முதல்வர் நிதிஷ்குமாரின் இனப்பற்று
நாடு விடுதலைக்குப் பிறகு எந்தவொரு கட்டுமானத்தையோ ,
கல்வி நிறுவனங்களையோ, தொழிற்கூடங்களையோ ,
வசதி வாய்ப்புகளையோ, உருவாக்காமல் பீஹார் அரசுகள் கடந்த
காலங்களில் மக்களை மதுவுக்கு அடிமையாக்கி ,
கோடிகோடியாக கொள்ளையடித்து மக்களின்
வாழ்க்கையைச் சுரண்டிப்பிழைத்தார்கள்
நிதிஷ்குமாரின் வருகைக்குப் பிறகு மதுவிலக்கை
அமுல்படுத்தி, மாநிலத்தை அக்கறையோடு கவனித்தாலும்
அம்மாநில மக்கள் பிழைப்புக்காக அண்டை மாநிலம் மற்றும்
தமிழகம் நோக்கி தொடர்ந்து வந்து கொண்டிருக்கிறார்கள்
இந்த நிலையில் பீஹாரில் அவர்களாகவே ஒரு புரளியைக்
கிளப்பி , அதன்மீது விசாரணைக்காக அவர்களாகவே ஒரு
குழுவை அனுப்பி, தமிழகத்தில் பீஹாரிகள் மற்றும் வடமாநில
தொழிலாளர்கள் பாதிப்பு போல ஒரு பிம்பத்தை உருவாக்குகிறார்கள்
வந்தாரை வாழவைக்கும் தமிழகத்தில் அதுபோல ஒரு நிலை
இல்லையென்றாலும் அவர்களுக்கு விளக்கமளித்தது
தமிழர்களின் பெருமையை உலகுக்கு பறைசாற்றியது
கடந்த காலத்தில் ஆந்திரத்தில் தமிழர்கள்மீது துப்பாக்கிசூடு
கர்நாடகத்தில் கடும் தாக்குதல் ,
தமிழக மீனவர்கள் மீது தொடர்தாக்குதல்
இதன்மீது தமிழக அரசு எடுத்த நடவடிக்கை ?
தமிழர்கள்மீது தாக்குதல் எங்கு நடந்தாலும்
நம் முதல்வர் ஒரு குழுவை அந்த மாநிலங்களுக்கு
அனுப்பி தமிழரைப் பாதுகாக்கவேண்டும்
வழிகாட்டிய நிதிஷ் குமாருக்கு நன்றி
---த .சத்தியமூர்த்தி