Sunday, 16 April 2023

Kadalodi thamizhargal

கடலோடி தமிழர்கள்  

திரைக்கடலோடி  திரவியம் தேடிய 
கிரேக்கம் , யவனம் ,  பாரசீகம் என  

உலகமுழுவதும்  கடலோடிய  மூத்த  குடி 
நம்  இனமானமிக்க  தமிழ் குடி  

பண்டைய  தமிழர்கள்  கடல்  ஆமையை  வழித்தடத்திற்கு 
பயன்படுத்தி , நீண்டதூரம்  கடலில்  பயணித்தார்கள் 

கால்கோள் ஏற்பட்டு , நிலப்பரப்பு  தன்  நிலையை 
மாற்றியதால்  இன்று  உலகமுழுவதும் 

பரவி வாழும் தமிழினம்  நாகரிகத்தை  
உலகுக்குக்  கற்றுத்தந்த  இனம் 

தமிழும் , தமிழரும்  தொன்றுதொட்டு  
யுகம்  யுகமாய்  தொடர்ந்து  வருபவர்கள் 

கலை , இலக்கியம் , பண்பாடு  இவற்றில்  
கோலோச்சியவர்கள்  தமிழர்கள் 
  
மானம் , காதல் ,  வீரம்   இவற்றை  வாழ்வில்  
தமிழர்கள்  தங்கள்   மூச்சாக கொண்டவர்கள் 

வந்தாரை  வாழவைக்கும்  பண்புநலம்  மிக்கவர்கள்
 
பகைவர்க்கும்   அருள்வாய்   நன்னெஞ்சே 
எனப்   பாடியவர்கள்  

 வாடிய  பயிரைக்  கண்டபோது  வாடிய  
கருணையாளர்கள் 

இருப்பதை  அள்ளிக்  கொடுக்கும்
  கொடையாளர்கள் 

 அன்பு ,  அறிவு ,அடக்கம்,  பண்பு   இவற்றின் 
 கலவையே  தமிழர்கள் 

கடலோடு  வாழ்வை  இணைத்ததனால்  
பரங்கியரை  எதிர்த்து  கப்பலோட்டிய  தமிழர்கள் 

இத்தனை   சிறப்புமிக்க, உலகமெங்கும்  
பரவிவாழும்  எம்  தமிழ்  சொந்தங்களுக்கு 

இனிய  தமிழ் புத்தாண்டு  நல்வாழ்த்துக்கள் ..

-த .சத்தியமூர்த்தி  

No comments:

Post a Comment