Saturday, 27 June 2020

thamizh annai

தமிழன்னை 

செந்தமிழர்  நாடென்று  எம்  முன்னோர்  பெயரிட்ட 
முத்தமிழ்  மாநிலத்தில்  பிறந்திட்ட  இளங்கவிஞன் 
தவழ  வைத்த  மண்  பெருமை  தரணியெங்கும்  எதிரொலிக்க 
தமிழ்  கொண்டு  தொடுக்கின்ற  கவிமாலை  
தனைக் கொண்டு  தமிழ்த்தாய்க்கு  சமர்ப்பிக்கும்  பாமாலை  இதுவாகும் 

உண்ட  பின் தான்  இனிப்பாகும்  அமுதென்ற  பொருளெல்லாம் 
வெறும்  உச்சரிப்பில்  இனிதாகும்  தமிழென்ற  அமுதே  தான்.. 
கம்பன்  முதல்  இளங்கோ வரை காவியங்கள்  பல  காண  
காரணமாய்  அமைந்த மொழி ... 

காலங்கள்  பல கடந்தும் என்றும்  இளையவளாய்  இருக்கின்ற 
கன்னித்தமிழயே  ! கனிரசமே ! கற்கண்டே !

இளங்கவிஞன்  எழுதுகின்ற  கவிக்கெல்லாம்  அடி  கொடுத்து 
சிந்தனையில்  கலந்துவிட்ட  சீர்மிகு  தமிழ்த்தாயே  ! உன்  பெருமை  யான்  பாட  பெறவில்லை  முழுவளர்ச்சி  என்றாலும்  
ஆசையிலே எழுதுகிறேன்  அம்மா  உன் துணையோடு ..     

வீரத்தின்  விளை நிலமே  நீ  வாழும்  மண்ணம்மா ..
மானத்தின்  உறைவிடமோ  உன்  மாநிலத்து  பெண்ணம்மா .. 
காதலின்  பெருமையை  சொன்னதே  உன்  கவிதையில்  தானம்மா ..

ஏடெல்லாம்  வீடெல்லாம்  மணக்கின்ற  மொழியம்மா ..
எண்ணத்தை ,  ஏக்கத்தை , வெளிப்படுத்தும்  வழியம்மா ..
உன்  பாதமலர்  பணிந்து  வணங்குகிறேன்  நானம்மா ..

என்னோடு  என்றென்றும்  கலந்துவிட்ட  தெய்வமம்மா ..
தமிழத்தாயே  ! தமிழே ! நீயே  என்  உயிரம்மா ..

------------------ த.சத்தியமூர்த்தி