Wednesday, 13 May 2020

santhainokki

சந்தைநோக்கி 

ஒத்தை  வண்டி  மாடு  பூட்டி 
அத்தை  மகளைக்  கூட்டிக்கிட்டு 
சந்தை  நோக்கி  நானும்  போறேன் 
சந்தோஷமாகப்   போறேன் 

தென்னை  மரத்தோப்பு தாண்டி  
தெற்கு  பக்க  கோயில்  தாண்டி 
எல்லையோர  காவல்  தாண்டி  
எட்டுத் திக்கும் கூடும்  கூட்டம்  தாண்டி 
வேகமாக  நானும்  போறேன் 
வேண்டியதை   வாங்கப்  போறேன் 

அக்கம்பக்க  கிராம  ஜனம்  
அத்தனையும்  கூடியிருக்க  
நடைபாதை கடைகள்  அங்கே
 தொடராகத்  தோன்றியிருக்க  
அத்தைமகள்  கேட்டதெல்லாம்  
அள்ளிக்கொண்டு  வீடு  வந்தோம் 

கொண்டு  சென்ற  பணமெல்லாம் 
பொருளாக  மாறிவிட  
கோதையவள்  முகமெல்லம் 
தாமரையாய்  பூத்துவிட 
சிரித்துக்கொண்டே  வீடு  வந்தாள் 
வட்டமுக  பொட்டழகி      

                                                           ----த .சத்தியமூர்த்தி 

maaji kadhalikku makizhvudan oru kaditham

மாஜி  காதலிக்கு  மகிழ்வுடன்  ஒரு  கடிதம் 

வாசல்   வரை வந்துவிட்டேன் ; வாயிலது  திறக்கவில்லை ;
கால்  கடுக்க  காத்திருந்தும்  கதவதுவோ  திறக்கவில்லை ;
விம்மி  விம்மி  மனம்  அழுதும்  விழிகளிலே  நீரில்லை ;
வந்த  வழி  திரும்பி  விட்டேன்  ; வழியெல்லாம்  அழுதுவிட்டேன் ;

சென்றதையோ  மறந்துவிட  முயன்றாலும்  முடியவில்லை ;
தென்றலதன் துணையின்றி  செல்லுமிடம் புரியவில்லை ;
ஆசையினை  வளர்த்தவளே  அறுவடையைச்   செய்துவிட்டாள் ;
அடுத்தக்கட்டம்  தொடருமுன்னே  எனை  விடுத்துச்சென்றுவிட்டால் ;

இளமையிலே  இனியதொரு நினைவுகளை  
தந்ததற்க்கு  என்  நன்றி ;
கனவுகளை  வளரவிட்டு  எனைக்  கவிஞனாக  
ஆக்கியதற்கு  மீண்டும்   என்  நன்றி ;

நினைவுகளில்  கலந்திருந்து 
 நிம்மதியைத்  தருவதனால்  
சென்ற  இடம்  எல்லாம்  
சிறப்புடனே   நீ  வாழி ! ! 

                                                ---- த . சத்தியமூர்த்தி 
  

Wednesday, 6 May 2020

kaalam

காலம் 

"முத்தெடுக்க  வேண்டும்  என்பதற்காகவே  ஒவ்வொரு முறையும் 
கடலுக்குள்  செல்கின்றேன் " என்னுடைய  போறாத  காலமோ 
என்னவோ  வெறும்  கிளிஞ்சல்களோடு  மாத்திரம் 
கரைக்குத் திரும்பிக் கொண்டிருக்கிறேன் 

அழுதுகொண்டு  நிற்பவனிடம்  அறிஞன் " காலத்தின் மீது 
பழியைப்போட்டுவிட்டு  உனது  இயலாமையிலிருந்து 
தப்பித்துக்கொள்ள  முயல்கிறாய்  "

காலத்தைப்பற்றி  சொல்கிறேன்  நண்பா  
உனது  மூதாதையர்க்கு  ஒருகாலம்  சொந்தமாக  இருந்தது 
உனக்கு  நிகழ்காலம்  சொந்தமாக  உள்ளது  
உனது சந்ததியர்க்கு  வருங்காலம்  சொந்தமாகப்போகிறது
காலம்  என்னவோ  ஒன்றுதான்    
வாழுகின்ற  காலம்  மட்டும்தான்  உனக்கு  சொந்தம்  அப்படிப்பட்ட 
காலம்  கண்  போன்றது  பொன்  போன்றது 

