Sunday, 28 August 2022

Seyalaaku

 செயலாக்கு 

கண்ணும் கருத்துமாய்  படிப்பைக்  கற்று  
பட்டம்  பெறுவதில்  செயலாக்கு 

ஏழை ,எளியோரின்  துயர்  நீக்கவே  
உழைப்பதை நாளும்  செயலாக்கு 

கவிதைகள்   மூலம் மக்கள்  மனதினில்  
நம்பிக்கை  விதைப்பதைச்  செயலாக்கு 

காலம்  மாறும் ,வசந்தம்  வீசும் 
கலப்பையை  உழுது  செயலாக்கு 

கைத்தொழில்  மூலம்  அர்ப்பணிப்போடு  
ஒன்றி   பாடுபட செயலாக்கு 

வேலை  செய்தால்  மட்டுமே  நல்ல  வேளை  வரும்  
என ஊருக்கு  உரைத்திட  உண்மையாகவே செயலாக்கு 

படிப்படியாக   வளர்ந்து,  பணக்காரர் வரிசையில் , 
நம்மையும்  இணைத்திட ,  முனைப்புடனே  செயலாக்கு 

வீண்  பேச்சை   பேசியே  வீணானது போதும் 
இனியாவது   செயலில் இறங்கி  வெற்றி காணவே  செயலாக்கு 

 விடியும்   பொழுதினை, விரும்பியே  வரவேற்று  
உற்சாகமுடன்  செயல்பட  செயலாக்கு 

சட்டமும்  நிதியும்,  பணம்  படைத்தவர்க்கே! 
ஏழை   சொல் அம்பலத்தில்  ஏறாது!   என்றால் 
மக்கள்  சக்தியை  ஒருங்கிணைக்கும் ஜனநாயகக்  
கடமையை செயலாக்கு 

நல்ல  நல்ல  செயல்   திட்டத்தால்  தான் 
மக்களிடம்  நம்பிக்கை  பெற முடியும்
      
இல்லையென்றால்  ஆட்சிகள் மாறும்  காட்சிகள்   
நாளை  இங்கே  அரங்கேறும்  

என்ன  நன்மை  செய்தார்கள்  என்பதை  வைத்தே 
மக்கள்  எதிர்காலத்தில்  நல்ல  முடிவெடுப்பார்கள் 

--த .சத்தியமூர்த்தி 

Sunday, 21 August 2022

Vaaimai

வாய்மை  

பொய்களின்  முகத்திரையைக்  கிழித்தெறிந்து  வான் 
உதித்த  சூரியன்  போல்  வெளிபடுவதே  வாய்மை

ஆதிக்க  சக்திகளின்  அதிகாரத்தைக்  கடந்து  கடல்  
அலைபோல்  பொங்கி  மேலெழுவதே  வாய்மை 

வஞ்சக  நரிகளின்  பொய் கூடாரத்தில் மறைத்து  வைத்தாலும் ,
தக்க  சமயத்தில் தன்னை  வெளிச்சம்  போட்டுக் காட்டுவதே வாய்மை

ஜனநாயகத்தின்  பேராலே,  கொள்ளையடிக்கும்  கூட்டத்தை 
கூண்டோடு  வீட்டுக்கு  அனுப்புவதே  வாய்மை

காலங்கடந்து  தீர்ப்பு வந்தாலும், நீதிமன்றங்களில் 
 இன்னமும்  கர்வத்தோடு  நடைபோடுவதே  வாய்மை

சாதாரண  சாமானியனின்  பக்கம்  ஆட்சி  , அதிகாரம்  , இல்லாது  
போனாலும்  இன்னமும்  கவசம்  போல்  மக்களைக்  காக்கும்  
கேடயமே  வாய்மை

பொய்மை  மொத்தமாய்  ஆலவட்டம்  போட்டு,  ஆட்டம்  போட்டாலும், 
கடைசியில்  வழக்கம்  போல்  வெற்றி  பெறுவது  வாய்மை

பச்சை  கரன்சி  நோட்டுக்காக,  பல்லிளித்து  வெட்கமில்லாமல் 
ஆயிரம்  வேடங்கள்  போட்டாலும்,  மக்கள்  மன்றத்தில்  துரத்தப்பட்டு  
பின்  நீதிமன்றத்தால்  தண்டிக்கப்படுவதே  வாய்மை

