மனம்
மனத்துக்கண் மாசிலனாதல் - அனைத்தறன் ஆகுல
நீர பிற -- வள்ளுவன் வாக்கு
உள்ளத்தளவில் ஒருவன் குற்றமற்றவனாய் இருந்தால் போதும்
மேற்கொண்டு எந்த அறமும் செய்யத் தேவையில்லை
மனமது செம்மையானால் மந்திரம் எதுக்கு ?
மனமிருந்தால் மார்க்கம் உண்டு
மனம் போல் மாங்கல்யம்
மனம் போல் வாழ்வு
மனமே ! நீ கொஞ்சம் இளைப்பாறு !!
மனமே ! நீ கொஞ்சம் களைப்பாறு !!
மனம் ஒரு குரங்கு - ஆட்டுவிக்கும்
ஆடவைக்கும் நம்மை மாட்டவைக்கும்
மனம் ஒரு கண்ணாடி - நம் எண்ணத்தைப் பிரதிபலிக்கும்
மனம் ஒரு குதிரை - நமக்கு குழிப் பறிக்கும்
மனம் ஒரு இயந்திரம் - சதா இயங்கிக்கொண்டே இருக்கும்
மனம் ஒரு காற்றாடி - அலைந்து திரிந்து சிக்கிக்கொள்ளும்
மனம் ஒரு பறவை - பறந்துக்கொண்டே இருக்கும்
மனம் ஒரு பந்து - குதித்துக்கொண்டே இருக்கும்
மனம் ஒரு நரி - தந்திரம் செய்துகொண்டே இருக்கும்
மனம் ஒரு பச்சோந்தி - மாறிக்கொண்டே இருக்கும்
மனதைப் பக்குவப்படுத்த உயர்வு உண்டு
மனதை அடக்கிப் பழக நிம்மதி உண்டு
மனதோடு உறவாட மகிழ்ச்சி உண்டு
மனதில் உறுதி இருந்தால் வெற்றி உண்டு
மனம் ஒரு பொக்கிஷம் பாதுகாத்துக் கொள்வோம்
மனம் ஒரு தெளிந்த நீரோடை நல்லதையே நினைப்போம்
----த .சத்தியமூர்த்தி