Sunday, 19 March 2023

Mudhalvar NithishKumar இனப்பற்று

 முதல்வர்  நிதிஷ்குமாரின்  இனப்பற்று

நாடு  விடுதலைக்குப்  பிறகு  எந்தவொரு  கட்டுமானத்தையோ ,
கல்வி  நிறுவனங்களையோ,  தொழிற்கூடங்களையோ ,

வசதி  வாய்ப்புகளையோ,  உருவாக்காமல் பீஹார்  அரசுகள்  கடந்த 
காலங்களில்  மக்களை  மதுவுக்கு  அடிமையாக்கி ,

கோடிகோடியாக  கொள்ளையடித்து  மக்களின் 
 வாழ்க்கையைச்  சுரண்டிப்பிழைத்தார்கள் 

 நிதிஷ்குமாரின்  வருகைக்குப் பிறகு  மதுவிலக்கை  
அமுல்படுத்தி,  மாநிலத்தை  அக்கறையோடு  கவனித்தாலும்  

அம்மாநில  மக்கள்  பிழைப்புக்காக  அண்டை  மாநிலம்  மற்றும் 
தமிழகம்  நோக்கி  தொடர்ந்து  வந்து கொண்டிருக்கிறார்கள் 
    
இந்த  நிலையில்  பீஹாரில்  அவர்களாகவே  ஒரு புரளியைக்  
கிளப்பி , அதன்மீது  விசாரணைக்காக  அவர்களாகவே ஒரு 

குழுவை  அனுப்பி,  தமிழகத்தில்  பீஹாரிகள்  மற்றும்  வடமாநில  
தொழிலாளர்கள்  பாதிப்பு  போல  ஒரு  பிம்பத்தை  உருவாக்குகிறார்கள் 

வந்தாரை  வாழவைக்கும்  தமிழகத்தில்  அதுபோல  ஒரு  நிலை
இல்லையென்றாலும்  அவர்களுக்கு  விளக்கமளித்தது  

தமிழர்களின்  பெருமையை உலகுக்கு  பறைசாற்றியது 

கடந்த  காலத்தில்  ஆந்திரத்தில்  தமிழர்கள்மீது  துப்பாக்கிசூடு
கர்நாடகத்தில்  கடும் தாக்குதல் , 
தமிழக  மீனவர்கள் மீது தொடர்தாக்குதல் 

இதன்மீது  தமிழக அரசு  எடுத்த  நடவடிக்கை  ?

தமிழர்கள்மீது  தாக்குதல்  எங்கு  நடந்தாலும்  

நம்  முதல்வர்  ஒரு  குழுவை  அந்த மாநிலங்களுக்கு 
அனுப்பி  தமிழரைப்  பாதுகாக்கவேண்டும் 

வழிகாட்டிய  நிதிஷ் குமாருக்கு  நன்றி

---த .சத்தியமூர்த்தி 

Saturday, 4 March 2023

Naattu Nadapu

நாட்டு   நடப்பு

ஆன்மிகம் என்னும்  போர்வைக்குள்  ஆயிரம் 
தில்லுமுல்லு  செய்யும்  கார்ப்பரேட்  சாமியின் 
சிவராத்திரி   குத்தாட்டம்  வெகு  ஜோரு 

விண்ணை  முட்டும்  விலைவாசி  உயர்வால் 
பட்டினியோடு  போராடும்  ஏழைகளின்  
கண்ணீரைப்  பற்றி  கவலைப்படாத  
அரசுகளின்  ஆணவப்போக்கு  வெகு  ஜோரு 

ஜாதியாலே , மதத்தாலே  மக்களை  பிளவுபடுத்தி 
அரசியல்  அதிகாரம்  பெற்று  ஆளவட்டம்  போடும் 
அரசியல்வாதிகளின்  சாமர்த்தியம்  செம  ஜோரு 

பெண்களின் மீது தொடரும்  பொள்ளாச்சி  போன்ற 
பாலியல்  குற்றவாளிகளைக்   காப்பாற்ற   
அரசு இயந்திரம்  காட்டும்  முனைப்பு  வெகு  ஜோரு 

வெட்கித்  தலைகுனியும்  வேங்கைவயல்  போன்ற 
சம்பவத்தில்  அரசின்  மெத்தனப்  போக்கு வெகு  ஜோரு 

தூத்துக்குடி  துப்பாக்கிசூட்டிற்கு   நீதிவிசாரணை  வேண்டி 
போராடியும்  ஒன்றும்  நடவாவது  வெகு  ஜோரு 

பொதுத்துறை  நிறுவனங்களின்  சொத்துக்களையெல்லாம் 
அதானியும்  , அம்பானியும்  ஆட்டையைப்   போட்டு 
இந்தியாவையே  விலைக்கு  வாங்கி  மன்னரைப்போல
வலம்  வருவது  வெகு  ஜோரு 

கோடிகோடியாய்  செலவுசெய்து  , மக்களையெல்லாம்   அழைத்துவந்து  விருந்துவைத்து  பரிசுப்பொருட்களை  அள்ளித்தந்து 
வெற்றியை  விலைக்கு  வாங்கி  கொண்டாட்டம்  போடுவது  வெகு  ஜோரு 

கள்ளக்குறிச்சியில்  இன்னும்  குற்றப்பத்திரிக்கை  தாக்கல்செய்யாது 
குற்றவாளிகளைப்  பாதுகாப்பது  வெகு  ஜோரு 

மந்தைகளாய்  உள்ள  மக்களெல்லம்  
மண்ணின்  விடுதலைக்காக  மீண்டுமொருமுறை  

போராட  எழுந்துவரும்  பொன்னாலே  
உண்மையான  ஜனநாயம்  வெல்லும்  திருநாளாகும் 

--த .சத்தியமூர்த்தி