அன்பின் மகத்துவம்
அன்பும் அறமும் உடைத்தாயின் - இல்வாழ்க்கை
பண்பும் பயனும் அது
அன்பு செய்ய அகிலம் வசப்படும்
அன்பு தான் அகிலத்தை ஆட்டுவிக்கும்
அன்பு தான் அனைவரையும் கட்டிப்போடும் ஆயுதமாகும்
அன்பு சுரக்கும் விழியில் தான் கருணை பிறக்கும்
அன்புக்காகத்தான் அனைவரும் ஏங்குகிறோம்
அன்பைத் தேடித் தான் அனைவரும் ஓடுகிறோம்
அன்பு நிறைந்த நெஞ்சில் தான் அருள் பெருகும்
அன்பு தான் உயர்ந்த சிம்மாசனத்தை அலங்கரிக்கும்
அன்பு கொடுக்க கொடுக்க வற்றாத ஜீவநதி
அன்பு அகிலமுழுவதும் ஆட்சி செய்கிறது
அன்புக்கு ஜாதியில்லை , மதமில்லை , இருப்பவன்,
இல்லாதவன் என்ற ஏற்ற தாழ்வில்லை
அன்புக்கு தலை வணங்குவது படைத்த
ஆண்டவனுக்கு தலை வணங்குவதாகும்
ஏனென்றால் அன்பும் ஆண்டவனும் ஒன்று
அன்பை விதைத்தால் ஆனந்தம் பயிராகும்
அன்பை ஆராதித்தால் ஆரம்பமே சுகமாகும்
அன்பை அச்சாணியாகக் கொண்டு உலகம் சுழல்கிறது
அன்பை ஆதாரமாகக் கொண்டு நம் வாழ்க்கை நடக்கிறது
அன்பே நம் அனைவரின் மொழியாகட்டும்
அன்பே நாம் விரும்பும் வழியாகட்டும் ..
--த .சத்தியமூர்த்தி