Saturday, 17 December 2022

Porumai

பொறுமை 

பொறுத்தார்  பூமி  ஆள்வார் 
பொறார்  காடு  கொள்வார் 

பொறுமை  கடலினும்  பெரிது 
பொறுமையே  எல்லோருக்கும்  பெருமை 

அமைதியின்  உச்சமே  பொறுமை 
அகிம்சையின்  வெள்ளமே  பொறுமை 

மழலைக்காக  தாய்  பத்துமாதம்  தவமிருப்பது  பொறுமை 

தவழ, நடக்க, ஓட , பேச , எழுத , கற்க  
எல்லாவற்றிற்கும்  தேவை பொறுமை 

வேலை  தேடி  அலைபவர்க்கு , நிச்சயம்  தேவை பொறுமை 
வேண்டியதெல்லாம்  கிடைப்பதற்கு  தேவை பொறுமை 

காதலிக்காக  காலமெல்லாம்  காத்திருப்பது  பொறுமை 
மனைவியை  மகிழ்ச்சியுடன்  வாழவைக்க  தேவை பொறுமை 

அதிகாரத்தில்  இருப்பவர்க்கு , அவசியம்  தேவை பொறுமை 
மக்களுக்கான  உரிமையை  மீட்டெடுக்க  காலம்  தந்த  கொடையே  பொறுமை 

சண்டை  , சச்சரவின்றி  நம்மை  வாழவைப்பதும் பொறுமை 
சமாதானத்தை  நிலைநாட்டும்  அட்சயப்பாத்திரமே  பொறுமை 

பொறுமையென்னும்  நகையணிந்து  பெண்கள்  
பெருமை கொள்ளவேண்டும் 

அவ்வையின்  அமுத வாக்கை  தெய்வவாக்காக கொள்ளவேண்டும் 

தனிமனிதனின்  பொறுமை  சமூகத்தை  உயர்த்தும் 
சமூகத்தின்  பொறுமை  தேசத்தை  உயர்த்தும்  

மக்களுக்கான  தலைவனை அடையாளம்  காண  தேவை பொறுமை 

   மானம் , வீரம்,  நிறைந்த தமிழ்  சமுதாயத்தின்  
அடையாளமே  தமிழ்க்  குடியின்  பொறுமை 

சகிப்புத்தன்மையும் , நம்பிக்கையும் , பொறுமையும், 
  வெற்றியின்  சின்னங்களாகும் 

பொறுமையைப்  பேணி  பெருமை  கொள்வோம் 

---த .சத்தியமூர்த்தி 

  

No comments:

Post a Comment