Saturday, 19 February 2022

Pennukku Pidithavai-2

பெண்ணுக்குப்  பிடித்தவை -2

பாசத்துக்காக  ஏங்குவதே  பெண்ணுக்குப் 
பிரியமான   வழக்கம் 

சொந்தங்கள்  சேர்ந்து  நின்று  வாழ்த்த  
மணமகளாய்  மங்கள  நாண்  சூடும்  நாளே  
பெண்ணுக்கு  பிடித்த  திருநாள் 

கணவனைத்  தன்  கண்ணுக்குள், நெஞ்சுக்குள் , 
பொத்திப்   பாதுகாக்கப்  பிரியம் 

கணவனுக்கு  வாய்க்கு  ருசியாய்  வகை வகையாய் 
சமைத்து  பரிமாறப்  பிரியம் 

கட்டிய  கணவனின்  கையைப்  பிடித்து  கம்பீரமாய் 
கடைத்தெருவில்  உலா  வர  பிரியம் 

கணவன்  ஒழுக்கமானவனாக  அமைந்து  விட்டால்  
கர்வத்துடன்  சமூகத்தில் சொல்லி  சொல்லி  வலம்  வர பிரியம் 

தாய்  வீட்டிற்கு  போவதென்றால்  தாங்க  
முடியாத  கொள்ளைப்   பிரியம்

தாயாகப்   போகிறோம்  என்று  தெரிந்தவுடன்  
தன்  தாயின்  மடிமீது  தலை  வைக்கப்  பிரியம் 

தாங்க  முடியாத  வலியோடு  துடித்தாலும்,  
பிறந்த  குழந்தையின்  முகம்  பார்த்து  முத்தமிடுவதில்  பிரியம் 

கிண்ணத்தில்  சோறோடு  பருப்பு , நெய் கலந்து  
பாசத்தையும்  சேர்த்து,  மழலைக்கு  நிலவைக்  காட்டி  
அன்னம்  ஊட்ட அத்தனை  பிரியம்

கன்னத்தில்  மையிட்டு, பொட்டிட்டு , தலையைச்   சீவி  பூச்சூடி
தன்  குழந்தையை  தேவதையாய்  அலங்காரம்  செய்ய  பிரியம் 

குழந்தையை  தொட்டிலிட்டு  தாலாட்டு  பாட  பிரியம் 

சொந்தமாய்  வீடு  ஒன்று  கட்டி அதில்  குத்துவிளக்கு  
ஏற்ற  கொள்ளைப்  பிரியம் 

---த .சத்தியமூர்த்தி 

Sunday, 13 February 2022

Pennukku Pidithavai-1

 பெண்ணுக்குப்   பிடித்தவை -1

தங்கத்தாமரை  ஒன்று  பொன்னிற  மேனியோடு 
தரையில்  வந்து  பெண்  குழந்தையாய்  மலர்ந்தது 

வானத்து  நிலவு  ஒன்று  பௌர்ணமி  வெளிச்சமாய் 
மண்ணுக்கு  வந்து  மகாலட்சுமியின்  அம்சமானது  

பூத்து  நின்ற  புது  மலரைப்போல  புன்னகையைச்   
சிந்தி கை கொட்டி  ரசிக்கிறது 

அந்த  பெண்ணுக்கு  பிடித்தவை  வரிசையில் 

கை நிறைய வளையல்கள்  மாட்டி  அதை  கலகலவென  
ஆட்டிப்  பார்ப்பதில் கொள்ளை  பிரியம்

இரட்டை  ஜடை  போட்டுக்கிட்டு , பாவாடை  தாவணியில் 
பலரும்  வைய்த்த கண்  வாங்காமல்  பார்ப்பதில் 
 பெருமை  பொங்கும்  பிரியம் 

கார்முகில்  போன்ற  கூந்தலைத்  திருத்தி  தனக்கு  
பிடித்த  மலரைச்  சூடப்  பிரியம் 

விதவிதமாய்  புடவைக்கட்டி  கண்ணாடி  முன்னின்று  
தன் அழகைப்   பார்த்து  தானே  ரசிப்பதில்  பிரியம் 

கல்வியைக்  கருத்துடன்  பயின்று  நல்ல  நிலைக்கு  வந்து 
கை  நிறைய  சம்பாதிப்பதில்  அத்தனை  பிரியம் 

ஆணுக்கு  நிகராக  அத்தனை  வேலைகளையும்  தங்களாலும் 
செய்ய  முடியுமென  செய்து  காட்டப்  பிரியம் 

மஞ்சள்  பூசி  குளிப்பதென்றால்  மாதரசிக்கு  
கொள்ளை  பிரியம் 

குடும்பத்தைக்  காக்கும்  குத்து விளக்காய் 
சுடர்விட்டு  பிரகாசிக்க  அத்தனை  பிரியம் 

பெண்ணில்லா  உலகத்தை  கற்பனைச்  செய்ய  முடியாது 
தாயின்  பத்து  மாத  தவத்தால்  தான்  
ஆணினமே  பிறக்கிறது  

--த .சத்தியமூர்த்தி  

Saturday, 5 February 2022

Eyarkaiyin Seithi

இயற்கையின்  செய்தி  

அண்ணாந்து  பார்க்கும்  ஆகாயத்தில்  
ஆயிரமாயிரம்  இரகசியங்கள்  புதைந்துள்ளது 

அதல  பாதாளத்திலும்  தங்கமும்  வைரமும்  
வெட்டி  எடுக்கப்படுகிறது, பட்டைத்  தீட்டப்படுகிறது  

காடுகளில்  செழிப்போடு  மரங்களெல்லாம் 
யார்  நீரூற்றி  பாதுகாத்து  வளர்த்தது 

எல்லாவற்றையும்  தனக்குள்  மாயமாய்  மறைத்துக்  கொண்டு 
இயற்கை  சுழன்றுக்  கொண்டுள்ளது 

நிழல்  தந்து, காய் கனி  தந்து, மொத்தத்தையும் 
எடுத்துக்கொள் , என  செழித்து  வளர்ந்த  மரங்கள் 
எல்லாம்  சொல்லாமல்  சொல்கிறது   

மலையிலிருந்து  புறப்பட்டு  தவழ வைத்ததற்காக 
மட்டுமே , மண்ணை  வளப்படுத்தி , பயிரை  வளர  வைத்து ,
மானுடத்தைக்  காக்கிறது 

கரைப்  புரண்டு  ஓடிவரும்  ஆறுகளெல்லாம்

இயற்கை மனிதனின்  உற்ற  நண்பனாகி  தன்  
படைப்புகளையெல்லாம்  தானம்  செய்கிறது 

மனிதனோ  இயற்கையின்   முதல் எதிரியாகி 
மரத்தை  வெட்டி , காட்டை  அழித்து , மணலை  அள்ளி  

கனிமங்களையெல்லாம்  கொள்ளையடித்து  
அதிகாரத்தைக்  கொண்டு  அதிகாரம்  செய்கிறான் 

தர்மத்தின் வழி  மறந்து , மானுடம்  தவறும்  போது 
கொதிப்படைந்த  இயற்கை  பல்வேறு  வழிகளில்  
மனித  குலத்தைப்  பழி  வாங்குகிறது 

இயற்கையைப்  பாதுகாக்கும்  முயற்சியில்  
மக்கள்  அனைவரும்  ஓரணியில்  திரண்டு, 

தர்மத்தின்  வழியில்  நடந்தால்  இயற்கை  
வாஞ்சையோடு  நம்மைப்  பாதுகாக்கும் .

---த.சத்தியமூர்த்தி