நல்லவரை  போல்  நடமாடும்  கபடதாரிகளை  நம்மிடத்தில்  
காட்டிக்  கொடுப்பதே  இந்த  வாய்மை

அடிமேல்  அடிவாங்கி  அடித்தட்டு  மக்களெல்லாம் , 
ஜாதிவெறியர்களாலும்  , மதவெறியர்களாலும்  துண்டாடப்பட்டு ,

புழுவாய் துடித்தபோதும்,  இன்னமும்  பொறுமையோடு  இருப்பதற்குக்  
காரணமே  

என்றாவது  ஒருநாள் நீதி வென்று  வாய்மை  வெளிப்படும்  
என்ற  நம்பிக்கையில்  தான் 

வாய்மை   என்பதே   தூய்மை !  நேர்மை !!
அது   தான்  வெல்லும்  என்பதே  உண்மை !!! 

---த .சத்தியமூர்த்தி 

Sunday, 14 August 2022

Suthanthiram-75

  சுதந்திரம் -75

 சுதந்திரத்தின்  பொன் விழா  ஆண்டு  

உத்தமதலைவன்  மகாத்மா காந்தியின்  கறைபடியா 
கரத்தை  அலங்கரித்தது   நம் தேசியக்  கொடி 

ஜனநாயக  சிற்பி  ஜவஹர்லால்நேருவின் கரத்தை 
வலுப்படுத்தியது  நம்  தேசியக்  கொடி  

கர்மவீரர்  காமராஜரின்  தியாகத்தால்  பல  ஆண்டுகள் 
சிறைக்குப்பின்  மலர்ந்தது  நம் தேசியக்  கொடி 

 வெள்ளையனின் தடியடிக்குப்  பின்பும் , திருப்பூர்  குமரனின் 
உடலிலிருந்து  உயிர்  பிரிந்த  பின் தான்  , கையை விட்டு  
பிரிந்தது  நம் தேசியக்  கொடி 

கப்பலோட்டிய   தமிழன் வ .உ .சிதம்பரனாரும்  ,
சிங்கமென கர்ஜித்த  சுப்பிரமண்ய  சிவாவும்,
 
 உணர்ச்சிபொங்க  சுதந்திரகீதம் பாடிய  
மகாகவிஞன் சுப்பிரமண்ய  பாரதியும்,     

சுதந்திரம்  எனது   பிறப்புப்புரிமை  எனச்  சொல்லிய
பால  கங்காதர  திலகரும்  இன்னாளில் 

நாம்  நன்றியோடு   நினைத்து போற்றப்படவேண்டியவர்கள் .

நாடுவிட்டு   நாடு  சென்று ,, படைதிரட்டி  வெள்ளையனை  
எதிர்த்த  மாவீரன்  நேதாஜி  சுபாஷ்  சந்திர  போஸும்,

அவருக்கு பக்கபலமாய்  துணை  நின்ற  ஐயா  
பசும்பொன்  முத்துராமலிங்க  தேவரும் , 

சுதந்திர  போராட்டத்தில்  ஈடுபட்ட  அபுல்  கலாம்  ஆசாத்தும்,  
தங்கள்  இன்னுயிரைத்   தந்த  மாவீரன்  பகத்சிங் , சுகதேவ்  ,ராஜகுரு,
 
வாஞ்சிநாதன் , சந்திரசேகர  ஆசாத் , சூர்யா  சென் இதுபோன்ற 
இலட்சோப  இலட்ச  தியாகிகளின்  தியாயகத்தால்  
மலர்ந்தது  நம் தேசியக்  கொடி

"என்று  தணியும்  இந்த சுதந்திர  தாகம் 
என்று  மடியும்  எங்கள்  அடிமையின்  மோகம் "

"வந்தே  மாதரம்  என்போம் .  எங்கள் 
மாநிலத்தாயை   வணங்குதல்  செய்வோம்" 

வாழ்க  பாரதம் !  வாழ்க  பாரத  மணிக்கொடி !
வளர்க  பாரதம் ! ஜெய்  ஹிந்த் ..

த .சத்தியமூர்த்தி