இன உணர்வு
இலங்கையில் தமிழினம் கொன்று அழித்தபோது
இன உணர்வு அற்று கிடந்தோம்
தமிழக மீனவர்கள் தொடர்ந்து தாக்கப்படும்போதும்
அமைதி காத்தோம்
சமீபத்தில் தமிழக மாணவர்கள் ஆந்திராவில் சுங்கச்சாவடியில்
பயங்கர ஆயுதங்களால் கொடுமையாக தாக்கப்பட்டார்கள்
இதைக் கண்டித்து அரசு சார்பில் ஒரு குரலும் ஒலிக்கவில்லை
ஏனிந்த இழிநிலை ?
ஜாதிப்பற்று மிகுந்து , ஜாதிசங்ககள் அமைத்து
தமிழர்கள் பிரிந்துக் கிடைப்பதால்,
இனப்பற்று இம்மியளவும் இல்லாமல் போனதால் ,
மொழியால் நாம் எல்லோரும் தமிழர் என உணராததால்,
பிரித்தாளும் சூழ்ச்சிக்கு இரையாகிப் போனதால்,
ஆரியமும் , திராவிடமும் சேர்ந்து நம்மை ஏமாற்றியதால்,
நம்மால் நம்மை காப்பாற்றிக்கொள்ள முடியவில்லை !!
நமக்காக குரல் கொடுக்கும் அரசு இங்கு அமையும் வரை
நமக்கு இதுதான் தொடரும்
மொழிப்பற்றையும் இனப்பற்றையும் இரு விழியாக கொள்வோம்
ஜாதி , மதங்கடந்து தமிழர்கள் அனைவரும் ஓரணியில்
அணி திரள வேண்டும்
தெலுங்கர் , கன்னடர் , மலையாளர் , இவர்களைப் பார்த்தாவது
தமிழர்களே !! இன உணர்வு கொள்ளுங்கள்
கடல் கடந்து ஆட்சி செய்த தமிழினம்
இனியாவது விழித்துக்கொள்ளுமா ?
தனக்கான தலைவனை சரியாக தேர்தெடுக்குமா ?
---த .சத்தியமூர்த்தி