மே 1
உழைக்கும் பெருமக்களின் உன்னத தினம்
தொழிலாளர்கள் தங்கள் உரிமைக்காக
முன்னெடுத்த நீண்ட நெடிய போராட்டம்
வெற்றிமுரசு கொட்டியதைக் கொண்டாடிய தினம்
உழைப்பாளர் சிலையை நிறுவி உழைப்பின்
மேன்மையை உலகுக்கு உணர்த்தியவர்கள்
எட்டு மணிநேர வேலை , போனஸ் , கூடுகள் வேலை
நேரத்துக்கு கூடுதல் ஊதியம் என பலவும்
போராடிப்பெற்ற உரிமைகள்
குறைந்த விலைக்கு குத்தகை நிலம் , தங்குதடையில்லா
மின்சாரம் , குறைந்த ஊதியத்திற்கு தொழிலாளர்கள் ,
மானியம் , வரிச்சலுகை , வங்கிகளில் கடன் ,
இத்தனையும் கிடைப்பதால் தான் பன்னாட்டு நிறுவனங்கள்
நம் நாட்டை நோக்கி வருகிறார்கள்
பன்னாட்டு நிறுவனங்களுக்காக தொழிலாளர் வேலை
நேரத்தை எட்டு மணியிலிருந்து 12 மணிநேரமாக
அவசர கதியில் சட்டமியற்றி எழுந்த கடும்
எதிர்ப்பால் தற்சமயம் நிறுத்தி வைத்து உள்ளார்கள்
கிழக்கிந்திய கம்பெனி என்ற பெயரில் வணிகம்
செய்ய வந்த வெள்ளையர்கள் நம்மை அடிமைப்படுத்தி
பின் நாட்டையும் அடிமைப்படுத்தினார்கள்
இது வரலாறு
மக்கள் தேர்ந்தெடுத்த அரசு மக்களுக்கு மட்டும் தான்
விசுவாசமாக இருக்க வேண்டும்
தொழிலாளர் உரிமைகள் தொடர்ந்து பாதுகாக்க
மே 1ல் சூளுரைப்போம்
வாழ்க ! உழைப்பாளர் தினம்
ஓங்குக ! தொழிலாளர் ஒற்றுமை
வெல்க ! உழைப்பாளர் உரிமைகள்
---த .சத்தியமூர்த்தி