மாஜி காதலிக்கு மகிழ்வுடன் ஒரு கடிதம்
வாசல் வரை வந்துவிட்டேன் ; வாயிலது திறக்கவில்லை ;
கால் கடுக்க காத்திருந்தும் கதவதுவோ திறக்கவில்லை ;
விம்மி விம்மி மனம் அழுதும் விழிகளிலே நீரில்லை ;
வந்த வழி திரும்பி விட்டேன் ; வழியெல்லாம் அழுதுவிட்டேன் ;
சென்றதையோ மறந்துவிட முயன்றாலும் முடியவில்லை ;
தென்றலதன் துணையின்றி செல்லுமிடம் புரியவில்லை ;
ஆசையினை வளர்த்தவளே அறுவடையைச் செய்துவிட்டாள் ;
அடுத்தக்கட்டம் தொடருமுன்னே எனை விடுத்துச்சென்றுவிட்டால் ;
இளமையிலே இனியதொரு நினைவுகளை
தந்ததற்க்கு என் நன்றி ;
கனவுகளை வளரவிட்டு எனைக் கவிஞனாக
ஆக்கியதற்கு மீண்டும் என் நன்றி ;
நினைவுகளில் கலந்திருந்து
நிம்மதியைத் தருவதனால்
சென்ற இடம் எல்லாம்
சிறப்புடனே நீ வாழி ! !
---- த . சத்தியமூர்த்தி
No comments:
Post a Comment