மே 18
ஒரு குடும்பம் நாட்டின் கஜானாவை முழுவதுமாய் கொள்ளையடித்ததால்
ஒட்டு மொத்த இலங்கையும் இன்று திவாலானது
கொத்து கொத்தாய் இரசாயன குண்டுகளை வீசி எம்
தமிழினத்தைக் கொன்று குவித்தபோது ,வாய் மூடி
மௌனியாய் மௌனித்த சிங்கள இனம்
தமிழினத்தின் சாபத்தால் இன்று நிலை குலைந்து போனது
உரிமைக்காக போராடியது வீரமிகு எம் தமிழினம்
சோத்துக்காக , பாலுக்காக போராடுகிறது சிங்கள இனம்
பன்னாட்டு இராணுவத்தை எதிர்த்து ஆண்மையோடு
களத்தில் நின்று போராடிய வீரமிகு எம் தலைவன் எங்கே !
உயிருக்கு பயந்து கோழையாய் ஓடி ஒளிந்த
சிங்கள சர்வாதிகாரி எங்கே !
இரத்த வெறிபிடித்த பௌத்தப் பிட்சுகளின்
பேச்சைக் கேட்டு இன்னமும் நீங்கள் ஆட்சி செய்தால்
இதைவிட மோசமான நிலை தான் மிஞ்சும்
இனிமேலாவது சிங்கள மக்கள் தங்களை மாற்றிக் கொண்டு
தமிழர்களின் உடைமைகளை , உரிமைகளை பகிர்தளியுங்கள்
உரிமைக்காக போராடிய எந்த இனமும்
வீழ்ந்ததாய் வரலாற்றில் பதிவுகள் இல்லை
இனி இழப்பதற்கு ஒன்றுமில்லை என்று சொல்லுமளவுக்கு
தமிழினம் எல்லாவற்றையும் இழந்தது
சர்வதேச சமூகம் இந்த படுபாதக செயலைச் செய்த
குற்றவாளிகளைக் கூண்டில் ஏற்றி தண்டிக்கவேண்டும்
எம் தலைவனின் வீரம் , மானம் ,இவற்றோடு
இளைய தலைமுறையின் வழிகாட்டுதலில்
எம் இனம் வெற்றி நடை போடட்டும்
--த .சத்தியமூர்த்தி
No comments:
Post a Comment