முத்தெடுக்க  வேண்டுமென்றால்  ஆழ்கடலுக்குச்   செல்ல  வேண்டும் 
அதற்கு  மூச்சடக்கும்  பயிற்சியைக்  கூட்ட  வேண்டும் 
பயிற்சி  செய் - விடா  முயற்சி  செய் - வெற்றிக்கிட்டும்  என்று 
சொல்லிவிட்டு  அறிஞன்  சென்று  விட்டான்  

பயிற்சியில்  இறங்கலானான்  ஆழ்கடலில்  மூழ்கலானான் 
முத்துக்களை அள்ளிக்கொண்டு வந்து நாளடைவில் 
முத்து வணிகனானான்

குளத்திலே  இறங்கினால்தான்  நீச்சல்  பழகமுடியும்  அதுபோல் 
களத்திலே  இறங்கினால்தான்  வெற்றி  காண  முடியும் 
கூட்டை  விட்டு  வெளியே  வந்தால்  தான்  வானத்தில்  
சுதந்திரமாக  சிறகடித்து  பறக்க  முடியும் 

விதைக்கிற  காலத்தில் விதைத்தால்  தான்  அறுவடை  காலத்தில்  
ஆனந்தமாக  இருக்கமுடியும் 
எல்லாவற்றையும்  காலாகாலத்தில்  செய்து  முடிப்போம் 
 காலமெல்லாம்  களிப்போடு  கவலையின்றி  வாழ்வோம் 

              --- த. சத்தியமூர்த்தி    



  







Saturday, 2 May 2020

nadigan

நடிகன் 

நேற்று வரை  அவனைப் பற்றி  ஒருவரும்  கவலைப்படவில்லை
இன்றோ  ஊரெல்லாம்  அவனைப் பற்றியே ஒரே  பேச்சு 
இது  எப்படி ?
அவன்  வளர்ந்து விட்டானா ! இந்த  சமூகம்  மாறி விட்டதா  !
இரண்டும்  இல்லை  
அவன்  நடிகனாக  மாறி விட்டான் 

பொன்னும்  பொருளும்   பின்னால்  வந்தது
அத்தனையும்  அழகுமயில்   பெண்ணால்  வந்தது 
அவள்  சொன்னால் " வாழபிறந்தவன்  நீ "என்று
அவனோ " வாழ்வைத்தொலைத்தவன்  நான் " என்றான்

அதற்கு அவள்"தொலைப்பதற்க வாழ்க்கை  என்ன பொருளா "என்றாள்  
 அடுத்தவரைப் போல் நடிக்கும்  ஆற்றலை  அவனிடம்  கண்டு  
"நடிகனாக  முயலலாம்  "என்றாள் 
அதைக்கேட்டு அவன் சிரித்தான்.தன்  நிலை  எண்ணி  உடனே  அழுதான் 
கைதட்டி  ரசித்தாள் .  அவன்  புரியாமல்  விழித்தான் 
நடிகனாகலாம்  என்றேன் . நீயோ  நடித்தே  காட்டி விட்டாய்  என்றாள் . 

எதற்கும்  உதவாதவன்  என்று  எவருமே  இங்கு  பிறக்கவில்லை 
உங்கள்  ஆற்றல்  உங்களுக்கு  புரியாது என்றாள் .
அரங்கத்தில்  மேடையேறி  அம்பலத்தில்  நடிகனானான் 

ஒருநாள்  கழிப்பது  ஒரு யுகமானது  அன்று  
ஒருநாள்  நடிப்புக்கு  ஊதியம்  பெறுவது  இன்று
நாட்கள்  கசந்தது  அன்று -- அதே 
நாட்கள்  கரன்சியை  கறந்தது  இன்று 

காலம்  எப்போதும்  சுழல்கிறது .
 இப்போதுதான் அவன்  முறை  வந்தது 
காற்று  எப்போதும்  வீசிக்கொண்டு  இருந்தது .
இப்போதுதான்  அவன்  திசை  நோக்கி  அடிக்கிறது 

ஆலமரமாய்  அவன்  வளர்ந்ததாலே  தங்கி  இளைப்பார 
சொந்தமென்று  கூட்டம்  சேர்ந்தது 
நடிகனாக   மட்டுமல்ல - அவன்  நல்ல  
மனிதனாகவும்  இருந்தான்  

தன்  ரசிகர்களுக்கு  கையெழுத்து  இடுமுன் 
தவறாமல்  இதை  குறித்தான்  
"கட்டிவைத்த  மாலையோடு  இந்த  சமூகம்  காத்து  இருக்கிறது "
திறமை  உள்ளவனுக்குத்தான்  இங்கு  தினமும்  திருவிழா 
"எதையாவது  செய்  .  அதையே  இன்னும்  சிறப்பாக  செய் "

                                           --த . சத்தியமூர்த்தி