பிரியா விடை-1
குயில் கூவும் சோலையிலே - என் மனம்
மகிழும் வேளையிலே,
இளைப்பாறக் கண்ணயர்ந்தேன்
இதயத்தைத் தொடும் வகையில்
இசையோடு கலந்து வரும்
குரலோசை தனைக்கேட்டு
குரல் வந்த திசை நோக்கி
மெதுவாகத்தான் நடந்தேன்
அருகில் நான் சென்றவுடன்,
அதுவரையில் வந்த குரலோசைக் கேட்கவில்லை
ஒருவரையும் காணவில்லை - கால் கடுக்க
சோலை முழுதும் நான் நடந்து பார்த்தாலும்
குரலுக்குரியவளை பார்க்க முடியவில்லை
களைப்போடுக் கண்மூடி நிழலோரம் நான் கிடக்க
தென்றலது மெல்ல வந்து
தேகமதை தீண்டுவது போல் ,
பசியோடு இருந்தவனின் பார்வை முன்
பழுத்த மரம் பாதையிலே முளைப்பது போல்,
தண்ணீருக்கு அலைந்தவனின் பார்வை முன்
தடாகமொன்று தட்டுப்பட்டது போல் ,
கடும் வெயிலில் நிழலுக்கு அலைந்தவன் முன்
பந்தலொன்று பாதையிலே தோன்றியது போல்,
உள்ளங்கவர்ந்த பெண்ணொருத்தி மெல்ல மெல்ல
என் சிந்தையெல்லாம் நிறைந்தது போல்,
கண்டு வந்த கனவொன்று கண் முன்னே
உண்மையென நேரில் வந்து தோன்றியது போல் ,
ஆவலோடு அலை பாய்ந்த என் கண் முன்னே
அழகான பெண்ணொருத்தி அவதரித்தாள் !
பிரியா விடை தொடரும் ....
----த.சத்தியமூர்த்தி