்  சமமாக  மதித்து  வாழ்வோம் 

----த .சத்தியமூர்த்தி