Sunday, 30 April 2023

May 1

மே 1

உழைக்கும்  பெருமக்களின்  உன்னத  தினம் 

தொழிலாளர்கள்  தங்கள்  உரிமைக்காக  
முன்னெடுத்த  நீண்ட நெடிய  போராட்டம்  
வெற்றிமுரசு கொட்டியதைக்   கொண்டாடிய  தினம் 

உழைப்பாளர்   சிலையை  நிறுவி  உழைப்பின்  
மேன்மையை  உலகுக்கு  உணர்த்தியவர்கள் 

எட்டு  மணிநேர  வேலை , போனஸ் , கூடுகள்  வேலை 
நேரத்துக்கு  கூடுதல்  ஊதியம்  என  பலவும்  
போராடிப்பெற்ற  உரிமைகள்

குறைந்த  விலைக்கு  குத்தகை  நிலம்  , தங்குதடையில்லா 
மின்சாரம்  , குறைந்த ஊதியத்திற்கு  தொழிலாளர்கள் ,
மானியம் , வரிச்சலுகை , வங்கிகளில்  கடன்  ,

இத்தனையும்  கிடைப்பதால்  தான்  பன்னாட்டு  நிறுவனங்கள் 
நம்  நாட்டை  நோக்கி  வருகிறார்கள் 

பன்னாட்டு  நிறுவனங்களுக்காக  தொழிலாளர்  வேலை 
நேரத்தை  எட்டு மணியிலிருந்து  12 மணிநேரமாக
  
அவசர  கதியில்  சட்டமியற்றி எழுந்த  கடும் 
எதிர்ப்பால்  தற்சமயம்  நிறுத்தி  வைத்து  உள்ளார்கள் 

கிழக்கிந்திய  கம்பெனி  என்ற  பெயரில்  வணிகம் 
செய்ய  வந்த  வெள்ளையர்கள்  நம்மை  அடிமைப்படுத்தி 

பின்  நாட்டையும்  அடிமைப்படுத்தினார்கள் 
இது  வரலாறு 

மக்கள் தேர்ந்தெடுத்த  அரசு மக்களுக்கு  மட்டும்  தான் 
விசுவாசமாக  இருக்க  வேண்டும் 

தொழிலாளர் உரிமைகள்  தொடர்ந்து   பாதுகாக்க 
மே 1ல்  சூளுரைப்போம் 

வாழ்க  ! உழைப்பாளர்  தினம் 
ஓங்குக  ! தொழிலாளர்  ஒற்றுமை 
வெல்க  ! உழைப்பாளர்  உரிமைகள் 

---த .சத்தியமூர்த்தி  

Sunday, 16 April 2023

Kadalodi thamizhargal

கடலோடி தமிழர்கள்  

திரைக்கடலோடி  திரவியம் தேடிய 
கிரேக்கம் , யவனம் ,  பாரசீகம் என  

உலகமுழுவதும்  கடலோடிய  மூத்த  குடி 
நம்  இனமானமிக்க  தமிழ் குடி  

பண்டைய  தமிழர்கள்  கடல்  ஆமையை  வழித்தடத்திற்கு 
பயன்படுத்தி , நீண்டதூரம்  கடலில்  பயணித்தார்கள் 

கால்கோள் ஏற்பட்டு , நிலப்பரப்பு  தன்  நிலையை 
மாற்றியதால்  இன்று  உலகமுழுவதும் 

பரவி வாழும் தமிழினம்  நாகரிகத்தை  
உலகுக்குக்  கற்றுத்தந்த  இனம் 

தமிழும் , தமிழரும்  தொன்றுதொட்டு  
யுகம்  யுகமாய்  தொடர்ந்து  வருபவர்கள் 

கலை , இலக்கியம் , பண்பாடு  இவற்றில்  
கோலோச்சியவர்கள்  தமிழர்கள் 
  
மானம் , காதல் ,  வீரம்   இவற்றை  வாழ்வில்  
தமிழர்கள்  தங்கள்   மூச்சாக கொண்டவர்கள் 

வந்தாரை  வாழவைக்கும்  பண்புநலம்  மிக்கவர்கள்
 
பகைவர்க்கும்   அருள்வாய்   நன்னெஞ்சே 
எனப்   பாடியவர்கள்  

 வாடிய  பயிரைக்  கண்டபோது  வாடிய  
கருணையாளர்கள் 

இருப்பதை  அள்ளிக்  கொடுக்கும்
  கொடையாளர்கள் 

 அன்பு ,  அறிவு ,அடக்கம்,  பண்பு   இவற்றின் 
 கலவையே  தமிழர்கள் 

கடலோடு  வாழ்வை  இணைத்ததனால்  
பரங்கியரை  எதிர்த்து  கப்பலோட்டிய  தமிழர்கள் 

இத்தனை   சிறப்புமிக்க, உலகமெங்கும்  
பரவிவாழும்  எம்  தமிழ்  சொந்தங்களுக்கு 

இனிய  தமிழ் புத்தாண்டு  நல்வாழ்த்துக்கள் ..

-த .சத்தியமூர்த்தி