கடலோடி தமிழர்கள்
திரைக்கடலோடி திரவியம் தேடிய
கிரேக்கம் , யவனம் , பாரசீகம் என
உலகமுழுவதும் கடலோடிய மூத்த குடி
நம் இனமானமிக்க தமிழ் குடி
பண்டைய தமிழர்கள் கடல் ஆமையை வழித்தடத்திற்கு
பயன்படுத்தி , நீண்டதூரம் கடலில் பயணித்தார்கள்
கால்கோள் ஏற்பட்டு , நிலப்பரப்பு தன் நிலையை
மாற்றியதால் இன்று உலகமுழுவதும்
பரவி வாழும் தமிழினம் நாகரிகத்தை
உலகுக்குக் கற்றுத்தந்த இனம்
தமிழும் , தமிழரும் தொன்றுதொட்டு
யுகம் யுகமாய் தொடர்ந்து வருபவர்கள்
கலை , இலக்கியம் , பண்பாடு இவற்றில்
கோலோச்சியவர்கள் தமிழர்கள்
மானம் , காதல் , வீரம் இவற்றை வாழ்வில்
தமிழர்கள் தங்கள் மூச்சாக கொண்டவர்கள்
வந்தாரை வாழவைக்கும் பண்புநலம் மிக்கவர்கள்
பகைவர்க்கும் அருள்வாய் நன்னெஞ்சே
எனப் பாடியவர்கள்
வாடிய பயிரைக் கண்டபோது வாடிய
கருணையாளர்கள்
இருப்பதை அள்ளிக் கொடுக்கும்
கொடையாளர்கள்
அன்பு , அறிவு ,அடக்கம், பண்பு இவற்றின்
கலவையே தமிழர்கள்
கடலோடு வாழ்வை இணைத்ததனால்
பரங்கியரை எதிர்த்து கப்பலோட்டிய தமிழர்கள்
இத்தனை சிறப்புமிக்க, உலகமெங்கும்
பரவிவாழும் எம் தமிழ் சொந்தங்களுக்கு
இனிய தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் ..
-த .சத்தியமூர்த்தி
No comments:
Post a Comment