Sunday, 18 September 2022

Arambam

ஆரம்பம்  

இல்லறத்தின்  இனிய  துவக்கம்  தான்  
நல்ல  குடும்பத்தின்  ஆரம்பம் 

இரு   மனங்களின்  இணைப்பின்  துவக்கம்   தான் 
இனிய  மழலைகளின்  வருகைக்கான  ஆரம்பம்

தவழ்வதற்கு , நடப்பதற்கு , பேசுவதற்கு  துவக்கமே 
மழலைகளின்  இடைவிடாத   ஆரம்பம்

வெற்றிக்கான   ஆரம்பமே,  தொடர்ந்த  பயிற்சியும் 
விடாத  ஊக்கமும் , கடின  உழைப்பே  ஆகும் 

சமூகத்தின்  வளச்சிக்கான   ஆரம்பமே  அவர்களின்  
விழிப்புணர்வை  பொறுத்தே  அமையும் 

 ஆரம்பம்  அமர்க்களமாய்  அமைந்து   விட்டால்  
அடுத்தடுத்த  நிலைகளைத்  தாமாக  எட்டி விடலாம் 

நாளை செய்யலாம்,  என  நாளைத்  தள்ளிப்  போடாமல் 
 இன்றே  இப்பொழுதே,  ஆரம்பித்தால்   வெற்றி  நிச்சயம்  

நல்லதொரு  துவக்கமே  மிகப்பெரிய  
எழுச்சிக்கு   வித்திடும்  

நல்ல  நல்ல  நூல்களைத் தேடித்தேடிப்  படிப்பதே 
அறிவைப்  பெருக்கிக்  கொள்ளும்   ஆரம்பம்

அச்சமின்றி  அனைவரும்  உண்மைக்காக  ஓரணியில் 
திரள்வதே  நாட்டின்  நன்மைக்கான   ஆரம்பம்

பதுக்கி  வைக்கும்  பழக்கத்தை  விட்டு , பங்கு  போடும் 
சமதர்மத்தைக்  கடை  பிடித்தால்  பொதுவுடமைக்கான  ஆரம்பம்

நல்லவர்கள்  கையில்  நாட்டை  ஒப்படைப்பதே 
உண்மை  ஜனநாயகத்தின்   ஆரம்பம்

கூடி  வாழும்  சமூகமே  கோடி நன்மை  பெறும் 
ஒன்று  பட்ட  சமூகமே  வாழ்வாங்கு  வாழும் 

அதற்கான  இனிய  துவக்கமே  நல்ல   ஆரம்பம்

--த .சத்தியமூர்த்தி 
,

Sunday, 11 September 2022

Neethi Enge?

 நீதி  எங்கே ?

நீதி  என்பது  ஆதிக்க  வர்க்கத்தின்  சட்டைப் பைக்குள்  
அடக்க  நினைக்கும்  கரன்சி  நோட்டல்ல 

நீதி  அறத்தோடு  சார்ந்தது , அறம்  தர்மத்தோடு  இணைந்தது,
அகிலமுழுவதும்  வியாபித்துள்ளது , அதனால்  தான்  
பிரபஞ்சமே  சுற்றுகிறது  

  ஆயிரம்  கரங்கள்  மறைத்து  நின்றாலும்  ஆதவன்  மறைவதில்லை 
அதுபோல, 

ஆட்சி  அதிகாரம் , ஆதிக்கவர்க்கம்,  பள்ளிக்  கல்வித்துறை ,
காவல்  துறை , ஒருசில  ஊடகங்கள் , எல்லாம்  கை  கோர்த்து  
பள்ளி  நிர்வாகத்தைக்  காப்பாற்ற  முயன்றாலும் 
நீதி  தோற்பதில்லை 

நீதி  கேட்டு  போராடினால்  உடனே  அந்த  தாயின்  மீதே 
 அவதூறு பரப்புவது,  ஆளை  மிரட்டுவது ,

ஜனநாயக  நாட்டின்  மரபுக்கே  கேடு இது . 

வழக்கு  இன்னும்  ஆரம்ப  நிலையிலே  
குற்றப்பத்திரிக்கை  தாக்கல்  செய்யவில்லை
  
சாட்சிகள் இன்னும்  விசாரிக்கப்படவில்லை   
ஆனால்  அதற்குள் வழக்கு  முடிந்துவிட்டது 

இது  வழக்கு  விசாரணையை  
எப்படி  நேர்மையாக  நடத்த  உதவும் 

வானளாவ  அதிகாரம்  படைத்தவன்  இங்கே  
அனைத்தையும்  முடிவெடுக்கும்  ஆண்டவன் தான் 

எல்லாரும்  உண்மைக்கு , நேர்மையுடன் உழைத்தால்  தான் 
நீதிகிடைக்கும்.  ஜனநாயகம்  பிழைக்கும் .

த .சத்தியமூர்த்தி